அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு

அல்லாவும்  உலகவியலும் -26.

அல்லாவுக்கு உருவம் உண்டு. ஏகப்பட்ட வடிவத்துல உண்டு..

அல்லாவுக்கும் கை,கால்,முகம்,மூக்கு,கண்,காது,முட்டி என்று எல்லாம் இருக்கிறது..என்ன ஒரு வித்தியாசம்,மனிதனைப் போல் இருக்காதாம்..ஆனால்,அவருக்கும் இந்த உறுப்பெல்லாம் இருக்குமாம்... குரான் ஹதீஸ் ஆதாரத்தைப் பார்ப்போம் :

1) அல்லாவின் பாதம் :

bukhari, Volume 6, Book 60, Number 371: Narrated Anas:

The Prophet said, "The people will be thrown into the (Hell) Fire and it will say: "Are there any more (to come)?' (50.30) till Allah puts His Foot over it and it will say, 'Qati! Qati! (Enough Enough!)' "

2) அல்லாவின் காதுகளும் கண்களும் :

(He is) the Creator of the heavens and the earth: He has made for you pairs from among yourselves, and pairs among cattle: by this means does He multiply you: there is nothing whatever like unto Him, and He is the One that hears and sees (all things). [kuran 42: 11]

Allah is not deaf or absent; the treasure of Paradise is reciting ‘there is no might and no power but that of Allah’(Sahih Muslim, 6528)

3)அல்லாவின் கைகள் :

Bukhari,Volume 6, Book 60, Number 336: Narrated Abu Huraira:

I heard Allah's Apostle saying, "Allah will hold the whole earth, and roll all the heavens up in His Right Hand, and then He will say, 'I am the King; where are the kings of the earth?"'

They have not appraised Allah with true appraisal, while the earth entirely will be [within] His grip on the Day of Resurrection, and the heavens will be folded in His right hand. Exalted is He and high above what they associate with Him. (kuran 39:67)

[ Allah ] said, "O Iblees, what prevented you from prostrating to that which I created with My hands? Were you arrogant [then], or were you [already] among the haughty?" (kuran 38:75)

4) அல்லாவின் முகம் :

And do not invoke with Allah another deity. There is no deity except Him. Everything will be destroyed except His Face. His is the judgement, and to Him you will be returned. (kuran 28:88)

5) அல்லாவின் கால் :

The Day the shin will be uncovered and they are invited to prostration but the disbelievers will not be able, (68:42)

இதன் மூலம் அல்லாவுக்கு கை,கால்,கண்,காது எல்லாம் உண்டு என்று தெரிகிறது...இந்த ஆதாரத்தைப் பார்த்த முஸ்லிம்கள்,தப்பித்துக்கொள்வதற்கு,நம்மிடம் கூறும் பதில் ,நம் உறுப்பும் அல்லாவின் உறுப்பும் ஒரே மாதிரியாக இருக்காதாம்....ஆனால்,முதல் மனிதன் என்று இஸ்லாமியர்களால் சொல்லப்படும் ஆதாம்,அல்லாவின் உருவத்திலிருந்து உருவாக்கப்பட்டான் என்று இவர்கள் ஹதீஸே சொல்கிறது..ஆதாரம் :

Sahih Muslim 6325

This hadith has been transmitted on the authority of Abu Huraira and in the hadith transmitted on the authority of Ibn Hatim Allah's Apostle (may peace be upon him) is reported to have said: When any one of you fights with his brother, he should avoid his face for Allah created Adam in His own image.

ஆதாமுக்கு நிச்சயம் ஒரு குறிப்பிட்ட உருவம் தான் இருந்திருக்கும்...அப்படியெனில்,அல்லாவுக்கும் ஆதாமின் உருவம் தானே இருந்திருக்கும் ?? ஏனெனில்,அல்லாவின் சுய உருவிலிருந்து ஆதாம் உருவாக்கப்பட்டானாம்....ஆதாமின் மூலம்,இந்த மனித இனம் உருவானது என்றால்,அப்போ மனிதன் உருவத்துக்கும் அல்லாவின் உருவத்துக்கும் என்ன வித்தியாசம் இருக்க முடியும் ??

நிச்சியமாக அல்லாஹ்வுக்கென்று ஒரு தனித் தோற்றம் அல்குர்ஆனிலிருந்தே நாம் ஏராளமான சான்றுகளைக் காட்டலாம்.
திருமுகம் கொண்ட திருவாளன் அவன்
இதில் உள்ள அனைவரும் அழிபவர்கள். மகத்துவமும், கண்ணியமும் மிக்க உமது இறைவனின் முகமே மிஞ்சும். (அல்குர்ஆன் 55:27,28)

இந்த வசனத்தின் அடிப்படையில் அல்லாஹ்வுக்கென்று ஒரு முகம் உள்ளது என்hதை அறிந்தோம். இது மட்டுமன்றி வேறு பல வசனங்களிலும் ஹதீஸ்களிலும் ஏராளமான சான்றுகள் உள்ளன. 

அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
நபி (ஸல்) அவர்கள் மக்களிடையே எழுந்து நின்று, அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்ப புகழ்ந்தார்கள். பிறகு தஜ்ஜாலை நினைவு கூர்ற்து சொன்னார்கள்.
நான் அவனைக் குறித்து உங்களை எச்சரிக்கின்றேன். எந்த இறைத் தூதரும் அவனைக் குறித்து தன் சமுதாயத்தாரை எச்சரிக்காமல் இருந்ததில்லை. நூஹ் (அலை) அவர்கள் தம் சமுதாயத்தினரை அவனைக் குறித்து எச்சரித்தார்கள். ஆயினும், நான் அவனைப் பற்றி வேறெந்த இறைத் தூதரும் தன் சமுதாயத்திற்குச் சொல்லாத ஒரு விபரத்தை உங்களுக்குச் சொல்கிறேன். அவன் ஒற்றைக் கண்ணன் என்பதையும், அல்லாஹ் ஒற்றைக் கண்ணன் அல்லன் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி)
நூல்: புகாரி 3057
(மேலும் பார்க்க: புகாரி 3337, 3440, 4403, 6173, 7127, 7131, 7407 மற்றும் முஸ்லிம் 247)

இந்த ஹதீஸ்களில் அல்லாஹ்வுக்கு இரண்டு கண்கள் இருப்பதை எடுத்துரைக்கின்றன.
தனது கணவர் பற்றி உம்மிடம் தர்க்கம் செய்து அல்லாஹ்விடம் முறையிட்டவளின் சொல்லை அல்லாஹ் செவியுற்றான். உங்களிருவரின் வாதத்தை அல்லாஹ் செவியுறுகிறான். அல்லாஹ் செவியுறுபவன்ளூ பார்ப்பவன். (அல்குர்ஆன் 58:01)
(மேலும் பார்க்க: 43:80, 2:127, 2:137, 3:35)
இந்த வசனங்களில் அல்லாஹ் தன்னை செவிப்புலன் உள்ளவன் என்பதை விளக்குகின்றான்.
(முஹம்மதே!) இதற்கு முன் சில தூதர்களின் வரலாற்றை உமக்குக் கூறியுள்ளோம். சில தூதர்களின் வரலாற்றை நாம் உமக்குக் கூறவில்லை. அல்லாஹ் மூஸாவுடன் உண்மையாகவே பேசினான். (அல்குர்ஆன் 4:164)
இந்த வசனத்தில், தான் மூஸா (அலை) அவர்களிடம் பேசியதாகக் குறிப்பிடுகின்றான். இதன் மூலம் அவன் 'பேசுபவன்' என்று சொல்கின்றான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் இரண்டு மனிதர்களைப் பார்த்து சிரிக்கின்றான். அவ்விருவரில் ஒருவர் மற்றொருவரைக் கொன்று விட்டார். இருவருமே சுவர்க்கத்தில் நுழைகின்றார்கள். இவர் அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்படுகின்றார். பிறகு கொன்றவர் பாவ மன்னிப்பு கோர அதை அல்லாஹ் மன்னித்து விடுகின்றான். பிறகு அவரும் அறப்போரில் உயிர் தியாகியாகி விடுகின்றார்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி)
நூல்: புகாரி 2826
(மேலும் பார்க்க: புகாரி 806, 7438 மற்றும் முஸ்லிம் 278)
இந்த ஹதீஸ்களில் ரப்புல் ஆலமீனின் சிரிப்பை வருணனை செய்கின்றன.

பார்வை, செவியுறுதல், பேசுதல், சிரித்தல் ஆகிய பண்புகளையும் அவற்றைத் தாங்கி நிற்கும் அவனது திருமுகத்தைக் கூறுகின்ற வசங்களையும் ஹதீஸ்களையும் இது வரை கண்டோம்.
அல்லஹ்வின் மற்ற உறுப்புகள் பற்றி இடம் பெற்றுள்ள ஆதாரங்களைப் பார்ப்போம்.

'அல்லாஹ்வின் கை கட்டப்பட்டுள்ளது' என்று யூதர்கள் கூறுகின்றனர். அவர்களின் கைகயே கட்டப்பட்டுள்ளன. அவர்களது இக்கூற்றின் காரணமாக அவர்கள் சபிக்கப்பட்டனர். மாறாக அவனது இரு கைகளும் விரிக்கப்பட்டே உள்ளன. அவன் நாடியவாறு வழங்குவான். (அல்குர்ஆன் 5:64)
மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ்வின் கைகள் என்பது தாராளத்தன்மைக்காக கூறப்பட்டாலும் பின்வரும் வசனத்தில் தனக்கு இரண்டு கைகள் இருப்பதாக அல்லாஹ் கூறுகின்றான்.

