ஈஸாவும், முகம்மதுவும் ஒரே அல்லாஹ் அனுப்பின ஆட்கள்தானா??

அல்லாவும் உலகவியலும் -36.

ஈஸா-வும், முகம்மது-வும் ஒரே அல்லா அனுப்பின ஆட்களா?.

ஈஸாவும், முகம்மதுவும் ஒரே அல்லாவின்  தூதர்கள் அல்ல. அடிப்படையில் இருந்தே இருவரின் போதனைகளும் வேறுபட்டவை.

இன்று, பல இஸ்லாமியர்கள் முகம்மது போதித்த வசனங்களையே இயேசுவும் போதித்தார் என நம்பி வருவது பெரிதும் வியப்புக்குரியது.

அனைத்து நபிமார்களையும் ஒரே கண்ணோட்டத்தில் காண்பதாக இஸ்லாமிய பெருமக்கள் கூறினாலும் அவர்கள் சமுதாயத்தில் முகம்மதுவின் போதனைகளுக்கும் வழிகாட்டுதல்களுக்கும் தான் முதல் மரியாதை என்பதை மறுப்பதற்கில்லை.

இதனால் பிற இறைதூதர்கள் கூறியது என்ன என்பதை கூட அறியாத நிலையில் இன்றைய இஸ்லாமியர்கள் உள்ளனர்.
இயேசுவின்  போதனைகளும் வழிகாட்டுதலும் இஸ்லாமோடு சிறிதளவும் பொருந்தாது.
 கிறிஸ்தவம் காட்டும் பாதை இஸ்லாமின் வழிகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டது.
இரு மார்க்கங்களுக்கும் உள்ள முரண்பாடுகளை இஸ்லாமிய "#தோழர்"-களுக்கு எடுத்துக்காட்டவே இந்த பதிவு.
இக்கட்டுரையில் இயேசுவுக்கும்  முகம்மதுவுக்கும் உள்ள இருபத்து எட்டு முக்கியமான வேறுபாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

1) அயலாரோடு நட்பு கொள்ளுதல் பற்றி

முகம்மது:

குர்ஆன் 3:118 - "நம்பிக்கை கொண்டோரே! உங்களை விடுத்து மற்றவர்களை உற்ற நண்பர்களாக்காதீர்கள்!"

குர்ஆன் 3:28 - "இவ்வாறு செய்பவருக்கு அல்லாஹ்விடம் இருந்து பாதுகாப்பு எதுவும் இல்லை"

இயேசு:

பைபிள் (மத்தேயு 5:43,44) - "உனக்கடுத்தவனைச் சிநேகித்து, உன் சத்துருவைப் பகைப்பாயாக என்று சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்..."

பைபிள் (மத்தேயு 5: 45) - "இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்தில் இருக்கிற உங்கள் பரம பிதாவுக்கு புத்திரராய் இருப்பீர்கள்..."

2) போர் புரிதல் பற்றி

முகம்மது:

குர்ஆன் 2:216 - "உங்களுக்கு வெறுப்பாக இருப்பினும் போர் செய்வது உங்களுக்குக் கடமை ஆக்கப்பட்டுள்ளது..."

இயேசு:

பைபிள் (மத்தேயு 26:52) - "உன் பட்டயத்தை திரும்ப அதின் உறையிலே போடு; பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்து போவார்கள்"

3) பழிவாங்குதல் பற்றி

முகம்மது:

குர்ஆன் 2:194 - உங்களிடம் வரம்பு மீறியோரிடம் அவர்கள் வரம்பு மீறியது போன்ற அதே அளவு நீங்களும் வரம்பு மீறுங்கள்!

இயேசு:

பைபிள் (மத்தேயு 5:41) - ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம் வரப் பலவந்தம் பண்ணினால், அவனோடு இரண்டு மைல் தூரம் போ.

4) சிறந்த நற்செயல் குறித்து

முகம்மது:

அபூதர் அல்ஃகிஃபாரீ அவர்கள் கூறியதாவது:நான் நபி அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! நற்செயல்களில் சிறந்தது எது?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வதும் அவனது பாதையில் அறப்போர் புரிவதும் ஆகும்" என்று பதிலளித்தார்கள்.....

(முஸ்லிம்: நூல் 1, எண் 136 - ரஹ்மத் அறக்கட்டளை தமிழாக்கம்)

இறைத்தூதர் அவர்களிடம் ஒருவர் வந்து, "ஜிஹாத் என்னும் இறைவழியில் புரியும் அறப்போருக்குச் சமமான ஒரு நற்செயலை எனக்கு அறிவியுங்கள்" என்று கேட்டதற்கு நபி அவர்கள் "அப்படி எதையும் நான் காணவில்லை" என்று கூறிவிட்டு, "அறப்போர் வீரன் போருக்காகப் புறப்பட்டுச் சென்று விட்டால் அவனுக்கு இணையான நற்செயல் புரிந்திட வேண்டி நீ உன் வணக்கத் தலத்திற்குச் சென்று இடைவிடாமல் தொழுது கொண்டும் தொடர்ந்து நோன்பு நோற்றுக் கொண்டும் இருக்க உன்னால் முடியுமா?' என்று கேட்டார்கள். அதற்கு அம்மனிதர், 'அது யாரால் முடியும்?' என்று பதிலளித்தார்.

(புகாரி: நூல் 56, எண் 2785 - அப்துல் காதிர் உமரி தமிழாக்கம்)

இயேசு:

பைபிள் (மத்தேயு 22:37,38) - ....."உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனதோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து. இதுவே தலை சிறந்த முதன்மையான கட்டளை. உன்மீது நீ அன்பு கூறுவது போல உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூறுவாயாக என்பது இதற்கு இணையான இரண்டாவது கட்டளை"....

