மனைவியை அடிக்கச்சொல்லும் குர்ஆன் - நிஜ காரணம் என்ன?

அல்லாவும் உலகவியலும் - 64.

மனைவியை அடிக்கச்சொல்லும் குர்ஆன் வசனம் எதற்காக அடிக்க அனுமதிக்கிறது??


குரான் 4.34 வசனம்


(ஆண், பெண் இருபாலாரில்) அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். எனவே நல்லொழுக்கமுடைய பெண்டிர் (தங்கள் கணவன்மார்களிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கணவன்மார்கள்) இல்லாத சமயத்தில், பாதுகாக்கப்பட வேண்டியவற்றை, அல்லாஹ்வின் பாதுகாவல் கொண்டு, பாதுகாத்துக் கொள்வார்கள்; எந்தப் பெண்கள் விஷயத்தில் - அவர்கள் (தம் கணவருக்கு) மாறு செய்வார்களென்று நீங்கள் அஞ்சுகிறீர்களோ, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களைப் படுக்கையிலிருந்து விலக்கிவிடுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களை (இலேசாக) அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு வழிப்பட்டுவிட்டால், அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்ந்தவனாகவும், வல்லமை உடையவனாகவும் இருக்கின்றான்.

__________

முஸ்லிம்கள் இதனை  கணவனுக்கு துரோகம் செய்யும் கள்ளத்தொடர்பு உள்ள மனைவியை மட்டுமே அடிக்க சொல்வதாக கூறுகிறார்கள். 

இது சரியா என்று பார்ப்பது நமது கடமை.இந்த முறையில் அவர்களுடைய கூற்றை ஆய்வோம்

இங்கு ஒரு மத குரு என்ன்மோ சொல்ராக,அதனை கேட்டாலே யாரை அடிப்பது என்று புரிந்து விடும்..





PART(A)

நம் எப்போதும் ஒரு குரான் வசனத்திற்கு பொருள் கொள்ளும் போது தமிழ் மொழி பெயர்ப்பு இரண்டும்(டான்சில்.இன்ஃபோ,பி.ஜே) ஆங்கில மொழி பெயர்ப்பு இரண்டு(ஃபித்கல்,யூசுஃப்ஃ அலி) அவசியம் பார்த்து விடுதல் வழக்கம்.
1.
_____________
(ஆண், பெண் இருபாலாரில்) அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். எனவே நல்லொழுக்கமுடைய பெண்டிர் (தங்கள் கணவன்மார்களிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கணவன்மார்கள்) இல்லாத சமயத்தில், பாதுகாக்கப்பட வேண்டியவற்றை, அல்லாஹ்வின் பாதுகாவல் கொண்டு, பாதுகாத்துக் கொள்வார்கள்;. எந்தப் பெண்கள் விஷயத்தில் - அவர்கள் (தம் கணவருக்கு) மாறு செய்வார்களென்றுநீங்கள் அஞ்சுகிறீர்களோ, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள்;. (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களைப் படுக்கையிலிருந்து விலக்கிவிடுங்கள்;. (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களை (இலேசாக) அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு வழிப்பட்டுவிட்டால், அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்ந்தவனாகவும், வல்லமை உடையவனாகவும் இருக்கின்றான்.
______________
2.பி.ஜேவின் மொ.பெ
34. சிலரை விட மற்றும் சிலரை அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள், பெண்களை நிர்வாகம் செய்பவர்கள். கட்டுப்பட்டு நடப்போரும், அல்லாஹ்வின் பாதுகாவல் மூலம் மறைவான வற்றை (கற்பை) காத்துக் கொள்வோருமே நல்ல பெண்கள். பிணக்கு ஏற்படும் என்று (மனைவியர் விஷயத்தில்) நீங்கள் அஞ்சினால் அவர்களுக்கு அறிவுரை கூறுங்கள்! படுக்கைகளில் அவர்களை விலக்குங்கள்! அவர்களை அடியுங்கள்! அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டு விட்டால் அவர்களுக்கு எதிராக வேறு வழியைத் தேடாதீர்கள்! அல்லாஹ் உயர்ந்தவனாகவும், பெரியவனாகவும் இருக்கிறான்.[திரு பி.ஜேவின் விளக்கம் 66]

3.ஃபித்கல்
4.34
Pickthall: Men are in charge of women, because Allah hath made the one of them to excel the other, and because they spend of their property (for the support of women). So good women are the obedient, guarding in secret that which Allah hath guarded. As for those from whom ye fear 
rebellion, admonish them and banish them to beds apart, and scourge them. Then if they obey you, seek not a way against them. Lo! Allah is ever High, Exalted, Great.

4.,யூசுஃப்ஃ அலி
4.34
Yusuf Ali: Men are the protectors and maintainers of women, because Allah has given the one more (strength) than the other, and because they support them from their means. Therefore the righteous women are devoutly obedient, and guard in (the husband's) absence what Allah would have them guard. As to those women on whose part ye fear
disloyalty and ill-conduct, admonish them (first), (Next), refuse to share their beds, (And last) beat them (lightly); but if they return to obedience, seek not against them Means (of annoyance): For Allah is Most High, great (above you all).


இப்போது முதல் பகுதி முடிந்தது பி.ஜேவின் மொழி பெயர்ப்பு விளக்கத்தை பார்த்தாலே இது கருத்து வேறுபாட்டை பற்றி கூறுவதையும்,அத்னை தீர்ப்பது பற்றி கூறுவஹை காண்லாம்.

ஃபித்கல் கணவ‌னுக்கு மனைவின் எதிர்ப்பு( rebellion,) என்கிறார், யூசுஃப்ஃப் அலி விசுவாயமின்மை,மோசமான நடத்தை(disloyalty and ill-conduct,
) என்கிறார்.

இரு வசனங்களும் அடிக்க தகுந்த மனைவியின் செயலில் வேறு படுகின்றன.

முதல் பகுதியில் முடிவு

இப்படி மொழி பெயர்ப்புகள் எதிரான பொருள் தந்தால் பல பொருள் கொள்ள இயலும். இதில் ஏற்படும் குழப்பத்தை தீர்க்க இரண்டாம் பகுதிக்கு செல்வோம்.அதற்கு முன் கட்டார் தொலைக்காட்சியில் அரபியை தாய்மொழியாக கொண்டவர்களிடம் நிகழ்ந்த காணொளி பாருங்கள்.இங்கு மனைவின் பணிய மறுபு (Disobedience) என்பதே அடிக்கும் காரணமாக கூறப்படுகிறது.






*                           *                         *

PART(B)


இந்த பகுதியில் மூல‌ அரபிவார்த்தைகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றது.இதில் முக்கியமாக இரு அரபி வார்த்தைகளே இவசனத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.,
முதல் வார்தை மட்டும் இப்பகுதியில் பார்ப்போம்.
I)
(4:34:24)nushūzahunna=their ill-conduct,"Rise up((58:11:16),desertion(4:128:6) .துர் நடத்தை,எதிர்த்தல்,விட்டு பிரிதல்

குரான் 4.128 லும் இதே வார்த்தை ஒரு ஆண் பெண்னை விட்டு பிரிந்தால் என்ன செய்ய வேண்டுமென்று கூறுகிறது.