'எனது இரு கைகளால் நான் படைத்ததற்கு நீ பணிவதை விட்டும் எது உன்னைத் தடுத்தது? அகந்தை கொண்டு விட்டாயா? அல்லது உயர்ந்தவனாக ஆகி விட்டாயா?' என்று (இறைவன்) கேட்டான். (அல்குர்ஆன் 38:75)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(நரகவாசிகள்) நரகத்தில் போடப்படுவார்கள். நரகம், 'இன்னும் அதிகம் இருக்கின்றதா?' என்று கேட்கும். இறுதியில் அல்லாஹ் தனது பாதத்தை (அதில்) வைப்பான். அப்போது அது, 'போதும், போதும்' என்று கூறும்.
அறிவிப்பவர்: அனஸ் (ரழி)
நூல்: புகாரி 4848-4849, முஸ்லிம் 5084.
படைத்த இறைவனின் பாதங்களைப் பற்றி மேற்கண்ட ஹதீஸ்கள் கூறுகின்றன. எல்லாம் வல்ல அல்லாஹ்வும் தனக்குப் பாதங்கள் இருப்பதாகப் பறை சாற்றுகின்றான்.
கெண்டைக் கால் திறக்கப்பட்டு ஸஜ்தா செய்ய அழைக்கப்படும் நாளில் அவர்களுக்கு அது இயலாது. (அல்குர்ஆன் 67:42)

தன்னிகரற்ற தனி நாயன்
சந்தேகத்திற்கு இடமில்லாமல் மேலே நாம் எடுத்துக் காட்டிய இந்த ஆதாரங்கள், அகில உலகத்தைப் படைத்து, பாதுகாத்து, இரட்சிக்கும் அவனுக்கென்று ஒரு தோற்றம் - ஓர் உருவம் உள்ளது என்று பிரகடணப்படுத்துகின்றன.
ஆனால், அவனது அந்தத் தோற்றத்திற்கு - அவனது தனித் தன்மைக்கு ஈடு இணை கிடையாதுளூ ஒப்புவமை இல்லை.
அவனைப் போல் எதுவும் இல்லை. (அல்குர்ஆன் 42:01)
எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கு யாரும் ஒப்பாக மாட்டார். எதுவும் ஒப்பாகாது. அவனுக்கு ஈடு இணை இல்லை என்று இந்த வசனத்தில் உறுதி கூறுகின்றான்.
இதே கருத்தை திருக்குர்ஆனின் 112வது அத்தியாயம் மிகத் துல்லியமாக விளக்கிக் காட்டுகின்றது.
'அல்லாஹ் ஒருவன்' என (முஹம்மதே!) கூறுவீராக! அல்லாஹ் தேவையற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. (அல்குர்ஆன் 112:1-4)

எனவே இதுவரை கண்ட ஆதாரங்களிலிருந்து அல்லாஹ்வுக்கென்று தன்னிகரற்ற, ஒப்புவமை இல்லாத, ஈடு இணையற்ற ஒரு தனித்தன்மை கொண்ட தோற்றம் இருக்கின்றது என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம். மேலும், அல்லாஹ்வுக்கு முகம், கண்கள், கைகள், கால்கள் இருக்கின்றன என்று வரும் வார்த்தைகளுக்கு அதற்குரிய நேரடிப் பொருளைத்தான் கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுக்க வழியில்லாத பட்சத்தில்தான் மாற்றுப் பொருள் கொடுக்க வேண்டும்.

அல்லாஹ்வுக்கு கண்களா? அவனுக்கு கை, கால்களா? நமக்கு இருக்கும் உறுப்புக்களை அல்லாஹ்வுக்கு இருப்பதாக எப்படிச் சொல்லலாம்? என்று கற்பனை செய்து கொண்டு இவற்றுக்கு வேறு பொருள் கொடுக்க மாட்டோம்.