5) விவாகரத்து பற்றி

முகம்மது:

குர்ஆன் 2:231 - "பெண்களை நீங்கள் விவாகரத்துச் செய்தால் அவர்கள் தமக்குரிய காலக்கெடுவை நிறைவு செய்வதற்குள் நல்ல முறையில் அவர்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள்! அல்லது நல்ல முறையில் விட்டு விடுங்கள்!....."

இயேசு

பைபிள் (மத்தேயு 5: 32) -  ".....நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; வேசித்தன முகாந்தரத்தினால் ஒழிய தன் மனைவியைத் தள்ளிவிடுகிறவன், அவளை விபசாரம் செய்யப் பண்ணுகிறவனாய் இருப்பான்; அப்படித் தள்ளி விடப்பட்டவளை விவாகம்பண்ணுகிறவனும் விபசாரஞ் செய்கிறவனாய் இருப்பான்....."

6) பொய் கூறுதல் பற்றி

முகம்மது:

...."பரஸ்பரம் பிணக்கு கொண்ட இருதரப்பாரிடம் நல்லதைப் புனைந்து கூறி மக்களிடையே சமாதானத்தை ஏற்படுத்துபவர் பொய்யர் அல்லர். அவர் நல்லதையே சொல்கிறார்; நன்மையையே எடுத்துரைக்கிறார்".....

(முஸ்லிம்: நூல் 45, ஹதீஸ் எண் 5079 - ரஹ்மத் அறக்கட்டளை தமிழாக்கம்)

இயேசு:

பைபிள் (மத்தேயு 5:37) - "உள்ளதை உள்ளது என்றும், இல்லதை இல்லது என்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும்"

7) பரலோக வாழ்வை குறித்து

முகம்மது:

குர்ஆன் 44:51-54 - "பயபக்தியுடையவர்கள் நிச்சயமாக அச்சமற்ற இடத்தில் இருப்பார்கள். சுவனச் சோலைகளிலும், நீர் ஊற்றுகளிலும் இருப்பார்கள். ஸுன்துஸ், இஸ்தப்ரக் ஆகிய அழகிய பட்டாடைகள், பிதாம்பரங்கள் அணிந்து ஒருவரை ஒருவர் முகம் நோக்கி இருப்பார்கள். இவ்வாறே அங்கு நடைபெறும்; மேலும் அவர்களுக்கு ஹூருல் ஈன்களை நாம் மண முடித்து வைப்போம்"

குர்ஆன் 56:16-24 - "பொன்னிழைகளால் ஆக்கப் பெற்ற கட்டில்களின் மீது - ஒருவரையொருவர் முன்னோக்கியவர்களாக, அவற்றின் மீது சாய்ந்து இருப்பார்கள்....அங்கு இவர்களுக்கு ஹூருல் ஈன் என்னும் நெடிய கண்களுடைய கன்னியர் இருப்பர். மறைக்கப்பட்ட முத்துக்களைப் போல் அவர்கள் இருப்பார்கள். இவையாவும் சுவர்க்க வாசிகள் இம்மையில் செய்து கொண்டிருந்த செயல்களுக்கு கூலியாகும்"

இயேசு:

பைபிள் (மத்தேயு 22:29-32) - உங்களுக்கு மறைநூலும் தெரியாது; கடவுளின் வல்லமையும் தெரியாது. எனவே தான் தவறான கருத்தைக் கொண்டு இருக்கிறீர்கள். ஏனெனில் உயிர்த்தெழுந்தவர்களுள் யாரும் திருமணம் செய்து கொள்வதில்லை; அவர்கள் விண்ணகத் தூதரைப் போல் இருப்பார்கள்.

8) விபச்சாரம், கல்லெறிதல் பற்றி

முகம்மது:

இம்ரான் பின் ஹுஸைன் அவர்கள் கூறியதாவது: விபச்சாரத்தால் கர்ப்பமுற்றிருந்த ஜுஹைனா குலத்தைச் சேர்ந்த ஒரு பெண் அல்லாஹ்வின் தூதர் அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! தண்டனைக்குரிய ஒரு குற்றத்தை நான் செய்துவிட்டேன். என்மீது தண்டனையை நிலை நாட்டுங்கள்" என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் அவர்கள் அப்பெண்ணின் காப்பாளரை அழைத்துவரச் செய்து, "இவளை நல்ல முறையில் கவனித்து வாருங்கள். குழந்தை பிறந்ததும் இவளை என்னிடம் அழைத்து வாருங்கள்" என்று கூறினார்கள். காப்பாளர் அவ்வாறே செய்தார். பின்னர் அல்லாஹ்வின் தூதர் அவர்கள் உத்தரவிட அவள்மீது அவளுடைய துணிகள் சுற்றப்பட்டன. பிறகு அல்லாஹ்வின் தூதர் அவர்கள் உத்தரவிட அவளுக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றப்பட்டது. பிறகு அல்லாஹ்வின் தூதர் அவர்கள் அவளுக்காக இறுதித் தொழுகை நடத்தினார்கள். அப்போது உமர் அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! இவளுக்காகத் தாங்கள் தொழ வைக்கிறீர்களா? இவள் விபச்சாரம் புரிந்தவள் ஆயிற்றே?" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் அவர்கள், "அவள் அழகிய முறையில் மன்னிப்புத் தேடிவிட்டாள். மதீனா வாசிகளில் எழுபது பேரிடையே அது பங்கிடப்பட்டாலும் அவர்கள் அனைவருக்கும் போதுமானதாக அமையும். உயர்ந்தோன் அல்லாவுக்காகத் தன் உயிரையே அர்ப்பணித்த இப்பெண்ணின் பாவ மன்னிப்பை விடச் சிறந்ததை நீர் கண்டுள்ளீரா?" என்று கேட்டார்கள்.

