இப்லீஸ் <= அல்லாஹ் => மலக்குகள்


அல்லாவும் உலகவியலும் - 70


இப்லீஸும் அல்லாஹ்வும் கூட்டுக்களவானிகளா?
7:16. (இப்லீஸ், இறைவனை நோக்கி) "நீ என்னை பங்கப்படுத்தியதால், ஆதமுடைய சந்ததிகளாகிய அவர்கள் உன்னுடைய நேரான வழியில் செல்லாது தடைசெய்ய வழி மறித்து அதில் உட்கார்ந்து கொள்வேன்" என்றும்,
7:17. "நிச்சயமாக அவர்களுக்கு முன்னும், பின்னும் அவர்களின் வலது பக்கத்திலும், இடது பக்கத்திலும் அவர்களிடம் வந்து அவர்களை வழி கெடுத்துக் கொண்டே இருப்பேன். ஆகவே, அவர்களில் பெரும்பாலானவர்களை உனக்கு நன்றி செலுத்துபவர் களாக நீ காணமாட்டாய்" என்றும் கூறினான்.

சரி... யார் இந்த இப்லீஸ்?

18:50. ஆதமுக்கு ஸுஜூது செய்யுங்கள்” என்று நாம் மலக்குகளிடத்தில் கூறியதை நபியே! நினைவு கூர்வீராக;
அப்போது இப்லீஸைத்தவிர, அவர்கள் ஸுஜூது செய்தார்கள்;
இப்லீஸ் ஜின் இனத்தைச் சேர்ந்தவனாக இருந்தான்; அவன் தன் இறைவனுடைய கட்டளையை மீறி விட்டான்;

அல்லாஹ் ஜின்களையும், மனிதனையும் தன்னை வணங்க மட்டுமே தான் படைச்சதாகதானே சொல்கிறான்!!

51:56. ஜின்களையும், மனிதர்களையும் எனக்கு வழிப்பட்டு என்னை வணங்குவதற்கன்றி வேறெதற்காகவும் நான் படைக்க வில்லை.

அதாவது..
அல்லா ஜின்னை படைச்சது தன்னை வணங்க மட்டுமே.. (51:56)
அந்த ஜின் கூட்டத்தில் ஒருத்தனான இப்லீஸ், மனிதர்களை வழிகெடுப்பேன்னு அல்லாகிட்டயே சவால் விடுறான்... (7:16,17)...
அல்லாவை வணங்க மட்டுமே... அல்லாவால் படைக்கப்பட்ட ஜின் எப்படி மனிதனை வழிகெடுக்க முடியும்??

அல்லாஹ்வை வணங்க மட்டுமே படைக்கப்பட்ட ஜின் (இப்லீஸ்) , எப்படி மனிதனை வழிகெடுக்கும் வேலையை... அடிஷனல் வேலையை தனக்கு எடுத்துக்கிட்டான்?
மனிதனை வழிகெடுக்கும் அறிவு ஜின்னுக்கு எங்கிருந்து வந்தது?
அந்த அறிவை இப்லீஸு(ஜின்)க்கு கொடுத்தது யாரு?

போகவும்...

14:4. அல்லாஹ் தான் நாடியோரை வழிதவறச் செய்கின்றான், தான் நாடியோருக்கு நேர்வழியையும் காண்பிக்கின்றான்;
என குர்ஆன் சொல்கிறது. அதாவது வழிகெடுப்பதும் தானே என அல்லாஹ் சொல்றான்...

அப்படின்னா... அல்லாஹ்வும், இப்லீஸும் ஒரே நபரா??

இன்னும் ஒரு வசனமும் இருக்கு..

7:188. நபியே! நீர் கூறும்: “அல்லாஹ் நாடினாலன்றி நான் எனக்கே யாதொரு நன்மையோ அல்லது தீமையோ செய்து கொள்ள சக்தியில்லாதவன்; மறைந்திருப்பவற்றை நான் அறிபவனாக இருந்தால் நன்மைகளை அதிகமாகத் தேடிக்கொண்டிருப்பேன்.