அதாவது கண் என்றால் கண்காணிப்பு , கை, கால்கள் என்றால் அவனது ஆற்றல்கள் என்று மாற்றுப் பொருள்கள், வேறுபட்ட அர்த்தங்கள் கூற மாட்டோம். அதற்குரிய நேரடியான, உள்ளது உள்ளபடியான அர்த்தத்தைத்தான் கொடுப்போம். கண் என்றால் கண்தான், கை என்றால் கைதான்.
இப்படி ஒரு விளக்கத்தை இங்கு நாம் குறிப்பிடக் காரணம், அல்லாஹ்வின் பண்புகளில், தன்மைகளில் அறிவு ரீதியிலான விளக்கம் கொடுப்பவர்கள் இவர்கள் என்று நம்மை நோக்கி வஞ்சக எண்ணத்தோடு, குரூர சிந்தனையோடு குறிப்பிட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

இதில் வேடிக்கை என்னவெனில், நம்முடன் இருக்கும் போது கருத்துக்கு எதிராக நாவுயர்த்திப் பேசவில்லை. எதிர்க் கருத்தை நம்மிடம் நேரடியாகக் கூறவில்லை. மாறாக பாராட்டிக் கொண்டிருந்தார்கள். இயக்க ரீதியான பந்தம் அறுந்தவுடன் இந்தக் குற்றச்சாட்டை நம் மீது எறிகின்றார்கள்.
அல்லாஹ் அர்ஷின் மீதா? அல்லது ஆகாயத்திலா?
உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வே வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான். (அல்குர்ஆன் 7:54)

இந்த வசனங்களிலும் 10:03, 13:02, 25:59, 32:04, 57:04 ஆகிய வசனங்களிலும் அல்லாஹ் அர்ஷின் மீது அமர்ந்திருக்கின்றான் என்று ஆணித் தரமாக அடித்துச் சொல்கின்றன.

மறுமையில் நாம் அல்லாஹ்வைப் பார்ப்போம் என்று திருக்குர்ஆன் 2:46, 2:223, 2:249, 3:77, 6:31, 6:154, 10:7, 10:11, 10:15, 10:45, 11:29, 13:2, 18:105, 18:110, 29:5, 29:23, 30:8, 32:10, 33:44, 41:54, 75:23, ஆகிய வசனங்கள் கூறுகின்றன.

மறுமையில் இறைவனைக் காண முடியும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கூறியுள்ளனர். (பார்க்க : புகாரீ 554, 573, 806, 4581, 4851, 6574,7434, 7435, 7436, 7438, 7440)

மறுமையில் இறைவனைக் காண முடியும் என்பது இறைவனுக்கு உருவம் உண்டு என்பதற்கான சான்றாகும். உருவம் என்று ஒன்று இருந்தால் தான் கண்களால் அதைப் பார்க்க முடியும்.

இறைவன் அர்ஷ் எனும் சிம்மாசனத்தில் வீற்றிருக்கிறான் என்று 7:54, 10:3, 13:2, 20:5, 25:59, 32:4, 57:4 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.

அல்லாஹ், அர்ஷ் எனும் சிம்மாசனத்துக்குச் சொந்தக்காரன் என்று 9:129, 11:7, 17:42, 21:22, 22:86, 22:116, 27:26, 40:15, 43:82, 81:20, 85:15 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.

சிம்மாசனத்தில் வீற்றிருப்பது என்பதும் இறைவனுக்கு உருவம் உள்ளது என்பதற்கான சான்றாகும். உருவமே இல்லாவிட்டால் சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் பேச்சுக்கு இடமில்லை.

சிம்மாசனம் என்றால் அது அவனது அதிகாரத்தைக் குறிக்கும் சொல்லாகும். அதற்கு நேரடிப் பொருள் கொள்ளக் கூடாது என்று சிலர் கூறுவது தவறாகும்.

ஏனெனில் 39:75, 40:7, 69:17 ஆகிய வசனங்களில் அர்ஷைச் சுமக்கும் வானவர்கள் உள்ளனர் என்றும், அர்ஷைச் சுற்றியுள்ள வானவர்கள் இறைவனைப் புகழ்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. வானவர்களால் சுமக்கப்படும் பொருளாகவே அர்ஷ் உள்ளது என்பதையும், அதிகாரத்தைக் குறிக்க அர்ஷ் எனும் சொல் இவ்வசனங்களில் பயன்படுத்தப்படவில்லை என்பதையும் இதிலிருந்து அறியலாம்.

மறுமையில் மக்களை விசாரிக்க வானவர்கள் புடைசூழ இறைவன் வருவான் என்று 89:22 வசனம் கூறுகிறது.

மறுமையில் இறைவனின் காலில் முஸ்லிம்கள் விழுந்து பணிவார்கள் என்று 68:42 வசனமும், புகாரீ 4919வது ஹதீஸும் கூறுகின்றன.

(நரகவாசிகள்) நரகத்தில் போடப்படுவார்கள். நரகம், இன்னும் அதிகம் இருக்கின்றதா? என்று கேட்கும். இறுதியில் அல்லாஹ் தனது பாதத்தை (அதில்) வைப்பான். அப்போது அது, போதும், போதும் என்று கூறும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக புகாரீ 4848, 4849 ஆகிய ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது.