1.டான்சில்.இன்ஃபோ
ஒரு பெண் தன் கணவன் தன்னை வெறுத்து விடுவான் என்றோ அல்லது புறக்கணித்து விடுவான் என்றோ பயந்தால், அவர்கள் இருவரும் தங்களுக்குள் (சமாதானமான) ஒரு முடிவைச் செய்து கொண்டால் அவ்விருவர் மீது குற்றமில்லை. அத்தகைய சமாதானமே மேலானது. இன்னும், ஆன்மாக்கள் கருமித்தனத்திற்கு உட்பட்டவையாகின்றன. அவ்வாறு உட்படாமல்) ஒருவருக்கொருவர் உபகாரம் செய்து, (அல்லாஹ்வுக்குப்) பயந்து நடப்பீர்களானால் நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.

2.பி.ஜேவின் மொ.பெ
128. தன் கணவனிடம் பிணக்கையோ, புறக்கணிப்பையோ ஒரு பெண் அஞ்சினால் அவ்விருவரும் தமக்கிடையே நல்ல முறையில் சமாதானம் செய்து கொள்வது (அல்லது பிரிந்து விடுவது) இருவர் மீதும் குற்றமில்லை. சமாதானமே சிறந்தது. மனிதர்களிடம் கஞ்சத் தனம் இயல்பாகவே அமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் (ஒருவருக்கொருவர்) உதவி செய்து (இறைவனை) அஞ்சிக் கொண்டால் அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவனாக இருக்கிறான்.

3.ஃபித்கல்

Pickthall: If a woman feareth ill treatment from her husband, or desertion, it is no sin for them twain if they make terms of peace between themselves. Peace is better. But greed hath been made present in the minds (of men). If ye do good and keep from evil, lo! Allah is ever Informed of what ye do.

4.,யூசுஃப்ஃ அலி
Yusuf Ali: If a wife fears cruelty or desertion on her husband's part, there is no blame on them if they arrange an amicable settlement between themselves; and such settlement is best; even though men's souls are swayed by greed. But if ye do good and practise self-restraint, Allah is well-acquainted with all that ye do.

(4:128:6) nushūzan=ill-conduct,ill treatment,cruelty or desertion,பிணக்கு, புறக்கணிப்பு

ஆணுக்கு என்று வரும்போது பிரிதல் ,புறக்கணிப்பே மொழியாகக்ங்களில் பயன் படுத்தப் படுவதால் குரான் 4.34லும் இதே அர்த்தம் பயன் படுத்தப் படவேண்டுமென்று விளங்கும்.
மனைவிய அடிபதற்காக காரணம்
அ) மனைவி கணவனை வெறுத்து ஒதுக்கினால்
ஆ)கொடுமை படுத்தினால்
இ) மோசமான நடத்தை(என்ன என்று சரியாக கூற முடியாது)

குரான் த்வறான பாலுறவுகளுக்கு பல தண்டனைகளை வழங்குகிறது

விபசாரத்திற்கான தண்டனை

24:2. விபசாரியும், விபசாரனும் - இவ்விருவரில் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்; மெய்யாகவே, நீங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டவர்களாக இருந்தால். அல்லாஹ்வின் சடடத்(தை நிறைவேற்றுவ)தில், அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம்; இன்னும் அவ்விருவரின் வேதனையையும் முஃமின்களில் ஒரு கூட்டத்தார் (நேரில்) பார்க்கட்டும்.

__________

ஒரு பெண்ணின் மீது அபாண்டமாக குற்றம் சொல்பவருக்கு என்ன தண்டனை?



குரான் 24.4

24:4. எவர்கள் கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறி (அதை நிரூபிக்க) நான்கு சாட்சிகளைக் கொண்டு வரவில்லையோ, அவர்களை நீங்கள் எண்பது கசையடி அடியுங்கள்; பின்னர் அவர்களது சாட்சியத்தை எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ளாதீர்கள் - நிச்சயமாக அவர்கள்தான் தீயவர்கள்.

_____________

கணவன் சந்தேகப் படுகிறான் ஆனால் சாட்சி இல்லை என்ன செய்வது?


24:6. எவர்கள் தம் மனைவிமார்களை அவதூறு கூறி (அதை நிரூபிக்கத்) தங்களையன்றி அவர்களிடம் வேறு சாட்சிகள் இல்லாமலிருந்தால் அவன், நிச்சயமாக தாம் உண்மையே கூறுவதாக அல்லாஹ்வின்மீது நான்கு முறை சத்தியம் செய்து கூறி:

24:7. ஐந்தாவது முறை, “(இதில்) தான் பொய் சொல்வதாக இருந்தால், நிச்சயமாக அல்லாஹ்வுடைய சாபம் தன்மீது உண்டாகட்டும்” என்றும் (அவன் கூற வேண்டும்).

24:8. இன்னும் (அவனுடைய மனைவி குற்றத்தை மறுத்து) தன் மீதுள்ள தண்டனையை விலக்க, “நிச்சயமாக அவன் பொய்யர்களில் நின்றுமுள்ளவன்” என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து நான்கு முறை கூறி:

24:9. ஐந்தாவது முறை, “அவன் உண்மையாளர்களிலுள்ளவனானால் நிச்சயமாக அல்லாஹ்வுடைய கோபம் தன்மீது உண்டாவதாக என்றும் (அவள் கூற வேண்டும்).
____________



குரான் என்பது ஆறாம் நூற்றாண்டு மனிதர்களின் வாழ்வுக்கு எளிதாக புரியும் வகையில் சில தீர்வுகளை கூறுகின்றது.அத்னை மதவாதிகள்

எக்காலத்திற்கும் பொருந்துவது என்று ஏமாற்றுவதுதான் பிரச்சினை.இது அக்காலத்திற்கு மட்டும்,இப்போது இல்லை.


அதுவும் சிறு தவறுக்கு கடைசி வாய்ப்பாக சொல்லி இருக்கிறது,இப்போதைய நாகரிக உலகில் இதனை செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தினால் பரவாயில்லை.