(முஸ்லிம் : நூல் 29, ஹதீஸ் எண் 3501 - ரஹ்மத் அறக்கட்டளை தமிழாக்கம்)

இயேசு:

பைபிள் (யோவான் 8:3-11) - அப்பொழுது விபசாரத்திலே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஸ்திரீயை வேதபாரகரும் பரிசேயரும் அவரிடத்தில் கொண்டு வந்து, அவளை நடுவே நிறுத்தி:போதகரே, இந்த ஸ்திரீ விபசாரத்தில் கையும் மெய்யுமாய்ப் பிடிக்கப்பட்டாள். இப்படிப்பட்டவர்களைக் கல்லெறிந்து கொல்ல வேண்டும் என்று மோசே நியாயப்பிரமாணத்தில் நமக்குக் கட்டளை இட்டிருக்கிறாரே, நீர் என்ன சொல்லுகிறீர் என்றார்கள். அவர் மேல் குற்றம் சுமத்துவதற்கான காரணம் உண்டாகும் பொருட்டு அவரைச் சோதிக்கும்படி இப்படிச் சொன்னார்கள். இயேசுவோ குனிந்து, விரலினால் தரையிலே எழுதினார். அவர்கள் ஓயாமல் அவரைக் கேட்டுக்கொண்டு இருக்கையில், அவர் நிமிர்ந்து பார்த்து: உங்களில் பாவம் இல்லாதவன் இவள் மேல் முதலாவது கல்லெறியக்கடவன் என்று சொல்லி, மறுபடியும் குனிந்து, தரையிலே எழுதினார். அவர்கள் அதைக் கேட்டு, தங்கள் மனச்சாட்சியினால் கடிந்து கொள்ளப்பட்டு, பெரியோர் முதல் சிறியோர் வரைக்கும் ஒவ்வொருவராய்ப் போய் விட்டார்கள். இயேசு தனித்திருந்தார், அந்த ஸ்திரீ நடுவே நின்றாள். இயேசு நிமிர்ந்து அந்த ஸ்திரீயைத் தவிர வேறொருவரையுங் காணாமல்: ஸ்திரீயே, உன்மேல் குற்றஞ்சாட்டினவர்கள் எங்கே? ஒருவனாகிலும் உன்னை ஆக்கினைக்கு உள்ளாகத் தீர்க்கவில்லையா என்றார். அதற்கு அவள்: இல்லை, ஆண்டவரே, என்றாள். இயேசு அவளை நோக்கி: நானும் உன்னை ஆக்கினைக்கு உள்ளாகத் தீர்க்கிறதில்லை; நீ போ, இனிப் பாவஞ் செய்யாதே என்றார்.

9) நிந்தனைக்கு தண்டனை/மன்னிப்பு

முகம்மது:

இறைத்தூதர் அவர்கள், "கஅப் இப்னு அஷ்ரஃபைக் கொல்வதற்கு தயாராய் இருப்பவர் யார்? ஏனெனில், அவன் அல்லாஹ்வுக்கும், அல்லாஹ்வின் தூதருக்கும் தொல்லை கொடுத்து விட்டான்" என்று கூறினார்கள். உடனே முஹம்மது இப்னு மஸ்லமா எழுந்து, "நான் அவனைக் கொல்ல வேண்டுமென்று தாங்கள் விரும்புகிறீர்களா? இறைத்தூதர் அவர்களே!" என்று கேட்க, நபி அவர்கள், "ஆம்" என்று பதிலளித்தார்கள். உடனே, முஹம்மத் இப்னு மஸ்லமா, "நான் அவனைக் குதூகலப்படுத்தி நம்ப வைப்பதற்காக உங்களைக் குறைகூறி ஏதேனும் சொல்ல எனக்கு அனுமதி தாருங்கள்" என்று கேட்டார்கள். நபி அவர்கள், "சரி சொல்" என்றார்கள்.........உடனே அவர்களின் சகாக்கள் அவனைக் கொன்று விட்டனர். பிறகு அவர்கள் அனைவரும் நபி அவர்களிடம் வந்து நடந்ததைத் தெரிவித்தனர்......

(புகாரி: நூல் 64, எண் 4037 - அப்துல் காதிர் உமரி தமிழாக்கம்)

கஅப் இப்னு அஷ்ரப் ஒரு யூத கவிஞர், இஸ்லாத்தை நிந்தித்து கவிபாடிய குற்றத்திற்காக முகமது அவர்களால் கொலை செய்யப்பட்டவர். எனினும் முகமது பிற மதத்தவர்களை நிந்தித்து கவிபாட முஸ்லிம்களை பணித்தார்.

பராஉ அறிவித்தார் - நபி அவர்கள், 'பனூ குறைழா' நாளில் கவிஞர் ஹஸ்ஸான் இப்னு ஸாபித் அவர்களிடம், "இணை வைப்பவர்களைத் தாக்கி வசைக்கவி பாடுங்கள். ஜிப்ரீல் உங்களுடன் உறுதுணையாக இருப்பார்" என்று கூறினார்கள்.

(புகாரி: நூல் 64, எண் 4123 - அப்துல் காதிர் உமரி தமிழாக்கம்)

இயேசு:

பைபிள் (லூக்கா 23: 33-35) - கபாலஸ்தலம் என்று சொல்லப்பட்ட இடத்தில் அவர்கள் சேர்ந்த பொழுது, அவரையும், அவருடைய வலது பக்கத்தில் ஒரு குற்றவாளியையும், அவருடைய இடது பக்கத்தில் ஒரு குற்றவாளியையும் சிலுவைகளில் அறைந்தார்கள். அப்பொழுது இயேசு: பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். அவருடைய வஸ்திரங்களை அவர்கள் பங்கிட்டுச் சீட்டு போட்டார்கள். ஜனங்கள் நின்று பார்த்து கொண்டிருந்தார்கள். அவர்களுடனே கூட அதிகாரிகளும் அவரை இகழ்ந்து: இவன் மற்றவர்களை இரட்சித்தான், இவன் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட கிறிஸ்துவானால் தன்னைத் தானே இரட்சித்து கொள்ளட்டும் என்றார்கள்.