அல்லாஹ்வோட நாட்டம் இன்றி.. மனிதனால் தனக்குதானேகூட.. நன்மை, தீமை செய்துக்க முடியாதாமே...
பிறகெப்படி அல்லாஹ் நாடாமல்.. இப்லீஸால்... மனிதர்களை வழிகெடுக்க முடியும்?

அதாவது....
அல்லாஹ்வோட நாட்டம் இல்லாமல்.. ஆதமை இப்லீஸ் எப்படி வழிகெடுத்திருக்க முடியும்?

ஆதமையும் அவன் மனைவியையும் வழிகெடுத்தது அல்லாஹ்வா? அல்லது இப்லீஸா?..

தனக்குத்தானே நன்மையோ, தீமையோ செய்துக்க முடியாத பலவீனம், மனிதனுக்கு மட்டும்தானா? அல்லது ஜின்களுக்கும் அதே பலவீனம் உண்டா?

பலவீனம் உண்டு என்றால்.. 👇

15:28. (நபியே!) உங்களது இறைவன் மலக்குகளை நோக்கி "நிச்சயமாக நான், மனிதனை, காய்ந்தால் சப்தம் கொடுக்கக்கூடிய பிசுபிசுப்பான களிமண்ணால் படைக்கப் போகிறேன்" என்று கூறிய சமயத்தில்,
15:29. "நான் மனிதனை உருவாக்கி அதில் என் படைப்புக்கு வேண்டிய உயிரைப் புகுத்தினால் அவருக்கு மரியாதை செலுத்த நீங்கள் சிரம் பணியுங்கள்" என்று கட்டளையிட்டான்.
15:30. அவ்வாறே மலக்குகள் அனைவரும் அவருக்கு மரியாதை செலுத்த சிரம் பணிந்தார்கள்;
15:31. இப்லீஸைத் தவிர; அவன் சிரம் பணிந்தவர்களுடன் சேர்ந்து சிரம் பணியாது விலகிக் கொண்டான்.
15:32. அதற்கு உங்கள் இறைவன் இப்லீஸை நோக்கி "இப்லீஸை! சிரம் பணிந்தவர்களுடன் சேர்ந்து நீயும் சிரம் பணியாத காரணமென்ன?" என்று கேட்டான்.
15:33. அதற்கவன் "காய்ந்தால் சப்தம் கொடுக்கக்கூடிய பிசுபிசுப்பான களிமண்ணால் நீ படைத்த மனிதனுக்கு நெருப்பால் படைக்கப்பட்ட நான் சிரம் பணிவதற்கில்லை; ஏனென்றால், நான் அவரைவிட மேலானவன்" என்று கூறினான்.
15:34. அதற்கு இறைவன் "நீ இங்கிருந்து அப்புறப்பட்டுவிடு. நிச்சயமாக நீ எம் சந்நிதியிலிருந்து விரட்டப்பட்டு விட்டாய்" என்று கூறினான்.
15:35. அன்றி "விசாரணை நாள் வரும் வரையில் உன்மீது நிச்சயமாக என்னுடைய சாபமும், கோபமும் உண்டாவதாக!" என்றும் கூறினான்.

இவ்வாறு இப்லீஸ்க்கு கெடுதி நேரக் காரணம் அல்லாஹ்தானே..

இன்னும் ஒரு வசனம்...

7:12. இறைவன் இப்லீஸை நோக்கி ,
"நான் உனக்குக் கட்டளையிட்ட சமயத்தில், நீ சிரம் பணியாதிருக்கும்படி உன்னைத் தடை செய்தது எது?" என்று கேட்க, அதற்கு இப்லீஸ் "நான் அவரைவிட மேலானவன்.
ஏனென்றால், நீ என்னை நெருப்பால் படைத்தாய். அவரை களிமண்ணால் படைத்திருக் கின்றாய். களிமண்ணை விட நெருப்பு உயர்ந்தது" என்று இறுமாப்புடன் கூறினான்.
இவ்வாறு... களிமண் தாழ்ந்தது, நெருப்பு உயர்வானது என்று இப்லீஸ் சிந்திக்க காரணம் அல்லாஹ்தானே..