இரண்டாம் பகுதி முடிந்தது.அதாவது பெண்ணை அடிக்க சொல்வது அவள் பணிவின்மை அல்லது கணவனை வெறுத்து ஒதுக்குவதற்காக மட்டுமே,ஒருவேளை அவள் துரோகம் செய்தால் குரான் அளிக்கும் தண்டனை வேறு ஆகும்
இன்னும் ஒரு எடுத்துக் காட்டாக ஒரு ஹதிது பாருங்கள்.
5825. இக்ரிமா(ரஹ்) அவர்கள் அறிவித்தார். 
ரிஃபாஆ அல்குறழீ(ரலி) அவர்கள் தம் மனைவியை மணவிலக்குச் செய்துவிட, அந்தப் பெண்ணை அப்துர் ரஹ்மான் இப்னு ஸபீர் அல்குறழீ(ரலி) அவர்கள் மணந்தார்கள். (பிறகு நடந்தவற்றை) ஆயிஷா(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: 
(ஒரு முறை) அந்தப் பெண்மணி பச்சை நிற முகத்திரை அணிந்துகொண்டு என்னிடம் (வந்து தம் கணவர் அப்துர் ரஹ்மான் தம்மை துன்புறுத்துவதாக) முறையிட்டார். தம் கணவர் தம்மைஅடித்ததால் தம் மேனியில் (கன்றியிருந்த) பச்சை நிற அடையாளத்தை எனக்குக் காட்டினார். 
-(இக்ரிமா கூறுகிறார்:) பெண்கள் ஒருவருக்கொருவர் உதவுவது வழக்கம் தானே?) அந்த வழக்கப்படி 
(நபி(ஸல்) அவர்கள் வந்தபோது, 'இறைத்தூதர் அவர்களே!) நான் (ஆயிஷா) இறைநம்பிக்கையுடைய பெண்கள் சந்திக்கும் துன்பத்தைப் போன்று எங்கும் பார்த்ததில்லை. இவருடைய மேனி (இவருடைய கணவர் அப்துர் ரஹ்மான் அடித்ததால் கன்றிப்போய்) இவரின் (பச்சை நிற முகத்திரைத்) துணியைவிடக் கடுமையான பச்சை நிறமுடையதாக உள்ளது' என்று சொன்னேன். (இதற்கிடையில்) அப்துர் ரஹ்மான் இப்னு ஸபீர்(ரலி) அவர்கள் தம் மனைவி இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்று தம்மைப் பற்றி முறையிட்டார் என்று கேள்விப்பட்டார். எனவே, மற்றொரு மனைவியின் மூலமாகத் தமக்குப் பிறந்த இரண்டு மகன்களைத் தம்முடன் அழைத்து வந்தார். 
அப்பெண்மணி, '(இறைத்தூதர் அவர்களே!) அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இவருக்கு எந்தக் குறையும் வைக்கவில்லை. ஆனால், (தாம்பத்திய சுகத்தில்) இவரிடமிருந்து இதைவிட அதிகமாக ஒன்றும் என்னைத் திருப்திப்படுத்த முடியவில்லை' என்று கூறி, தம் ஆடையின் முந்தானைக் குஞ்சத்தை எடுத்துக் காட்டினார். அப்துர் ரஹ்மான் இப்னு ஸபீர், 'பொய் சொன்னாள், அல்லாஹ்வின் மீதாணையாக! இறைத்தூதர் அவர்களே! (தாம்பத்திய உறவின்போது) பதனிடப்பட்ட தோலை உதறியெடுப்பதைப் போன்று நான் இவளை (முழுமையாக அனுபவித்து) உதறியெடுத்துவிடுவேன். எனினும், இவள்தான் ரிஃபாஆவை (மீண்டும் மணந்து கொள்ள) விரும்பி எனக்குக் கீழ்ப்படிய மறுக்கிறாள்' என்றார். உடனே இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அப்படி(ரிஃபாஆவை மீண்டும் நீ மணந்து கொள்ள விரும்பினா)யானால், (உன் இரண்டாம் கணவரான) இவர் உன்னிடம் (தாம்பத்திய) இன்பத்தை அனுபவிக்கும் வரை அ(ந்த முதல் கண)வருக்கு நீ 'அனுமதிக்கப்பட்டவள்' அல்லது 'ஏற்றவள்' நீ 'அனுமதிக்கப்பட்டவள்' அல்லது 'ஏற்றவள்' அல்லள்' என்றார்கள். அப்துர் ரஹ்மான் அவர்களுடன் இருந்த அவர்களின் இரண்டு மகன்களையும் நபி(ஸல்) அவர்கள் பார்த்தார்கள். 'இவர்கள் உங்கள் புதல்வர்களா?' என்று (அப்துர் ரஹ்மான் அவர்களிடம்) கேட்டார்கள். அவர், 'ஆம்' என்றார். நபி(ஸல்) அவர்கள், 'இவரைப் பற்றியா நீ இப்படிச் சொல்கிறாய்? அல்லாஹ்வின் மீதாணையாக! ஒரு காக்கை மற்றொரு காக்கைக்கு ஒப்பாக இருப்பதை விடவும் அதிகமாக இந்தப் புதல்வர்கள் இவரை ஒத்திருக்கின்றனர்' என்றார்கள்.45 
Volume :6 Book :77.
*                *                *

PART(C)

அவ்வள‌வுதான் முடிந்தா என்கிறீர்களா,யாரை அடிக்க சொல்கிறது என்பதைதான் பார்த்தோம்.இப்போது உண்மையிலேயே அடிக்கத்தான் சொல்கிறதா என்பதையும் பார்த்து விடுவோம்.

நான் சொல்ல நினைத்தது எல்லாவற்றையுமிக்காணொளியில் ஒரு நண்பர் மிக அருமையாக கூறியுள்ளார். நான் சொல்வதற்கு ஏதுமில்லை.







இப்போது சொல்லுங்கள் குரான் மனைவியை அடிக்க சொல்லி இருக்கிறதா?

இஸ்லாமிடம் சிக்கித்தவிக்கும் சந்திரன்


அல்லாவும் உலகவியலும் -63.

சந்திரனே மிகத்துள்ளியமாக உலக மக்களுக்கு அவர்கள் அறிந்துக் கொள்ளும் விதத்தில் நாட்களையும் தேதிகளையும் அறிவிக்கின்றது.
அகில உலக அதிபதி சந்திரனையே உலகம் படைக்கப்பட்ட காலந் தொட்டு நாள்காட்டியாக்கி வைத்துள்ளான்.  இதை குர்ஆனில் அறிவிக்கவும் செய்கிறான்.
அவன்தான் சூரியனை ஒளியுடையதாகவும், சந்திரனை ஒளியை பிரதிபலிப்பதாகவும் ஆக்கினான். ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு(ச் சந்திரனாகிய) அதற்கு மாறி மாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான்; இறைவன் உண்மையை கொண்டேயல்லாது இவற்றைப் படைக்கவில்லை – அவன் அறிவுள்ள மக்களுக்குத் தன் அத்தாட்சிகளை விவிரிக்கின்றான். (10:5)
சூரியனும் சந்திரனும் கணக்கின்படியே இருக்கின்றன. (55:5)
இஸ்லாம் சந்திரனையே நடைமுறை நாள்காட்டியாக்கியது.
குர்ஆனின் இந்த அறிவிப்பையே நபி(ஸல்) அவர்கள் நடைமுறைப்படுத்தினார்கள்.  அவர்கள் காலத்தில் சூரியன் நேரங்காட்டியாக மட்டுமே இருந்தது.  நாள் – வாரம் – மாதம் – வருடம் இவை அனைத்தும் சந்திரனைக் கொண்டே தீர்மானிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. நபி(ஸல்) காலத்தில் சூரிய நாள்காட்டி என்ற பேச்சே இல்லை.
உலகின் பெரும்பாலான பகுதிகளில் நடைமுறையிலிருக்கும் கிரிகோரியன் நாட்காட்டியைவிட அல்லாஹ்வும் முஹம்மதுவும் போதித்த சந்திரநாட்காட்டி மட்டுமே சிறந்ததென்பதே இஸ்லாமியர்களின் வாதம். இஸ்லாமிய நாட்காட்டிக்குள் செல்லும்முன் நாட்காட்டிகளைப்பற்றி சுருக்கமாக கவனித்துவிடுவோம்.

நாட்காட்டி என்பது, நாளைக் காட்டுவது என்ற பொருளைக் கொடுத்தாலும்; இது உண்மையில்; சமூக, சமய, வணிக, நிர்வாக நோக்கங்களுக்காக நாட்களை ஒழுங்கு படுத்தும் ஒரு முறை ஆகும்.