அல்லாஹ்வுக்குக் கால்கள் உள்ளதாக இதில் இருந்து தெரிகின்றது.

மறுமையில் தீர்ப்பளிக்கப்பட்ட பின் ஒவ்வொருவரும் யாரை வணங்கினீர்களோ அவர்களுடன் செல்லுங்கள் என்று உத்தரவிடப்படும். அவர்களுடன் சென்று நரகத்தில் விழுவார்கள். அல்லாஹ்வை மட்டும் வணங்கிய மக்கள் மட்டும் தாங்கள் வணங்கிய அல்லாஹ்வை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு இருக்கும்போது அவர்களிடம் இறைவன் வருவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய செய்தி புகாரீ 806, 7440 வது ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது.

மறுமையில் அல்லாஹ் சிலரைத் தனக்கு நெருக்கமாக அழைத்து இரகசியமாக உரையாடுவான். அவர் செய்த ஒவ்வொரு பாவத்தையும் சுட்டிக்காட்டி இதைச் செய்தாயா என்று கேட்பான். அவர்கள் ஆம் என்பார்கள். இப்படி எல்லா பாவத்தையும் அவர்கள் ஒப்புக் கொண்டபின் உலகில் உனது பாவங்களை நான் மறைத்தது போல் இங்கும் மறைத்து மன்னித்து விட்டேன் என இறைவன் கூறுவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். (பார்க்க : புகாரீ 4685)

அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு என்பதற்கு இதுவும் சான்றாகும்.

உலகம் அழிக்கப்படும்போது வானமும், பூமியும் அல்லாஹ்வின் கைப்பிடிக்குள் அடங்கும் என்று 39:67 வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவன் தன் கைப்பிடிக்குள் எப்படி அடக்குவான் என்று சைகை மூலம் விளக்கியுள்ளதாக முஸ்லிம் 5371, 5372வது ஹதீஸ்களில் சொல்லப்பட்டுள்ளது.

தவ்ராத் வேதத்தைத் தன் கைப்பட எழுதி மூஸா நபிக்கு அல்லாஹ் கொடுத்தான் என்று புகாரீ 6614வது ஹதீஸில் சொல்லப்பட்டுள்ளது.

கியாமத் நாளில் பூமி அல்லாஹ்வின் கையில் ஒரு ரொட்டியைப் போல் அடங்கிவிடும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர் என்று புகாரீ 6520வது ஹதீஸில் சொல்லப்பட்டுள்ளது.

மூமின்கள் அல்லாஹ்வின் வலது கைப்புறத்தில் இருப்பார்கள் என்று முஸ்லிம் 3731வது ஹதீஸில் சொல்லப்பட்டுள்ளது.

முதல் மனிதர் ஆதமை தன் இருகைகளால் படைத்ததாக 38:75 வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.

அல்லாஹ் (முதல் மனிதர்) ஆதமை தன்னுடைய உருவத்தில் படைத்தான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),

நூல் புகாரீ 6227

அல்லாஹ்வுக்கு உருவம் இல்லாவிட்டால் தன் சாயலில் ஆதமைப் படைத்தான் என்று சொல்ல முடியாது. உருவமற்றவைகளுக்கு எந்த சாயலும் கிடையாது.

இது போல் ஏராளமான சான்றுகள் இறைவனுக்கு இரு கைகள் உள்ளதாகக் கூறுகின்றன.

தஜ்ஜால் என்பவன் தன்னை இறைவன் என்று கூறுவான். ஆனால் அவனது ஒரு கண் ஊனமாக இருக்கும். அவன் கூறுவதை நம்பாதீர்கள். உங்கள் இறைவன் கண் ஊனமானவன் அல்ல என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். (பார்க்க : புகாரீ 3057, 3337, 3440, 4403, 6173, 7127, 7131, 7407)

இறைவனுக்கு கண்கள் உள்ளன என்பதை இதிலிருந்து அறியலாம்.

அல்லாஹ் மறுமையில் சிரிப்பான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக புகாரீ 7437, 3798, 6573 ஆகிய ஹதீஸ்கள் கூறுகின்றன.

அல்லாஹ் மூஸா நபியிடம் உரையாடியதாக 2:253, 4;164, 7;143, 7:144 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.

அல்லாஹ்வுக்கு வாய் உள்ளது என்பதற்கு இவை சான்றுகளாக உள்ளன.

இறைவன் கேட்பவன், பார்ப்பவன் என்று ஏராளமான வசனங்கள் கூறுகின்றன.

இவை அனைத்தும் இறைவனுக்குச் செவியும், கண்களும் உள்ளன என்பதற்கான சான்றுகளாக உள்ளன.

அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு என நேரடியாக சொல்லும் ஹதீஸ்களும் இருக்கின்றன..

புஹாரி:-
6573 , 7437 :- அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
மக்களில் சிலர் 'இறைத்தூதர் அவர்களே! மறுமையில் நாங்கள் எங்கள் இறைவனைக் காண்போமா?' என்று (நபி(ஸல்) அவர்களிடம்) கேட்டார்கள். .... ....
இறுதியில் இந்தச் சமுதாயத்தார் மட்டும் எஞ்சியருப்பார்கள். அவர்களிடையே 'பரிந்துரைப்போர்' அல்லது 'நயவஞ்சகர்கள்' இருப்பார்கள். அப்போது அல்லாஹ் அவர்களிடம் (அவர்கள் அறிந்திராத அவர்களிடம் (அவர்கள் அறிந்திராத தோற்றத்தில்) வந்து, 'நானே உங்களுடைய இறைவன்' என்று கூறுவான். அதற்கு அவர்கள், 'எங்கள் இறைவன் எங்களிடம் வரும் வரை நாங்கள் இங்கேயே இருப்போம் நீ எங்கள் இறைவன் அல்லன்). அவன் எங்களிடம் வந்தால் அவனை நாங்கள் அறிந்துகொள்வோம்' என்று கூறுவர்.
அப்போது அல்லாஹ் அவர்களிடம் அவர்கள் அறிந்து கொள்ளும் தோற்றத்தில் வந்து, 'நானே உங்களுடைய இறைவன்' என்று சொல்வான். அப்போது அவர்கள், 'நீதான் எங்கள் இறைவன்' என்று கூறியபடி அவனைப் பின்தொடர்வார்கள். ...... ......

7439:- 
இறுதியில் அல்லாஹ்வை வணங்கிக் (கொண்டு நன்மைகளும் புரிந்து) கொண்டிருந்த நல்லோர், அல்லது (அல்லாஹ்வையும் வணங்கிக் கொண்டு பாவங்களும் புரிந்து வந்த) தீயோர் மட்டும் எஞ்சியிருப்பர். அவர்களிடம் 'மக்கள் (அனைவரும் தத்தம் தெய்வங்களுக்குப் பின்னால்) சென்றார்களே! நீங்கள் மட்டும் ஏன் இங்கேயே இருந்துகொண்டிருக்கிறீர்கள்?' என்று கேட்கப்படும். அதற்கு அவர்கள், '(உலகத்தில்) நாங்கள் (வாழ்க்கையின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக) இந்த மக்களிடம் அதிக அளவில் தேவையுள்ளவர்களாக இருந்தும் (அவர்களுடன் ஒட்டி உறவாடிக் கொண்டிராமல்) அவர்களைப் பிரிந்திருந்தோம். (இப்போது மட்டும் அவர்கள் பின்னால் நாங்கள் செல்வோமா?) இங்கு ஓர் அழைப்பாளர்' 'ஒவ்வொரு சமுதாயத்தாரும் (உலக வாழ்வில்) தாம் வணங்கிக் கொண்டிருந்த அவர்களுடன் சேர்ந்துகொள்ளட்டும் என்று அழைக்கக் கேட்டோம். நாங்கள் (வணங்கிக் கொண்டிருந்த) எங்கள் இறைவனையே நாங்கள் (இத்தருணத்தில்) எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்' என்று கூறுவார்கள். அப்போது சர்வ வல்லமை படைத்தவ(னான இறைவ)ன், அவனைப் பற்றி அவர்கள் எண்ணி வைத்திருந்த தோற்றம் அல்லாத வேறொரு தோற்றத்தில் அவர்களிடம் முதல் முறையாக வந்து, 'நானே உங்கள் இறைநம்பிக்கையாளர்கள், 'நீயே எங்கள் இறைவன்' என்று சொல்வார்கள். அப்போது இறைவனிடம் இறைத்தூதர்களைத் தவிர வேறெவரும் பேச மாட்டார்கள். அப்போது, 'அவனை இனங்கண்டுகொள்ள உங்களுக்கும் அவனுக்குமிடையே ஏதேனும் அடையாளம் உண்டா?' என்று (ஒருவர்) கேட்பார். அதற்கு இறை நம்பிக்கையாளர்கள், '(இறைவனி) கால் (பாதம்) தான்' என்று கூறுவார்கள். உடனே அல்லாஹ் தன்னுடைய காலை வெளிப்படுத்துவான். இறைநம்பிக்கையாளர்கள் யாவரும் அவனுக்கு சிர வணக்கம் (சஜ்தா) செய்வார்கள். முகஸ்துதிக்காகவும் பாராட்டுக்காகவும் அல்லாஹ்வுக்கு சிரம் பணிந்து (தொழுது) கொண்டிருந்தவர்கள் மட்டுமே அப்போது எஞ்சியிருப்பார்கள்; அவர்கள் சிரவணக்கம் செய்ய முற்படுவார்கள். ஆனால், அவர்களின் முதுகு (குனிய முடியாதவாறு) ஒரே பலகையைப் போன்று மாறிவிடும். (அவர்களால் சிரம் வணக்கம் செய்ய முடியாது.)