ஒருவேளை, இப்லீஸுக்கு தனக்குத்தானே நன்மையோ, தீமையோ செய்துகொள்ளமுடியாத பலவீனம் இல்லையென்றால்.. 👇👇

7:13. இறைவன் "இதிலிருந்து நீ இறங்கிவிடு! நீ பெருமை கொள்வதற்கு இங்கு இடமில்லை. உன் பெருமையின் காரணமாக நிச்சயமாக நீ சிறுமைப்பட்டவனாகி விட்டாய். ஆதலால் இதிலிருந்து நீ வெளியேறிவிடு" என்று கூறினான்.
7:14. அதற்கு இப்லீஸாகிய அவன் "இறந்தவர்களை எழுப்பும் நாள் வரையில் எனக்கு அவகாசம் அளி" என்று கேட்டான்.
7:15. அதற்கு இறைவன் "நிச்சயமாக நீ அவ்வாறே அவகாசம் அளிக்கப்பட்டிருக்கின்றாய்" என்று கூறினான்.
மனிதர்கள் போல அல்லாது, ஜின்களால்.. தனக்குத்தானே நன்மையோ, தீமையோ பண்ணிக்க முடியும்னா.. இப்லீஸ் நன்மையை தேர்ந்தெடுக்காமல்..  தீமையை தேர்ந்தெடுத்தது எப்படி?
தன் வாக்குறுதியில் இப்லீஸ் திட்டவட்டமாக இருக்கிறான்..
38:82. அப்பொழுது: “உன் கண்ணியத்தின் மீது சத்தியமாக, நிச்சயமாக நான் அவர்கள் யாவரையும் வழிகெடுப்பேன்” என்று இப்லீஸ் கூறினான்.
38:83. "எனினும், பரிசுத்த மனதுடைய உன் அடியார்களைத் தவிர" என்றான்.

அல்லாஹ்வுக்கு , அல்லாஹ்வால் படைக்கப்பட்ட ஜின் (இப்லீஸ்) ஆஃபர் தர்றான்... இவ்வளவுதான்.. அல்லாஹ்வோட "டக்கா"?

சரி... அல்லாஹ் படைத்த மனிதனின் நிலை?
இதோ.. 👇👇👇

7:18. இறைவன் "நீ நிந்திக்கப்பட்டவனாகவும் விரட்டப்பட்டவனாகவும் இதிலிருந்து வெளியேறிவிடு. நிச்சயமாக உன்னையும் எவர்கள் உன்னைப் பின்பற்றினார்களோ அவர்களையும் சேர்த்து உங்கள் அனைவரையும் கொண்டு நரகத்தை நிரப்புவேன்" என்று கூறினான்.
7:19. பின்னர், இறைவன் ஆதமை நோக்கி "ஆதமே! நீங்கள் உங்களுடைய மனைவியுடன் இச்சோலையில் வசித்திருங்கள். நீங்கள் இருவரும் விரும்பிய இடத்திலெல்லாம் சென்று விரும்பியவற்றையெல்லாம் புசியுங்கள். எனினும், இந்த மரத்தின் சமீபத்தில் கூட நீங்கள் செல்லாதீர்கள். அவ்வாறு சென்றால் அதனால் உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொண்டவர்களாக ஆகிவிடுவீர்கள்" என்று கூறினான்.
என்னது மனிதன் தனக்குத்தானே தீங்கிழைத்துக்கொள்ள முடியுமா?? அப்படின்னா 7:188 வசனம்?? அது வெறும் கப்சாவா!!😂🤔

சரி... ஆதமுக்கு சிரம் தாழ்த்திய மலக்குள் நிலையை பார்ப்போம்...

2:30. நபியே! உங்களது இறைவன் மலக்குகளை நோக்கி "நான் பூமியில் என்னுடைய பிரதிநிதியை ஆதமை நிச்சயமாக ஏற்படுத்தப் போகிறேன்" எனக் கூறிய சமயத்தில்....
அதற்கு அவர்கள்....
"பூமியில் விஷமம் செய்து இரத்தம் சிந்தக்கூடிய சந்ததிகளைப் பெறும் அவரை அதில் உன்னுடைய பிரதிநிதியாக ஆக்குகிறாயா? நாங்களோ உன்னுடைய பரிசுத்தத் தன்மையைக் கூறி உன்னுடைய புகழைக் கொண்டு உன்னை புகழ்ந்து கொண்டிருக்கிறோம்" என்று கூறினார்கள்.
அதற்கவன் "நீங்கள் அறியாதவற்றை எல்லாம் நிச்சயமாக நான் நன்கறிவேன்" எனக் கூறிவிட்டான்.