இன்று நாம், அறிவியலின் வளர்ச்சியால் நாட்காட்டிகளை, வணிக நிர்வாக நோக்கங்களுக்காக மட்டும் பயன்படுத்துகிறோம். ஆனால் அன்றைய மக்களின் வாழ்க்கைப் போராட்டம் நாட்காட்டிகளை அடிப்படையாகக் கொண்டே இருந்தது. அன்றைய நாகரீகங்கள் மிகப் பெரும்பாலும் விவசாயத்தையே அடிப்படையாக கொண்டிருந்ததால், பருவகால மாற்றங்களை அறிந்து கொள்வதற்கு அவர்கள் நாட்காட்டிகளையே சார்ந்திருக்க வேண்டிருந்தது. சூரியன், சந்திரனின் மற்றும் இயற்கை நிகழ்வுகளையும் அடிப்படையாகக் கொண்டு அவரவர் கலாச்சாரத்திற்கேற்ப பல்வேறு நாட்காட்டிகள் வழக்கிலிருந்திருக்கிறது.

சந்திரனின் ஓட்டத்தை அடிப்படையாகக் கொண்ட சந்திர நாட்காட்டி மட்டுமே மிகத் துள்ளியமாக இருக்கிறதென்பதே இஸ்லாமியர்களின் வாதம்.  இங்கு நமது விவாதம் சூரிய மற்றும் சந்திர நாட்காட்டிகளில் எது சிறந்தென்பதல்ல. ஏனெனில் இரண்டுநாட்காடிகளிலும் நிறை, குறைகள் இருந்திருக்கிறது; அதை சரிகாணும் முயற்சிகளை நாட்காட்டிகளின் வரலாறு நெடுகிலும் காணலாம்.
சூரிய நாட்காட்டியில், பூமி ஒரு முறை சூரியனை சுற்றிவரும் காலத்தை ஒரு ஆண்டு என்றும் ஒரு ஆண்டிற்கு 365 நாட்கள் எனக் கணக்கிடப்படுகிறது. ஆனால்  365 நாள் 5 மணி, 48 நிமிடம், 46 வினாடி காலத்தில் பூமி சூரியனைச் சுற்றிவருகிறது. மீதமிருக்கும் 5 மணி, 48 நிமிடம், 46 வினாடிகளை தவிர்க்க இயலாமல், நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை சிறப்பு நாளாக ஃபிப்ரவரியில் 29 என்ற நாளையும் இணைத்து சரிகாணப்படுகிறது. இன்று நம்மிடையே வழக்கிலிருக்கும் சூரியனை அடிப்படையாக கொண்ட கிரிகோரியன் நாட்காட்டி, சந்திரனை அடிப்படையாக கொண்ட  ரோமானிய நாட்காட்டியின் திருத்தப்பட்ட வடிவமே.

சந்திர நாட்காட்டியில், ஒரு மாதம் என்பது, சராசரியாக 29.5305888531 நாட்களாக வருகிறது. ஆண்டிற்கு 12 மாதங்கள் என்றால் 29.5305888531X12 = 354.3671 நாட்கள் என்றாகிறது. இதையே, ஆண்டிற்கு 13 மாதங்களாக கணக்கிட்டால், 383.8977 நாட்களாகிவிடும். இப்படி பல குழப்பங்கள் இருந்திருக்கிறது.  நாட்களை மாதங்களுக்குள்ளும் மாதங்களை வருடத்திற்குள்ளும் முழுமையாக, சரியாக பெறுத்தவும், புவியின் பருவகாலங்களுடன் நாட்காட்டியை இணைக்கவும் பல்வேறு சீர்திருத்தங்களை நாட்காட்டிகளில் மேற்கொண்டிருக்கின்றனர். உதாரணத்திற்கு சீன நாட்காட்டி, 2500 ஆண்டுகளில் 50- 100  திருத்தங்களை சந்தித்திருக்கிறது. சந்திர நாட்காட்டியை  பின்பற்றிய சுமேரியர்கள், அதிலிருக்கும் குழப்பத்தை சரிகாண 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை 62 நாட்கள் கொண்ட ஒரு மாதத்தை கூடுதலாக  இணைத்திருந்தனர். இவ்வாறாக புவியின் பருவருகாலங்களுடன் நாட்காட்டியை இணைக்க மனிதகுலம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது.

இனி இஸ்லாமிய நாட்காடியை கவனிக்கலாம். இஸ்லாமியர்கள் சந்திர நாட்காடியைப் பின்பற்றுவதாகக் கூறுகின்றனர். உண்மையில் சந்திர நாட்காட்டிக்கும் வழக்கிலிருக்கும் இஸ்லாமிய நாட்காட்டிக்கும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. கிபி 638-ல் இரண்டாம் கலீபா உமர் காலத்தில் இஸ்லாமிய ஆண்டுக்கணக்குத் துவங்கியது.
குர்ஆன் 9:36
வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் பன்னிரண்டாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. இதுவே நேரான வழி. (புனிதமான) அம்மாதங்களில் உங்களுக்கு நீங்கள் தீங்கு இழைத்து விடாதீர்கள்! இணை கற்பிப்போர் ஒன்று திரண்டு உங்களுடன் போரிடுவது போல் நீங்களும் ஒன்று திரண்டு அவர்களுடன் போரிடுங்கள்!..
இஸ்லாமிய நாட்காட்டியிலுள்ள குழப்பத்தை அறிய ஆய்வுகள் எதுவும் தேவையில்லை. அதன் நடைமுறைக் குழப்பங்களை கவனித்தால் போதும்.

ஒரு சந்திர மாதம் என்பது சராசரியாக 29.53 நாட்களைக் கொண்டது என்பதை முன்பே பார்த்தோம். மாதம் என்பது 29 நாட்களாக இருக்கும் அல்லது 30 நாட்களாக இருக்கும் என்பது முஹம்மதுவின் கட்டளையும் கூட. அதாவது  குறைந்தபடசம் 29 நாட்களும் அதிகபட்சமாக 30 நாட்கள் மட்டுமே. சராசரியாக பார்த்தால் 29.5 நாட்களாக இருக்கும். அல்லாஹ்விடமுள்ள பதிவேட்டின்படி, பன்னிரண்டு மாதங்களைக் கொண்டது ஒரு ஆண்டு.  பூமி, சூரியனைச் சுற்றத் துவங்கிய இடத்திலிருந்து மீண்டும் அதே இடத்திற்கு வரும் கால அளவை ஆண்டு என்கிறோம். அதற்கு 365.25 நாட்கள் தேவைப்படுகிறது என்பதையும் பார்த்தோம்.

சந்திரனை அடிப்படையாகக் கொண்ட நாட்காட்டி ஆண்டு என்பதை இவ்வாறாக வரையறை செய்கிறது.
 29.5 X 12 = 354 

இதைக் கொண்டு பருவகாலங்களை கணித்தால் எப்படி இருக்கும்?

கோடைகாலமாக இருக்கும் ஏப்ரல்-மே மாதங்கள்,  இஸ்லாமிய மாதங்களில் இந்த ஆண்டு, முறையே ஜமாதுல் ஆகிர்-ரஜப் என்றிருக்கிறது.  பத்துவருடங்கள் கடந்தாலும் ஏப்ரல் – மே மாதங்கள் கோடைக்காலம்தான். ஆனால் ஜமாதுல் ஆகிர்-ரஜப் மாதங்கள் குளிர் காலத்தில் இருக்கும். ஜமாதுல் ஆகிர் - ரஜப் மாதங்கள் 33 வருடங்களுக்குப் பின்னரே தனது முந்தை இடத்தை அடையும்.