்......்

முஸ்லிம் :- 299
இறுதியில் இந்தச் சமுதாயத்தார் மட்டும் எஞ்சியிருப்பார்கள். அவர்களிடையே நயவஞ்சகர்களும் இருப்பார்கள்.
அப்போது இறைவன்  அவர்களிடம், அவர்கள் அறிந்திராத ஒரு தோற்றத்தில் வந்து, "நான் உங்கள் இறைவன்" என்பான். உடனே அவர்கள், "உன்னிடமிருந்து அல்லாஹ்விடம் நாங்கள் பாதுகாப்புக் கோருகிறோம். எங்கள் இறைவன் எங்களிடம் வரும்வரை நாங்கள் இங்கேயே இருப்போம். எங்கள் இறைவன் எங்களிடம் வந்தால் அவனை நாங்கள் அறிந்துகொள்வோம்" என்பர். அப்போது அவர்கள் அறிந்துகொள்ளும் தோற்றத்தில் அவர்களிடம் இறைவன் வந்து, "நான் உங்கள் இறைவன்" என்பான். அதற்கு அவர்கள், "நீயே எங்கள் இறைவன்" என்று கூறியவாறு அவனைப் பின் தொடர்ந்து செல்வார்கள். அங்கு நரகத்திற்கு மேலே பாலம் அமைக்கப்படும். நானும் என் சமுதாயத்தாருமே (அந்தப் பாலத்தைக்) கடப்பவர்களில் முதல் ஆளாக இருப்போம். அன்று இறைத்தூதர்களைத் தவிர வேறெவரும் பேசமாட்டார்கள். அந்தச் சூழ்நிலையில் இறைத் தூதர்கள் அனைவரின் பிரார்த்தனையும் "அல்லாஹ்வே! காப்பாற்று; காப்பாற்று" என்பதாகவே இருக்கும்.

302 :- 
இறுதியில் அல்லாஹ்வை வழிபட்டு(க்கொண்டு நன்மைகளும் புரிந்து)வந்த நல்லோர் மற்றும் (அல்லாஹ்வையும் வழிபட்டுக்கொண்டு பாவங்களும் புரிந்துவந்த) தீயோர் மட்டும் எஞ்சியிருப்பர். அவர்களிடம் அகிலத்தாரின் இரட்சகன் வருவான். (அவனுடைய தன்மைகளை முன்பே அறிந்திருந்ததன் மூலம் தம் உள்ளத்தில்) அவனைப் பற்றி அவர்கள் எண்ணி வைத்திருந்த தோற்றங்களில் (அடையாளம் கண்டுகொள்வதற்கு) மிக நெருக்கமானதொரு தோற்றத்தில் (அவன் வருவான்). அப்போது "நீங்கள் எதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்? ஒவ்வொரு சமுதாயத்தாரும் (உலகில்) தாம் வழிபட்டுக் கொண்டிருந்தவற்றைப் பின்தொடர்ந்து சென்றுகொண்டிருக்கின்றார்களே!" என்று அவன் கேட்பான். அவர்கள், "எங்கள் இறைவா! உலகத்தில் நாங்கள் (வாழ்க்கையின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக) இந்த மக்களிடம் அதிக அளவில் தேவையுள்ளவர்களாக இருந்தும், அவர்களுடன் உறவாடிக்கொண்டிராமல் அவர்களைப் பிரிந்திருந்தோம். (அப்படியிருக்க, இப்போதா அவர்களைப் பின்தொடர்வோம்?)" என்று பதிலளிப்பார்கள்.
அப்போது இறைவன், "நானே உங்கள் இறைவன்" என்று கூறுவான். (அவர்களால் உறுதிசெய்ய முடியாத தோற்றத்தில் அப்போது அவன் இருப்பதால்) அதற்கு அவர்கள், "உன்னிடமிருந்து அல்லாஹ்விடம் நாங்கள் பாதுகாப்புக்கோருகிறோம்; நாங்கள் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்க மாட்டோம்" என்று இரண்டு தடவையோ அல்லது மூன்று தடவையோ கூறுவார்கள். (அந்தச் சோதனையான கட்டத்தில்) அவர்களில் சிலர் (சத்தியத்திலிருந்து) பிறழ்ந்துவிடும் அளவுக்குப் போய் விடுவார்கள். அப்போது இறைவன், "அவனை இனங்கண்டுகொள்ள உங்களுக்கும் அவனுக்குமிடையே ஏதேனும் அடையாளம் உண்டா?" என்று கேட்பான். அதற்கு அவர்கள் "ஆம் (இறைவனின் கணைக்கால் தான் அடையாளம்)" என்று கூறுவார்கள். உடனே (இறைவனின்) கணைக்காலைவிட்டும் (திரை) விலக்கப்படும். அப்போது (உலகத்தில்) மனப்பூர்வமமாக அல்லாஹ்வுக்குச் சிரம்பணிந்து கொண்டிருந்தவர் யாரோ அவர் சிரம்பணிய இறைவன் அனுமதிப்பான். தற்காப்புக்காகவோ பாராட்டுக்காகவோ சிரம்பணிந்து கொண்டிருந்தவருடைய முதுகை (நெடும் பலகையைப் போன்று) ஒரே நீட்டெலும்பாக அல்லாஹ் ஆக்கிவிடுவான். அவர் சிரம்பணிய முற்படும்போதெல்லாம் மல்லாந்து விழுந்துவிடுவார். (அவரால் சிரம் பணிய முடியாது.)
பின்னர் அவர்கள் தம் தலையை உயர்த்துவார்கள். அப்போது முதலில் அவர்கள் பார்த்த அதே தோற்றத்தில் இறைவன் காட்சியளித்து "நானே உங்கள் இறைவன்" என்று கூறுவான். அதற்கு அவர்கள் "நீயே எங்கள் இறைவன்" என்று கூறுவார்கள். பிறகு நரகத்தின் மீது பாலம் அமைக்கப்படும்; 