அல்லாஹ் எதனை படைக்கப்போறான்னு மலக்குகளுக்கு முன்பே தெரிஞ்சிருக்கு... அரே அல்லா என்ன இதெல்லாம்?? 😂😂

2:31. பின்பு ஆதமைப் படைத்து ஆதமுக்கு எல்லாப் பொருள்களின் பெயர்களையும் அவற்றின் தன்மைகளையும் கற்றுக் கொடுத்து, அவைகளை அந்த மலக்குகளுக்கு முன்பாக்கி "மலக்குகளே! ஆதமுக்கு என்னுடைய பிரதிநிதி ஆவதற்குரிய தகுதியில்லை என்று கூறினீர்களே! இதில் நீங்கள் உண்மை யானவர்களாக இருந்தால் இதோ உங்கள் முன்னிருக்கும் இவற்றின் பெயர்களை எனக்கு அறிவியுங்கள்" எனக் கூறினான்.
2:32. அவ்வாறு அறிவிக்க முடியாமல் அவர்கள் இறைவனை நோக்கி "நீ மிகத் தூய்மையானவன். நீ எங்களுக்கு அறிவித்தவற்றைத் தவிர வேறொன்றையும் நாங்கள் அறிய மாட்டோம். நிச்சயமாக நீ மிக்க அறிந்தவனும், ஞானம் உடையவனாகவும் இருக்கின்றாய்" எனக் கூறினார்கள்.
2:33. "ஆதமே! நீங்கள் அவற்றின் பெயர்களை அவர்களுக்கு அறிவியுங்கள்" எனக் கூறினான். அவர் அவர்களுக்கு அவற்றின் பெயர்களை அறிவித்தபொழுது அவன் மலக்குகளை நோக்கி "பூமியிலும் வானங்களிலும் உங்களுக்கு மறைவானவைகளை நிச்சயமாக நான் நன்கறிபவன் என்று நான் உங்களுக்குக் கூறவில்லையா? ஆகவே, நீங்கள் ஆதமை பற்றி வெளியிட்டதையும், மறைத்துக் கொண்டதையும் நிச்சயமாக நான் நன்கு அறிவேன்" என்றான்.

இதிலென்ன பெருமை வேண்டியிருக்கு??

அல்லாஹ் எதை படைக்கப்போறான்னு மலக்குகளுக்கு தெரிஞ்சிருக்கும்போது.. மலக்குகள் நினைத்தை அல்லாஹ் சொல்வது பெருமையாயென்ன??

சரி.. இதெல்லாம் அல்லாஹ், மலக்குகள், இப்லீஸ், ஆதம்னு... மேல்மட்ட விவகாரம்... இதை அறிவிச்ச நம்ம... ஆமீனா மகன் முகம்மது பற்றி... முகம்மது கூடவே சுத்தின சஹாபாக்களின் கருத்து என்ன!?

இதோ.. 👇👇👇👇
7:184. அவர்கள் சிந்திக்கவில்லையா?
" நம் தூதராகிய அவர்களுடைய தோழருக்கு எவ்வித பைத்தியமுமில்லை ".
அவர் பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவரேயன்றி வேறில்லை.

முகம்மது கூடவே சுத்தின நபித்தோழர்களே.. முகம்மதுவை பைத்தியம்னுதான் நினைச்சிருக்காங்க...

அது சரி... இப்படிலாம்.. வஹீ எறக்கினால்.. பைத்தியம்னு நினைக்காமல்... வேறென்ன செய்வது??

முஹம்மது <= பவிஷ்ய புராணம்

As per  Bhavishya Purana   (Parva 3, Khand 3, Adhya 3, verses 5-6) that "An illiterate   mleccha   [foreigner] teacher will appear, Mah...