இவ்விஷயத்தில் இஸ்லாமியர்கள் செய்ததென்ன?

இஸ்லாமியர்கள் தங்களது மாதத்தின் முதல் நாளை கணக்கிடுவது உலகறிந்த குழப்பம். அதையும் சற்று கவனிக்கலாம்.
புகாரி 1900
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"நீங்கள் பிறை கண்டதும் நோன்பு வையுங்கள்; (மறு) பிறை கண்டதும் நோன்பை விடுங்கள்; உங்களுக்கு (வானில்) மேகம் தென்பட்டால் நாள்களை எண்ணிக் கொள்ளுங்கள்." என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
இந்த ஒரு ஹதீஸைக் கொண்டு இவர்கள் செய்யும் அழிம்பு தாங்க முடிவதில்லை. இவர்கள், தங்களை தாங்களே குழப்பி, அடுத்தவர்களையும் குழப்பி அரசாங்கத்தையும் குழப்பிக் கொண்டிருக்கின்றனர்.



பிறை விஷயத்தில் நபிவழியை பின்பற்றுங்கள்
...மார்க்கத்தில் புதிதாகப் புகுத்தப்படுகின்ற அனைத்தும் வழிகேடாகும். அனைத்து வழிகேடுகளும் நரகத்திற்கு கொண்டு போய் சேர்க்கும் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
எனவே ரமலான் மற்றும் துர்ஹஜ் மாத துவக்கத்தை தீர்மானிக்க நபிவழி முறையை விட்டு விட்டு, கணிப்பை நம்பி செயல்படுவது குர்ஆன், நபிவழிக்கு எதிரானதும், வணக்க விஷயத்தில் புதிதாகப் புகுத்துவதுமாகும். அது நரகத்திற்கு கொண்டு போய் சேர்க்கும் அப்படிப்பட்ட வழியில் செல்லுகின்றவர்கள் சிந்தித்து அதிலிருந்து மீண்டு சரியான தெளிவான நபிவழியை பின்பற்ற முன்வரவேண்டும்.
islampaathai.com
அதாவது முன்கூட்டியே சந்திரனின் இயக்கத்தை கணித்து மாதத்தின் முதல் நாளைக் கணக்கிடக் கூடாது. பிறை சந்திரனைக் கண்களால் கண்டபிறகே மாதத்தை துவங்க வேண்டுமாம்.

இது இன்னொரு கூட்டம்,
பிறை பார்த்தல்!
...சூரியனின் ஓட்டத்தைக் கண்ணால் பார்த்துத்தான் தொழுகை நேரத்தை அறிந்து தொழ வேண்டும் என்று முன்னர் அடம் பிடித்தது,
சந்திரனைப் புறக்கண்ணால் பார்த்தே மாதம் பிறப்பதைத் தீர்மானிக்க வேண்டும் என்று இப்போது அடம் பிடிப்பது,
இத்தியாதி, இத்தியாதி பொருள்களில் அதாவது மார்க்கத்திற்கு உட்படாத பொருள்களில் அவற்றைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டுள்ளனர். அதே சமயம் மார்க்கத்திற்கு உட்பட்டவை -அவற்றில் அணுவளவும் மாற்றத்திற்கு இடமே இல்லை என்று திட்டமாக அல்குர்ஆன் கூறுபவற்றில், மனம் போன  போக்கில் மாற்றத்தை உண்டாக்குவதில் புரோகிதர்கள் முன்னணியில் இருக்கின்றனர்.
.....
அதேபோல் அன்று மாதம் பிறந்ததை முதல் பிறையைப் புறக்கண்ணால் பார்த்து முடிவு செய்ததற்கு மாறாக இன்று கணினி கணக்கீட்டின் மூலம் எதிர்வரும் நூறு ஆண்டுகளின் 12 மாதங்களின் தலைப் பிறையை  இன்றே மிகத் துல்லியமாகக் கணக்கிட்டுக் கூறும் அளவில் விஞ்ஞான வளர்ச்சி ஏற்பட்டு விட்டதால், இன்று பிறையைப் புறக்கண்ணால் பார்க்கக் காத்திருக்கத் தேவையே இல்லை.
ஆனால் மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்ட புரோகிதர்கள், தங்களின் தொழிலுக்கு ஆபத்து வந்து விடுமோ என்ற அச்சத்தில் ஒவ்வொரு விஞ்ஞான கண்டு பிடிப்பின்போதும் அதை மறுத்து அலறுவது வாடிக்கை. காலப்போக்கில் வேறு வழியின்றி அவர்களும் அந்த விஞ்ஞான உண்மைகளை ஏற்கும் கட்டாய நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.
readislam.net
அடுத்தது அண்ணனின்  கூட்டம்,
பிறை பார்த்தல் வரட்டு வாதங்கள்
....
அதாவது, நிரூபிக்கப்பட்ட விஞ்ஞானத்தின் படி பிறை வானில் இருந்தால் கூட, அது நம் கண்களுக்குத் தெரிய வேண்டும், அதனடிப்படையில் மாதத்தை நாம் முடிவு செய்ய வேண்டும் என்றே அல்லாஹ் விரும்புகிறான். அதற்குரிய முயற்சியில் நாம் இறங்க வேண்டும். ஒரு வேளை பிறை (மேகமூட்டம் காரணமாக) தெரியாமல்  இருந்தால், மாதம் பிறக்கவில்லை, முந்தைய மாதமே நீடிக்கிறது என்று  முடிவு செய்து கொள்ளலாம். ஆக, எந்த நிலையிலும் நம் புறக்கண்ணால் பார்க்காமல் மாதத்தை முடிவு செய்து கொள்வதை அல்லாஹ் விரும்பவில்லை என்பதை இந்த ஹதீஸ் தெளிவாக உணர்த்துகிறது.
www.onlinepj.com
ஹிஜ்ரா கமிட்டி என்றொரு கூட்டம், பிறை பார்ப்பது என்றால் என்னவென்று அண்ணனுக்கே அரபி சொல்லிக் கொடுத்தது. இங்கு  ஹிஜ்ராகமிட்டிக்காரர்கள், அண்ணனுக்கு கொடுத்த நெற்றியடிகளையும்,  இங்குஅண்ணன் ஹிஜ்ரா கமிட்டிக்கு கொடுத்த மரண(!) அடி, சவுக்கடி, செருப்படிகளையும் காணலாம். நேரமும், விருப்பமும் இருப்பவர்களுக்கு பொழுதுபோக்க அறியவாய்ப்பு.

இப்படி மாறிமாறி செருப்படிகளைப் பரிமாறிக் கொண்டதைத்தவிர இவ்விஷயத்தில் இன்றுவரை இஸ்லாமியர்கள் எதுவும் செய்யவில்லை. ஆண்டிற்கு 355 நாட்கள் என்றுதான் கணக்கிட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்களால் முஹம்மதைக் கடந்து சிந்திக்க முடியாது, கூடாது.