10) நிராகரிப்போர் பற்றி

முகம்மது:

"அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என உறுதிமொழி கூறி, என்னையும் எனக்குக் கிடைத்துள்ள மார்க்கத்தையும் நம்புகின்றவரை இந்த மக்களுடன் போரிடுமாறு எனக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. இதை அவர்கள் செயல்படுத்தினால் தமது உயிரையும் செல்வத்தையும் என்னிடம் இருந்து காத்துக் கொள்வார்கள்....."

(முஸ்லிம்: நூல் 1 எண் 34 - ரஹ்மத் அறக்கட்டளை தமிழாக்கம்)

இயேசு:

பைபிள் (லூக்கா 9:53,54,55) - அவர் எருசலேமுக்குப் போக நோக்கமாய் இருந்தபடியால் அவ்வூரார் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை. அவருடைய சீஷராகிய யாக்கோபும் யோவானும் அதைக் கண்ட போது: ஆண்டவரே, எலியா செய்தது போல, வானத்தில் இருந்து அக்கினி இறங்கி இவர்களை அழிக்கும்படி நாங்கள் கட்டளையிட உமக்குச் சித்தமா என்று கேட்டார்கள். அவர் திரும்பிப் பார்த்து: நீங்கள் இன்ன ஆவியுள்ளவர்கள் என்பதை அறியீர்கள் என்று அதட்டி, மனுஷகுமாரன் மனுஷருடைய ஜீவனை அழிக்கிறதற்கு அல்ல, இரட்சிக்கிறதற்கே வந்தார் என்றார். அதன்பின்பு அவர்கள் வேறொரு கிராமத்துக்குப் போனார்கள்.

11) பாவ அறிக்கை

முகம்மது:

"இறைவா!.... நான் முந்திச் செய்த, பிந்திச் செய்கின்ற, இரகசியமாகச் செய்த, பகிரங்கமாகச் செய்த பாவங்களை மன்னித்துவிடு....."

(சஹீஹ் புகாரி: நூல் 1 எண் 1120 - அப்துல் காதிர் உமரி தமிழாக்கம்)

இயேசு:

பைபிள் (யோவான் 8:46) - "என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக் கூடும்?"

12) மார்க்க உரிமை பற்றி

முகம்மது:

குர்ஆன் 9:5 - சங்ககைமிக்க மாதங்கள் கழிந்து விட்டால் முஷ்ரிக்குகளைக் கண்ட இடங்களில் வெட்டுங்கள், அவர்களைப் பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள், ஒவ்வொரு பதுங்கும் இடத்திலும் அவர்களைக் குறி வைத்து உட்கார்ந்திருங்கள் - ஆனால் அவர்கள் தவ்பா செய்து மீண்டு, தொழுகையையும் கடைப்பிடித்து ஜகாத்தும் கொடுத்து வருவார்களானால் அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.

இயேசு:

பைபிள் (மத்தேயு 10:14) - எவனாகிலும் உங்களை ஏற்று கொள்ளாமலும், உங்கள் வார்த்தைகளைக் கேளாமலும் போனால், அந்த வீட்டையாவது பட்டணத்தையாவது விட்டுப் புறப்படும் போது, உங்கள் கால்களில் படிந்த தூசியை உதறிப்போடுங்கள்.

13) அசுத்த ஆவிகளை எதிர்கொள்ளுதல்

முகம்மது:

ஆயிஷா அறிவித்தார் - நபி அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டது. அதன் வாயிலாக, தாம் செய்யாத ஒரு செயலைத் தாம் செய்திருப்பதாக அவர்கள் எண்ணிக் கொள்ளும்படி அவர்களுக்கு பிரமையூட்டப்பட்டது.

(சஹீஹ் புகாரி - நூல் 58, எண் 3175 - அப்துல் காதிர் உமரி தமிழாக்கம்)

இயேசு:

பைபிள் (லூக்கா 4: 33-36) - ஜெப ஆலயத்திலே அசுத்த ஆவி பிடித்திருந்த ஒரு மனுஷன் இருந்தான். அவன்: ஐயோ! நசரேயனாகிய இயேசுவே, எங்களுக்கும் உமக்கும் என்ன? எங்களைக் கெடுக்கவா வந்தீர்? உம்மை இன்னாரென்று அறிவேன்; நீர் தேவனுடைய பரிசுத்தர் என்று உரத்த சத்தமிட்டான். அதற்கு இயேசு: நீ பேசாமல் இவனை விட்டுப் புறப்பட்டுப்போ என்று அதை அதட்டினார்; அப்பொழுது பிசாசு அவனை ஜனங்களின் நடுவிலே விழத்தள்ளி, அவனுக்கு ஒரு சேதமும் செய்யாமல், அவனை விட்டுப் போய்விட்டது. எல்லாரும் ஆச்சரியப்பட்டு: இது என்ன வார்த்தையோ! அதிகாரத்தோடும் வல்லமையோடும் அசுத்த ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார், அவைகள் புறப்பட்டுப்போகிறதே என்று ஒருவரோடொருவர் பேசி கொண்டார்கள்.

14) அற்புத செயல்கள்

முகம்மது:

குர்ஆன் 29:50 - “அவருடைய இறைவனிடம் இருந்து அவர் மீது அத்தாட்சிகள் ஏன் இறக்கப்படவில்லை?” என்றும் அவர்கள் கேட்கிறார்கள்; “அத்தாட்சிகள் எல்லாம் அல்லாஹ்விடம் உள்ளன; ஏனெனில் நான் வெளிப்படையாக அச்ச மூட்டி எச்சரிக்கை செய்பவன் தான்” என்று நபியே நீர் கூறுவீராக.