சரி இருந்திட்டு போகட்டும்..

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நமது இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ் வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும் போது, 'என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கின்றேன். யாரேனும் என்னிடம் கேட்டால் நான் அவருக்குக் கொடுக்கின்றேன். யாரேனும் என்னிடம் பாவமன்னிப்பு கோரினால் அவரை நான் மன்னிக்கின்றேன்' என்று கூறுவான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி)
நூல்: புகாரி 1145
(மேலும் பார்க்க: புகாரி 6321, 7394 முஸ்லிம் 1261)

இப்போ இஸ்லாத்து வாக்குமூலம் கொடுக்குதே... அல்லா முதல் வானத்துக்கு இரவோட (மூன்றில்) கடைசி பாகத்துல பூமிக்கு வருவதாக...

இங்கன ஒரு பாயி ஒரு நாளைக்கு 48 மணிநேரம்னு பொங்குறாப்டி...

எப்படி கணக்கு போட்டாலும் பூமியில் ஏதோவொரு பாகத்துல இரவு மிச்சம் இருந்திட்டே இருக்குமே... அல்லா இங்கனயேதான் குத்தவச்சிட்டு இருக்காப்டியா?...

ஆமா அப்படின்னா... அர்ஷ்ல இருக்குறது யாரு?..

ரெண்டு இடத்துலயும்னா... இந்து மத சாமி அவதாரம்--அவதாரி கதையைலாம் இஸ்லாத்து ஒப்புக்குதே...

புஹாரி:- 406. 408. 409. 410.  414. 513. 753. 6111.
இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் கிப்லாத் திசையில் உள்ள சுவற்றில் எச்சிலைக் கண்டார்கள். அதைச் சுரண்டிவிட்டு மக்களை நோக்கி 'உங்களில் ஒருவர் தொழுது கொண்டிருக்கும்போது தம் முகத்துக்கு எதிராக உமிழலாகாது; ஏனெனில் அவர் தொழும்போது இறைவன் அவருக்கு முன்னிலையில் இருக்கிறான்' என்று கூறினார்கள்.
Volume :1 Book :8

மேலும் முஸ்லிம்:- 952. 5736.

புஹாரி:- 4826. 6181. 6182. 7491.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
வல்லமையும் மாண்பும் உடைய அல்லாஹ் சொன்னான்: ஆதமின் மகன் என்னைப் புண்படுத்துகிறான். அவன் காலத்தை ஏசுகிறான். நானே காலம் (படைத்தவன்); என் கையிலேயே அதிகாரம் உள்ளது; நானே இரவு பகலை மாறி மாறி வரச் செய்கிறேன்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Volume :5 Book :65

மேலும் முஸ்லிம்:- 4519. 4520. 4523. 4524

No comments:

Post a Comment

முஹம்மது <= பவிஷ்ய புராணம்

As per  Bhavishya Purana   (Parva 3, Khand 3, Adhya 3, verses 5-6) that "An illiterate   mleccha   [foreigner] teacher will appear, Mah...