உதாரணத்திற்கு, பீஜே குழுவினரும், ஹிஜ்ரா கமிட்டிக்காரர்களும் பக்கப் பக்கமாக எழுதித் தள்ளியவைகளில் சடங்குகளையும் வழிபாடுகளையும் மட்டுமே சுற்றிச் சுற்றி வருகின்றனர். அதைக் கடந்து அவர்களால் சிந்திக்க முடியவில்லை. வழிபாடுகளை அட்டவணைப்படுத்துவதற்காக மட்டும்தான் நாட்காட்டிகளைப் பயன்படுத்த வேண்டும் போலிருக்கிறது!

நாட்காட்டிகளின் மிக முக்கிய பணி என்னவாக இருந்தது?

சுருக்கமாகச் சொல்லவதென்றால், சமூகத்தின் தேவைகளை காலாளவிற்குள் பூர்த்தி செய்ய முன்கூட்டியே வரைசெய்ய உதவும் ஒரு கருவி. விவசாயம், வேட்டையாடுதல், புலம்பெயர்தல் போன்ற அன்றைய மக்களின் தேவைகளை முன்கூட்டியே திட்டமிட நாட்காட்டிகள் பெரும் பங்கு வகித்தது. இன்றும் கூட அப்படித்தான்.

சரி..!  மனிதர்களின் இந்தத் தேவைகளை அல்லாஹ்வும் முஹம்மது அறியவில்லையா? அவர்கள் விவசாயத்தை அவர்கள் எள்ளளவும் கருத்தில் கொண்டதாகத் தெரியவில்லை.  உண்மை என்னவென்றால் முஹம்மதிற்கு விவசாயத்தைப்பற்றி எதுவும் தெரியாது அதனால் அல்லாஹ்வும் அதைப்பற்றி வாய்திறக்கவில்லை.

முஹம்மதுவின் சொல் செயல் அனைத்துமே அல்லாஹ்வின் கட்டளைப்படி இருந்தது, அவர் தனது உடலிலிருந்து காற்றைப்பிரிப்பது கூட அல்லாஹ்வின் அறிவுறுத்தலின் காரணமாகவே நிகழ்ந்தது எனவே ஹதீஸ்களை, குர்ஆனில் இல்லாத வஹீ என்றெல்லாம் கதையளப்பதை அறிவீர்கள்.

முஸ்லீம் 4711
தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
பேரீச்ச மரங்களின் உச்சியில் இருந்து கொண்டிருந்த (மதீனாவாசிகள்) சிலரைக் கடந்து சென்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நானும் சென்றேன். அப்போது, "இவர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார் கள்?'' என்று கேட்டார்கள்.
அதற்கு மக்கள், "பெண் மரங்களுடன் ஆண் மரங்களை இணைத்து ஒட்டுச் சேர்க்கை செய்து (பெண் மரங்களை) சூல் கொள்ளச் செய்கின்றனர்'' என்று கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இதனால் பயனேதும் ஏற்படும் என்று நான் கருதவில்லை'' என்று சொன்னார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதைப் பற்றி (மதீனா விவசாயிகளிடம்) தெரிவிக்கப்பட்டபோது, அவர்கள் ஒட்டுச் சேர்க்கை செய்வதை விட்டுவிட்டனர். (அந்த ஆண்டில் அவர்களுக்கு மகசூல் பாதிக்கப்பட்டது.)
இது குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அப்போது, "அ(வ்வாறு செய்வ)தனால் அவர்களுக்குப் பயன் ஏற்படுமானால் அவ்வாறு செய்துகொள்ளட்டும். நான் எனது யூகத்தையே தெரிவித்தேன். யூகத்தை தெரிவித்ததைவைத்து என்மீது குற்றம் சாட்டா தீர்கள். ஆயினும், நான் உங்களிடம் அல்லாஹ்வைப் பற்றி ஏதேனும் சொன்னால் அதை நீங்கள் கடைப்பிடியுங்கள். ஏனெனில், நான் வல்லமையும் மாண்பும் உடைய அல்லாஹ்வைப் பற்றி பொய்யுரைக்கமாட்டேன்'' என்று சொன்னார்கள்.
இஸ்லாமியர்கள், அறியாமைக் காலம் காட்டுமிராண்டிக்காலம் ஜஹிலியாகாலம் என்றெல்லாம் வர்ணனை செய்யும் காலத்தில் வாழ்ந்த ஒரு சாதரண அரபி விவசாயிக்குத் தெரிந்த சொற்ப அறிவியல் கூட முஹம்மதிற்குத் தெரியவில்லை என்பதுதான். எப்படி யாரை வழிப்பறி செய்வது, பெண் கைதிகள், அடிமைகளின் குறிக்குள் விந்தை எப்படி செலுத்துவது, முஹம்மதின் மனைவியர்களைப்பற்றி, அவரிடமே கோள் சொல்வது என்று அல்லாஹ்வின் காலம் முடிந்துவிட்டது. இதில் விவசாயாத்தைப்பற்றி பேசவேண்டுமாம் நல்ல வேடிக்கை!

அல்லாஹ்விற்கும் முஹம்மதிற்கும் விவசாயத்தைப்பற்றி தெரியவில்லை என்பது மட்டுமல்ல அதை ஒரு கேவலமான தொழிலாகக் கருதினர் என்பதுதான் இங்கு வேதனையான விஷயம்.
புகாரி 2321
 முஹம்மத் இப்னு ஸியாத் அல் அல்ஹானீ(ரஹ்) அறிவித்தார்.
அபூ உமாமா அல் பாஹிலீ(ரலி), ஒரு வீட்டில் ஏர் கலப்பையையும் மற்றும் சில விவசாயக் கருவிகளையும் கண்டார்கள். உடனே அவர்கள், 'இந்தக் கருவி ஒரு சமுதாயத்தினரின் வீட்டில் புகும்போது அந்த வீட்டில் அல்லாஹ் இழிவைப் புகச் செய்யாமல் இருப்பதில்லை' என்று நபி(ஸல்) அவர்கள் கூற கேட்டிருக்கிறேன்" என்று கூறினார்கள்.
விவசாயத்தை இழிவாகக் கருதியது மட்டுமல்லால். அதற்கு செலுத்தப்பட்ட உழைப்பை முஹம்மது மதிக்கவுமில்லை.
புகாரி 4031
இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பனூ நளீர் குலத்தாரின் பேரீச்ச மரங்களை  எரித்துவிட்டார்கள். இன்னும்  வெட்டிவிட்டார்கள். அது 'புவைரா' என்னும் இடமாகும். எனவேதான் 'நீங்கள் சில பேரீச்ச மரங்களை வெட்டியதும், அல்லது அவற்றின் வேர்களில் நிற்கும்படிவிட்டுவிட்டதும் எல்லாமே அல்லாஹ்வின் அனுமதியுடன் தான் நடந்தன. அல்லாஹ் தீயவர்களை இழிவிலும் கேவலத்திலும் ஆழ்த்தி விடுவதற்காகவே" என்னும் (குர்ஆன் 59:05) இறைவசனம் அருளப்பட்டது.
வறண்ட பாலைவனத்தில் ஒரு சின்னஞ்சிறிய செடி துளிர்க்க வைப்பது மிகப்பெரிய பணி. வளர்ந்து பலன் கொடுத்துக் கொண்டிருக்கும் பேரிச்சம் மரங்களை எரிப்பதும், வெட்டிச் சாய்ப்பது அறிவுடைய மனிதனின் செயலாக இருக்குமா? காட்டுமிராண்டிகள் யார் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

1996-ல் தலிபான்கள் காபூலில் இருந்த வானிலை ஆய்வு மையத்தை தகர்த்தனர். 100 ஆண்டுகள் பழமையான ஆவணங்கள் அழிக்கப்பட்டது. மூடர்களின் செயலால் விவசாயிகள் துன்பத்திற்குள்ளாயினர். எதிர்பாராத வானிலையால் 1998-ல் ஆப்கனிய விமானம் விபத்திற்குள்ளானதில் 45 உயிர்கள் பலியானது. விமானமாவது, விவசாயமாவது எங்களுக்கு அல்லாஹ்வின் கட்டளைகள் மட்டுமே முதன்மையானது.
ஏன் இப்படி?