இயேசு:

பைபிள் (மத்தேயு 11:4-6) - அதற்கு இயேசு மறுமொழியாக, "நீங்கள் கேட்பவற்றையும் காண்பவற்றையும் யோவானிடம் போய் அறிவியுங்கள். பார்வை அற்றோர் பார்வை பெறுகின்றனர்; கால் ஊனமுற்றோர் நடக்கின்றனர்; தொழுநோயாளர் நலம் அடைகின்றனர்; காது கேளாதோர் கேட்கின்றனர்; இறந்தோர் உயிர் பெற்று எழுகின்றனர்; ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது. என்னைத் தயக்கம் இன்றி ஏற்றுக் கொள்வோர் பேறு பெற்றோர்" என்றார்.

15) பொருளாசை

முகம்மது:

குர்ஆன் 8:41 - "முஃமின்களே! உங்களுக்குப் போரில் கிடைத்த வெற்றிப் பொருள்களிலிருந்து நிச்சயமாக ஐந்தில் ஒரு பங்கு அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும்; அவர்களுடைய பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் உரியதாகும்...."

இயேசு:

பைபிள் (மத்தேயு 4:8-10) - பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து: நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்து கொண்டால், இவைகளை எல்லாம் உமக்குத் தருவேன் என்று சொன்னான். அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்து கொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.

16) தூதருக்கும் மனிதருக்கும் உள்ள பாரபட்சம்

முகம்மது:

குர்ஆன் 33:50 - நபியே! உமது மனைவியரில் யாருக்கு அவர்களின் மணக்கொடையைக் கொடுத்து விட்டீரோ அவர்களையும், அல்லாஹ் உமக்கு போர்க் கைதிகளாகக் கொடுத்த அடிமைப் பெண்களையும், உமது தந்தையின் சகோதரரின் புதல்விகள், உமது தந்தையின் சகோதரிகளுடைய புதல்விகள், உமது தாயின் சகோதரருடைய புதல்விகள், உமது தாயின் சகோதரிகளுடைய புதல்விகள் ஆகியோரில் உம்முடன் ஹிஜ்ரத் செய்தோரையும் உமக்கு மணமுடிக்க நாம் அனுமதித்துள்ளோம். நபிக்காக தன்னைத் தானே அர்ப்பணம் செய்த நம்பிக்கை கொண்ட பெண்ணையும் நபி அவரை மணக்க விரும்பினால் அனுமதித்துள்ளோம். உமக்குச் சங்கடம் ஏற்படக் கூடாது என்பதற்காக நம்பிக்கை கொண்டோருக்கு இல்லாமல் உமக்கு மட்டும் சிறப்பான சட்டமாகும். மற்றவர்களுக்கு அவர்களின் மனைவியர் மற்றும் அடிமைகள் குறித்து ஏற்படுத்தியுள்ளதை அறிவோம். அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.

இயேசு:

பைபிள் (யோவான் 13:4-15) -  போஜனத்தை விட்டெழுந்து, வஸ்திரங்களைச் கழற்றி வைத்து, ஒரு சீலையை எடுத்து, அரையிலே கட்டிக் கொண்டு, பின்பு பாத்திரத்தில் தண்ணீரை வார்த்து, சீஷருடைய கால்களைக் கழுவவும், தாம் கட்டிக் கொண்டிருந்த சீலையினால் துடைக்கவும் தொடங்கினார். அவர் சீமோன் பேதுருவினிடத்தில் வந்த போது, அவன் அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் என் கால்களைக் கழுவலாமா என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் செய்கிறது இன்னதென்று இப்பொழுது நீ அறியாய், இனிமேல் அறிவாய் என்றார். பேதுரு அவரை நோக்கி: நீர் ஒருக்காலும் என் கால்களைக் கழுவப்படாது என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் உன்னைக் கழுவாவிட்டால் என்னிடத்தில் உனக்குப் பங்கில்லை என்றார். அதற்குச் சீமோன் பேதுரு: ஆண்டவரே, என் கால்களை மாத்திரமல்ல, என் கைகளையும் என் தலையையும் கூட கழுவ வேண்டும் என்றான். இயேசு அவனை நோக்கி: முழுகினவன் தன் கால்களை மாத்திரம் கழுவ வேண்டியதாய் இருக்கும், மற்றப்படி அவன் முழுவதும் சுத்தமாய் இருக்கிறான்; நீங்கள் சுத்தமாய் இருக்கிறீர்கள்; ஆகிலும் எல்லாரும் அல்ல என்றார். தம்மைக் காட்டிக் கொடுக்கிறவனை அவர் அறிந்திருந்தபடியினால் நீங்கள் எல்லாரும் சுத்தமுள்ளவர்கள் அல்ல என்றார். அவர்களுடைய கால்களை அவர் கழுவின பின்பு, தம்முடைய வஸ்திரங்களைத் தரித்துக் கொண்டு, திரும்ப உட்கார்ந்து, அவர்களை நோக்கி: "நான் உங்களுக்குச் செய்ததை அறிந்திருக்கிறீர்களா? நீங்கள் என்னைப் போதகர் என்றும், ஆண்டவர் என்றும் சொல்லுகிறீர்கள். நீங்கள் சொல்லுகிறது சரியே, நான் அவர் தான். ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்கள் கால்களைக் கழுவினது உண்டானால், நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள். நான் உங்களுக்குச் செய்தது போல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்" என்றார்.

17) குழந்தைகள் பற்றி

முகம்மது:

ஸஅப் பின் ஜஸ்ஸாமா அவர்கள் கூறியதாவது: நான், "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் இணைவைப்பாளர்களின் பெண்களையும் குழந்தைகளையும் இரவு நேரத்தில் தாக்க வேண்டிய நிலை சில சந்தர்ப்பங்களில் ஏற்பட்டு விடுகிறதே?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அவர்களும் எதிரிகளைச் சேர்ந்தவர்கள் தாம்" என்று விடையளித்தார்கள்.