இஸ்லாமைப் பொருத்தவரையில், பருவ காலங்கள் மற்றும் வானிலையக் கணிப்பது ஜோதிடத்திற்கு நிகரானது; செய்வினை, பில்லி, சூனியம் போன்றது எனவே அது ஹராம். வானிலை முன்னறிவிப்புகளை தாலிபான்களும் மாந்திரீக செயலாகக் கருதினர். பருவ காலங்களை அல்லாஹ் மட்டுமே அறிய முடியும் அது அவனது விதியின் கீழ்வருகிறது. அதை முன்கூட்டியே கணிப்பது அல்லாஹ்வின் ஆளுமையில் குறுக்கீடு செய்வதைப் போன்றது. அவ்வாறு முன்னீடு செய்பவர்களை அழிப்பது அல்லாஹ்விற்கு செய்யும் தொண்டாகும். இதற்கென்று கூடுதல் ஹூரிகள் வழங்கப்படலாம்.

2003 –ல் ஃபிரான்ஸ் அரசு உதவியுடன் ஆப்கானிஸ்தானில் மீண்டும் வானிலை மையம் நிறுவப்பட்டிருக்கிறது. அது எத்தனை காலம் இருக்குமோ?

நிலவை பிச்சு ஒட்டின அல்லா

அல்லாவும் உலகவியலும் -62.



இஸ்லாமிற்கும் மூடத்தனத்திற்கும் சம்பந்தமில்லையா?
இஸ்லாமிய நூல்கள், போதனைகள் பகுத்தறிவு நிறைந்தவைகளா, அல்லது சும்மா அடிச்சுவிடு காசா நஷ்டம்ங்கிற கதையா?
வானத்துல உள்ள இட்லிய பிச்சு ஒட்டிய அல்லா
வானவியல் ஆய்வுகளில் மனிதர்களின் முன்னேற்றம் பிரபஞ்சத்துடன் ஒப்பிடுகையில் குறைவு என்றாலும், மனித வரலாற்றுடன் ஒப்பிடுகையில் மீப்பெரும் சாதனைகள் வானவியலில் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன.
விண்கற்களின் மோதல்கள் தொடங்கி நெபுலாக்கள், புழுத்துளைகள் ஈறாக வானவியல் மாற்றங்களை நுணுக்கமாக கவனித்துக்கொண்டிருக்கிறான்.
ஒரு கோளோ, விண்மீனோ, விண்கற்களோ உடைந்துபோய் மீண்டும் ஒட்டிக்கொன்டு பழைய நிலையிலேயே செயல்படமுடியும் என்பதற்கான எந்தவித வாய்ப்பும் வானவியலில் இல்லை.
ஆனால் குரானில் அப்படியான ஒரு நிகழ்ச்சி குறிப்பிடப்பட்டிருக்கிறது.
குர்ஆன்
54:1. (இறுதி) நேரம் நெருங்கி விட்டது; சந்திரனும் பிளந்து விட்டது.
54:2. எனினும், அவர்கள் ஓர் அத்தாட்சியைப் பார்த்தால், (அதைப்) புறக்கணித்து விடுகிறார்கள்; “இது வழமையாக நடைபெறும் சூனியம் தான்” என்றும் கூறுகிறார்கள்.
இந்த குரான் வசனத்தின் விளக்கமாக சில ஹதீஸ்களும் இருக்கின்றன.
புஹாரி:-
3636. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்
நபி(ஸல்) அவர்களின் காலத்தில் சந்திரன் இரண்டு துண்டுகளாகப் பிளவுபட்டது. உடனே, நபி(ஸல்) அவர்கள், 'நீங்கள் சாட்சியாக இருங்கள்' என்று (மக்களை நோக்கிக்) கூறினார்கள்.
3868.
அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்
இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் (அவர்கள் இறைதூதர்தாம் என்பதை உறுதிப்படுத்தும் விதத்தில்) தங்களுக்கு ஒரு சான்றைக் காட்டும்படி மக்காவாசிகள் கேட்டுக்கொண்டார்கள். அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் சந்திரனை இரண்டு துண்டுகளாகக் (பிளந்திருக்கக்) காட்டினார்கள் எந்த அளவிற்கென்றால், மக்காவாசிகள் அவ்விரு துண்டுகளுக்கிடையே ‘ஹிரா’ மலையைக் கண்டார்கள்.
3869.
“நாங்கள் நபி அவர்களுடன் மினாவில் இருந்தபோது சந்திரன் பிளவுபட்டது உடனே நபி அவர்கள் நீங்கள் சாட்சியாக இருங்கள் என்று கூறினார்கள். இரண்டு துண்டுகளில் ஒன்று (ஹீரா) மலையின் திசையில் சென்றது”  (இன்னும் 3870,3871-ம் இருக்குது.)
இதைப்பார்த்த சாட்சி இருக்குதா?
இருக்கே..
4864. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்
இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் சந்திரன் இரண்டு துண்டுகளாகப் பிளந்தது. (பிளவுண்ட சந்திரனின்) ஒரு துண்டு  மலைக்கு மேலேயும் மற்றொரு துண்டு மலைக்குக் கீழேயும் சென்றது. அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நீங்கள் சாட்சியாக இருங்கள். என்று கூறினார்கள்.
4865. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் (மினாவில்) இருந்து கொண்டிருந்தபோது சந்திரன் பிளவுபட்டு இரண்டு துண்டுகளாக மாறிற்று. அப்போது நபி(ஸல்) அவர்கள் எங்களிடம், 'நீங்கள் சாட்சியாக இருங்கள். நீங்கள் சாட்சியாக இருங்கள்' என்று (இரண்டு முறை) கூறினார்கள்.
இதுபோக முஸ்லிம் ஹதீஸ்ல 5395---5399வரை இதே வண்டிதான் ஓடுது.
ரைட்
அதாவது, அன்றைய அரபு மக்கள் முகம்மதுவிடம், நீர் இறைவனின் தூதர்தாம் என்பதற்கும், இறைவன் தான் உம்மிடம் வேதவசனங்களைத் தருகிறான் என்பதற்கும் என்ன அத்தாட்சி? என்று கேட்க அதற்கு முகம்மது, ஆம் நான் இறைவனின் தூதன் தாம் என்று நிலவைப்பிளந்து அதை அத்தாட்சியாக காண்பிக்கிறார்.
ஆனால் மனிதனால் செய்யமுடியாத மிகப்பெரிய அதிசய நிகழ்வான இதைக் கண்டு அன்றைய அரபு மக்களில் யாரும் இஸ்லாத்திற்கு மாறவில்லை என்பது ஆச்சரியம் தான்.
பிளந்த அந்த நிலவு என்ன ஆனது? எவ்வளவு நேரம் இரண்டு துண்டுகளாக இருந்தது? எப்போது மீண்டும் ஒன்றாக இணைந்தது என்பதுகுறித்து குரானிலோ, ஹதீஸ்களிலோ எந்த விளக்கமும் இல்லை.
அதே நேரம் பூமிக்கு இரண்டு நிலவுகள் இருந்து ஒன்று அழிந்துபோய் இன்னொன்று மட்டும் மிச்சமிருப்பதாக யாரும் கூறிவிட முடியாது என்பதால், உடைந்த அந்த நிலவே ஒட்டிக்கொண்டு இப்போதும் தொடர்ந்து பூமியை சுற்றிக்கொண்டிருக்கிறது என்று நம்புவோமாக‌. வேற வழியில்லை.
1400 ஆண்டுகளுக்கு முன்னுள்ள அந்த உலகில் குரான், ஹதீஸுக்கு வெளியே, இப்படி ஒரு நிகழ்வு நடந்ததற்கான எந்த ஒரு பதிவும் இல்லை.
கிபி ஐந்து ஆறாம் நூற்றாண்டுகளில் நிகழ்ந்த எத்தனையோ நிகழ்வுகள் அரேபியா பற்றிய வரலாற்றில் இடம்பெற்றிருக்க,
ஏழாம் நூற்றாண்டில் நிகழ்ந்த, ஆக மிகப்பெரும் அதிசய நிகழ்வான இந்த நிலவு இரண்டான செய்தி உலகின் வேறெந்தப் பகுதியிலும் பதிவு செய்யப்பட்டதாக தகவல் இல்லை.
ஏன் அன்றைய அரேபியாவின் வேறு ஊர்களில் கூட இதை யாரும் கண்டதாக சாட்சியில்லை.
இப்படியிருக்க நிலவு பிளந்ததை எந்த அடிப்படையில் ஏற்பது? இப்போது தந்திர விற்பன்னர்கள் தொடர்வண்டியை மறைப்பது, தாஜ்மஹாலை மறைப்பது என்று வித்தை செய்து காட்டுகிறார்களே அதுபோல முகம்மதுவும் தன்னிடம் கேள்விகேட்டு நச்சரித்துக் கொண்டிருந்தவர்களுக்கு மட்டும் வித்தை காட்டி விட்டாரா? (பார்க்க:- 54:2.
அப்படியும் எடுத்துக்கொள்ள முடியாது.
ஏனென்றால் அந்த குரான் வசனம் (54:1) நேரடியாக மிகத் தெளிவாகவே இருக்கிறது “சந்திரனும் பிளந்துவிட்டது” என்று.
தவிரவும் நிலவு உடைந்தது மறுமை நாளுக்கான அத்தாட்சி என்றும் குர்ஆன் 54:2 கூறுகிறது.
மேலும் சில ஹதீஸ்களும் அப்படித்தான் கூறுகின்றன.
மறுமை நாள் என்பது உலகில் மக்கள் வாழ்ந்தது போதும் என இறைவன் முடிவு செய்து உலகை அழிக்கும் நாள் என்பது இஸ்லாமிய மார்க்க ஐதீகம்.
அந்த மறுமை நாளுக்கான அத்தாட்சிகள் என்று சில நிகழ்வுகள் சொல்லப்பட்டிருக்கின்றன.
அதில் இந்த நிலவு உடைந்ததும் ஒன்று.
அந்த அத்தாட்சிகள் நிகழ நிகழ மறுமை நாள் நெருங்கி வந்துகொண்டிருக்கிறது என்பது பொருள்.
இதைத்தான் அந்த வசனம் குறிப்பிடுகிறது, “நேரம் நெருங்கிவிட்டது சந்திரனும் பிளந்து விட்டது” ஆக நிலவு உடைந்தது கட்டுக்கதையோ, கண்கட்டு வித்தையோ அல்ல உண்மையான நிகழ்வு இஸ்லாமியர்களைப் பொருத்தவரையில் மட்டும்.
முகம்மதுவுக்கு சுத்தியிருந்தவன் அதை சூனியம்னு நினைச்சான்... (54:2)
அதில் ஒரு லாஜிக் இருக்குது.
ஆனால்...
முகம்மது இட்லியை (நிலா) பிச்சபோது..
அங்கே மணி என்ன?..
இந்தியாவில் அப்போது என்ன நேரம்?..
உலகத்தோட வேறெந்தெந்த பகுதிக்குலாம்... இது அத்தாட்சி?
கண்ணெதிரே பார்த்தவனே சூனியம்னு சொல்ற லட்சணத்துல....
கண்ணாலேயே பார்க்காதவன்லாம்... என்ன சொல்வான்ங்கிற அடிப்படை அறிவுகூட அல்லாவுக்கு இல்ல.. போகட்டும் முகம்மதுவுக்குமா இல்ல!!!!!..
இன்னும் நம்ம மூளை செத்த முமீனுகள் சந்திரன் பிளந்திடுச்சுன்னு பொலம்புவது ஏன்?.. சிந்திக்கமாட்டார்களா?..
அதுசரி... சட்டியில் இருந்தாத்தானே அகப்பையில் வரும்..
மலைபகுதியில் தெரிஞ்சதுன்னு ஹதீஸ் சொல்லுது பாருங்க...
மேகக்கூட்டத்துக்கு நடுவால உண்டாகும் வெப்பச்சலனம் காரணமாக ரெண்டு நிலாவாக... தெரிஞ்சிருக்கும்.. மழைநேரத்துல... சிலநேரம் உச்சிப்பொழுதில்... இரண்டு வானவில்கூட தெரியும்...
அபூர்வமாக... சூரியனை சுற்றி முழுவட்டமாகவும் வானவில் தெரியும்...
அதுமாதிரியான தோற்றப்பிழைதான்... இந்த நிலா பிஞ்சுபோன கதையும்...
அதிலேயே ஒரு ஹதீஸ் 4864. விளக்கம் சொல்லுது பாருங்க..
ஒருதுண்டு மலைக்கு மேலேயும், மறுதுண்டு மழைக்கு கீழேயும்னு தெளிவாக... நிச்சயமாக மேகக்கூட்டத்துக்கு நடுவால வந்த தோற்றப்பிழைதான்...
இது உண்மைங்கிறதுக்கான  ஆதாரத்தை... குர்ஆன் 54:2 தெளிவா சொல்லுது...
இது வழமையாக நடைபெறும் சூனியம்தான் அப்படின்னு...
அதாவது அந்த மக்களுக்கு... இது போல நிலா பிஞ்சுபோனது ஒன்னும் புது செயல் அல்ல...
அவனுக ஏற்கனவே பலமுறை பார்த்ததுதான்...
ஆனால்... அது தோற்றப்பிழைதான் அப்படின்னு புரிஞ்சுக்கிற அளவுக்குதான் அந்த மக்களுக்கு அறிவில்லை...
அதையே... தங்களுக்கு சாதகமாக்கி... ரப்பும்... ரப்போட லாஸ்ட் ரெப்பும்.. அத்தாட்சி.. ஆட்டுக்குட்டின்னு சொல்லி... கதையளந்திட்டாக....


முஹம்மது <= பவிஷ்ய புராணம்

As per  Bhavishya Purana   (Parva 3, Khand 3, Adhya 3, verses 5-6) that "An illiterate   mleccha   [foreigner] teacher will appear, Mah...