(முஸ்லிம்: நூல் 32, எண் 3590 - ரஹ்மத் அறக்கட்டளை தமிழாக்கம்)

இயேசு:

பைபிள் (மாற்கு 10:13-16) - சிறு பிள்ளைகளை அவர் தொடும்படிக்கு அவர்களை அவரிடத்தில் கொண்டு வந்தார்கள்; கொண்டு வந்தவர்களைச் சீஷர்கள் அதட்டினார்கள். இயேசு அதைக் கண்டு விசனமடைந்து: சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடம் கொடுங்கள்; அவர்களைத் தடை பண்ணாதிருங்கள்; தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது. எவனாகிலும் சிறு பிள்ளையைப் போல் தேவனுடைய ராஜ்யத்தை ஏற்று கொள்ளாவிட்டால், அவன் அதில் பிரவேசிப்பதில்லை என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி, அவர்களை அணைத்துக் கொண்டு, அவர்கள்மேல் கைகளை வைத்து, அவர்களை ஆசீர்வதித்தார்.

18) பிறருக்காய் உயிர்நீத்தல்

முகம்மது:

அனஸ் பின் மாலிக் அவர்கள் கூறியதாவது: உஹுதுப் போர் நாளில் ஒரு கட்டத்தில் அல்லாஹ்வின் தூதர் அவர்கள் அன்சாரிகளில் எழுவரும் குறைஷியரில்  இருவரும் மட்டுமே தம்முடன் இருக்க தனித்து விடப்பட்டார்கள். மற்ற தோழர்கள் சிதறி ஓடிவிட்டனர். இந்நிலையில் அல்லாஹ்வின் தூதர் அவர்களை எதிரிகள் நெருங்கிய போது, "நம்மிடம் இருந்து இவர்களை விரட்டியடிப்பவர் யார்? "அவருக்குச் சொர்க்கம் கிடைக்கும்"; அல்லது "அவர் சொர்க்கத்தில் என்னுடன் இருப்பார்"என்று கூறினார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர் முன்னேறிச் சென்று போரிட்டார். இறுதியில் அவர் கொல்லப்பட்டார். பிறகு மீண்டும் அல்லாஹ்வின் தூதர் அவர்களை எதிரிகள் நெருங்கினார்கள். அப்போது "நம்மிடமிருந்து இவர்களை விரட்டியடிப்பவர் யார்? "அவருக்குச் சொர்க்கம் கிடைக்கும்"; அல்லது "அவர் சொர்க்கத்தில் என்னுடன் இருப்பார்" என்று கூறினார்கள். அப்போது அன்சாரிகளில் மற்றொரு மனிதர் முன்னேறிச் சென்று எதிரிகளுடன் போரிட்டார். அவரும் கொல்லப்பட்டார். இவ்வாறே ஒருவர் பின் ஒருவராகச் சென்று அன்சாரிகள் எழுவரும் கொலை செய்யப்பட்டனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் அவர்கள் தம்முடனிருந்த குறைஷித் தோழர்களிடம், "நாம் நம்முடைய அன்சாரித் தோழர்களிடம் நியாயமாக நடந்துகொள்ள வில்லை" என்று கூறினார்கள்.

(முஸ்லிம்: நூல் 32, எண் 3663 - ரஹ்மத் அறக்கட்டளை தமிழாக்கம்)

இயேசு:

பைபிள் (ஏசாயா 53:3-5) - அவர் அசட்டைபண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாய் இருந்தார்; அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக் கொண்டோம்; அவர் அசட்டை பண்ணப்பட்டிருந்தார்; அவரை எண்ணாமற் போனோம். மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக் கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம். நம்முடைய மீறுதல்களின் நிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களின் நிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.

19) மனைவியர் பற்றி

முகம்மது:

i) 13 பெண்களை மணந்துள்ளார், அடிமைப்பெண்களை கொண்டவர்.
கதீஜா (595–619)
சவுதா பிந்த் சமா (619–632)
ஆயிஷா பிந்த் அபி பக்ர் (619–632)
அப்சா ப்ந்த் உமர் (624–632)
சாய்னாப் பிந்த் குசைமா (625–627)
இந்த் பிந்த் அபி உமைய்யா (629–632)
சானாப் பிந்த் ஜாஷ் (627–632)
ஜுவாரியா பிந்த் அல்-ஹரித் (628–632)
ரமியா பிந்த் அபி சுஃபியான் (628–632)
ரைஹானா பிந்த் சாய்த் (629–631)
சஃபியா பிந்த் ஹுயாய் (629–632)
மைமுனா பிந்த் அல்-ஹரித் (630–632)
மரியா அல்-கிப்தியா (630–632)
(மூலம் - தமிழ் விக்கிப்பீடியா - தொடுப்பு)

ii) ஒன்பது வயது சிறுமியுடன் உறவு கொண்டுள்ளார்

உர்வா இப்னு ஸுபைர் அறிவித்தார் - நபி அவர்கள் மதீனாவுக்கு வெளியேறுவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கதீஜா இறப்பெய்தி விட்டார்கள். அதன் பின்னர் நபி அவர்கள் இரண்டு ஆண்டுகள் அல்லது கிட்டத்தட்ட இரண்டாண்டுகள் மக்காவில் தங்கியிருந்தார்கள். ஆயிஷா ஆறு வயதுடையவர்களாய் இருக்கும் போது அவர்களை மணந்தார்கள். பிறகு ஆயிஷா ஒன்பது வயதுடையவர்களாக இருக்கும் போது அவர்களுடன் நபி அவர்கள் வீடு கூடினார்கள்.

(சஹீஹ் புகாரி: நூல் 63, எண் 3896 - அப்துல் காதிர் உமரி தமிழாக்கம்)

iii) வளர்ப்பு மகனின் மனைவியை மணந்துள்ளார்

குர்ஆன் 33:37 - நபியே! எவருக்கு அல்லாஹ்வும் அருள் புரிந்து, நீரும் அவர் மீது அருள் புரிந்தீரோ, அவரிடத்தில் நீர்: “அல்லாஹ்வுக்குப் பயந்து நீர் உம் மனைவியை உம்மிடமே நிறுத்தி வைத்துக் கொள்ளும்” என்று சொன்ன போது அல்லாஹ் வெளியாக்க இருந்ததை, மனிதர்களுக்குப் பயந்து நீர் உம்முடைய மனத்தில் மறைத்து வைத்திருந்தீர்; ஆனால் அல்லாஹ் அவன் தான், நீர் பயப்படுவதற்குத் தகுதியுடையவன்; ஆகவே ஜைது அவளை விவாக விலக்கு செய்துவிட்ட பின்னர் நாம் அவளை உமக்கு மணம் செய்வித்தோம்; ஏன் என்றால் முஃமின்களால் வளர்க்கப்பட்டவர்கள், தம் மனைவிமார்களை விவாகரத்துச் செய்தபின், அவர்களை வளர்த்தவர்கள் அப்பெண்களை மணந்து கொள்வதில் யாதொரு தடையுமிருக்கக் கூடாது என்பதற்காக இது நடைபெற்றே தீர வேண்டிய அல்லாஹ்வின் கட்டளையாகும்.

இயேசு:

 - மனைவியர் இல்லை. உறவுகளை துறந்து சந்நியாச வாழ்க்கை நடத்தியவர்.

பைபிள் (மத்தேயு 12:47-50) - ஒருவன் அவரை நோக்கி: உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரரும் உம்மோடே பேசவேண்டும் என்று வெளியே நிற்கிறார்கள் என்றான். தம்மிடத்தில் இப்படிச் சொன்னவனுக்கு அவர் பிரதியுத்தரமாக: என் தாயார் யார்? என் சகோதரர் யார்? என்று சொல்லி, தம்முடைய கையைத் தமது சீஷர்களுக்கு நேரே நீட்டி: இதோ, என் தாயும் என் சகோதரரும் இவர்களே! பரலோகத்தில் இருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ அவனே எனக்குச் சகோதரனும் சகோதரியும் தாயுமாய் இருக்கிறான் என்றார்.

20) கொலை, களவு, வன்முறை

முகம்மது:

பட்டியலிட இடம் போதவில்லை - தொடுப்பு இங்கே.

இயேசு:

பைபிள் (யோவான் 19:4,5) - பிலாத்து மறுபடியும் வெளியே வந்து: நான் இவனிடத்தில் ஒரு குற்றமும் காணேன் என்று நீங்கள் அறியும்படிக்கு, இதோ, உங்களிடத்தில் இவனை வெளியே கொண்டு வருகிறேன் என்றான். இயேசு, முள்முடியும் சிவப்பங்கியும் தரித்தவராய், வெளியே வந்தார். அப்பொழுது பிலாத்து அவர்களை நோக்கி: இதோ, இந்த மனுஷன் என்றான்.

21) பாலுணர்வு குறித்து

முகம்மது:

குர்ஆன் 4:24 - உங்கள் அடிமைப் பெண்களைத் தவிர கணவனுள்ள பெண்களும் அல்லாஹ் உங்களுக்கு விதித்த சட்டம். இவர்களைத் தவிர மற்றவர்களை விபச்சாரமாக இல்லாமல் உங்கள் பொருட்களைக் கொடுத்து திருமணம் செய்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அவர்களில் யாரிடம் இன்பம் அனுபவிக்கிறீர்களோ அவர்களுக்குரிய மணக் கொடைகளை கட்டாயமாக அவர்களிடம் கொடுத்து விடுங்கள். நிர்ணயம் செய்த பின் ஒருவருக்கொருவர் திருப்தியடைந்தால் உங்கள் மீது குற்றம் இல்லை. அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.

இயேசு:

பைபிள் (மத்தேயு 5:27,28) -  விபசாரஞ் செய்யாதிருப்பாயாக என்பது பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டது  என்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரம் செய்தாயிற்று.

22) மறுமை பயனை மிகுதியாய் பெறுவோர்

முகம்மது:

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் அவர்கள், என்னிடம் "அபூசயீத்! அல்லாஹ்வை இறைவனாகவும் இஸ்லாத்தை மார்க்கமாகவும் முஹம்மத் அவர்கள் இறைத்தூதர் எனவும் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டவருக்குச் சொர்க்கம் உறுதியாகிவிட்டது" என்று கூறினார்கள். இதைக் கேட்டு வியப்படைந்த நான், "மீண்டும் ஒரு முறை சொல்லுங்கள் அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டேன். மீண்டும் அவ்வாறே அவர்கள் சொல்லி விட்டு, இன்னொன்றும் சொல்கிறேன், சொர்க்கத்தில் ஓர் அடியார் நூறு படித்தரங்களுக்கு உயர்த்தப்படுவார். ஒவ்வோர் இரு படித்தரங்களுக்கிடையே வானத்திற்கும் பூமிக்கும் இடையிலுள்ளதைப் போன்ற தொலைவு இருக்கும்" என்றார்கள். நான், "அது என்ன நற்செயலுக்குக் கிடைக்கும் வெகுமதி, அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டேன். அதற்கு "அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிதல், அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிதல்" என்று விடையளித்தார்கள்.

(சஹீஹ் புகாரி: நூல் 31, எண் 3829 - அப்துல் காதிர் உமரி தமிழாக்கம்)

இயேசு:

பைபிள் (மத்தேயு 5:10-12) - "நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது. என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள் பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாய் இருப்பீர்கள். சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாய் இருக்கும்; உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே"

23) முகம்மது பற்றி ஈஸாவின் முன்னறிவிப்பு

முகம்மது :

குர்ஆன் 61:6 - "...மர்யமின் குமாரர் ஈஸா (இயேசு): “இஸ்ராயீல் மக்களே! எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை மெய்ப்பிப்பவனாகவும்; எனக்குப் பின்னர் வரவிருக்கும் “அஹமது” என்னும் பெயருடைய தூதரைப் பற்றி நன்மாராயம் கூறுபவனாகவும் அல்லாஹ்வின் தூதனாக உங்களிடம் வந்துள்ளேன்” என்று கூறிய வேளையை நபியே! நீர் நினைவு கூர்வீராக!...."

இயேசு சொல்கிறார்:

பைபிள் (மத்தேயு 24:24,25) - "கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத் தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள். இதோ, முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன்...."

24) உலக முடிவை குறித்து

முகம்மது:

நபி அவர்கள் அறிவித்தார்கள் - நீங்கள் யூதர்களுடன் போரிடாத வரை இறுதி நாள் வராது. எந்த அளவிற்கு என்றால் கல்லின் பின்னால் யூதன் ஒருவன் ஒளிந்து கொண்டு இருப்பான். அந்தக் கல், 'முஸ்லிமே! இதோ, என் பின்னே ஒரு யூதன் ஒளிந்து கொண்டு இருக்கிறான். அவனை நீ கொன்று விடு" என்று கூறும் - என அபூ ஹுரைரா அறிவித்தார்.

(சஹீஹ் புகாரி - நூல் 56, எண் 2926 - அப்துல் காதிர் உமரி தமிழாக்கம்)

இயேசு:

பைபிள் (மத்தேயு 5:9-14) - "...உங்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக் கொடுத்து, உங்களைக் கொலை செய்வார்கள்; என் நாமத்தினிமித்தம் நீங்கள் சகல ஜனங்களாலும் பகைக்கப்படுவீர்கள். அப்பொழுது, அநேகர் இடறலடைந்து, ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுத்து, ஒருவரை ஒருவர் பகைப்பார்கள். அநேகங் கள்ளத் தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள். அக்கிரமம் மிகுதி ஆவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோம்.முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான். ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகம் எங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்...."

25) வாழ்த்து கூறுதல்

முகம்மது:

இறைத்தூதர் அவர்கள் கூறினார்கள் - யூதர்கள் உங்களுக்கு சலாம் சொன்னால் அவர்களில் சிலர் "அஸ்ஸாமு அலைக்க" (உங்களுக்கு மரணம் உண்டாகட்டும்) என்றே கூறுவர். எனவே, அவர்களுக்கு பதிலாக "வ அலைக்க" (அவ்வாறே உனக்கு உண்டாகட்டும்) என்று சொல். இதை அப்துல்லாஹ் இப்னு உமர் அறிவித்தார்.

(சஹீஹ் புகாரி: நூல் 79, எண் 6257 - அப்துல் காதிரி உமரி தமிழாக்கம்)

இயேசு:

பைபிள் (மத்தேயு 5:44,47,48) - "நான் உங்களுக்கு சொல்லுகிறேன்...உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்....உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களை துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்... உங்கள் சகோதரரை மாத்திரம் வாழ்த்துவீர்களானால், நீங்கள் விசேஷித்துச் செய்கிறது என்ன? ஆயக்காரரும் அப்படி செய்கிறார்கள் அல்லவா? ஆகையால், பரலோகத்தில் இருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராய் இருக்கிறது போல, நீங்களும் பூரண சற்குணராய் இருக்கக்கடவீர்கள்"

26) நம்பிக்கையாளருக்கான குணநலன்கள்

முகம்மது:

குர்ஆன் 9:123 - நம்பிக்கை கொண்டோரே! உங்களை அடுத்திருக்கும் இறை மறுப்போருடன் போரிடுங்கள்! உங்களிடம் கடுமையை அவர்கள் காணட்டும். அஞ்சுவோருடனே அல்லாஹ் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!

இயேசு:

பைபிள் (மத்தேயு 5:16) - ".....மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது"

27) இறுதி வார்த்தைகள் சில

முகம்மது:

"யூதர்கள்மீதும் கிறிஸ்தவர்கள்மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகுக! அவர்கள் தம் நபிமார்களின் அடக்கத்தலங்களை வணக்கத்தலங்களாக ஆக்கிக் கொண்டார்கள்"

(முஸ்லிம்: நூல் 5, எண் 924 - ரஹ்மத் அறக்கட்டளை தமிழாக்கம்)

இயேசு:

பைபிள் (லூக்கா 23:34) - "பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே"

28) ஒருவர் இறந்தார் ஒருவர் ஜீவிக்கிறார்

முகம்மது:

.....நபி மரணித்த இடத்திலுள்ள விரிப்பை அகற்றி அங்கேயே அபூ தல்ஹா குழி தோண்டி அதில் பக்கவாட்டில் ஒரு குழி அமைத்தார்கள்...ஆயிஷா கூறுகிறார்கள் - “இரவின் நடுநிசியில் மண்வெட்டிகளின் சப்தத்தை வைத்தே நபி அடக்கம் செய்யப்பட்டதை அறிந்து கொண்டோம்”.....

(முஹம்மது வாழ்க்கை வரலாறு: பக்கம் 112 -  உமர் ஷரீஃப் காஸிமி)

இயேசு:

குர்ஆன் 43:61 - "நிச்சயமாக ஈஸா மறுமை நாளின் அத்தாட்சியாவார்; ஆகவே, நிச்சயமாக நீங்கள் இதில் சந்தேகப்பட வேண்டாம்..."

1) ஈஸாவும் , முகம்மதுவும் அல்லா அனுப்பிவிட்ட தூதர்கள்தானா?
😄😄😄😄😄😄

2) மறுமைநாள்தான் இம்மை வாழ்வுக்கு இறுதிநாள் எனில்... கடைசி தூதர் முகம்மதுவா?.. ஈஸாவா?..
😄😄😄😍😍😍

No comments:

Post a Comment

முஹம்மது <= பவிஷ்ய புராணம்

As per  Bhavishya Purana   (Parva 3, Khand 3, Adhya 3, verses 5-6) that "An illiterate   mleccha   [foreigner] teacher will appear, Mah...