அல்லாஹ் அனைத்தும் அறிந்தவனா??

அல்லாவும் உலகவியலும் -51.

எல்லாம் தெரிஞ்சவன் அல்லாஹ்வா?..
அல்லது முகம்மதுவுக்கு தெரிஞ்சதை மட்டுமே தெரிஞ்சிருந்தவன் தான் அல்லாஹ்வா?..

நம்ம முல்லாக்களின் நாயகர் முகம்மது ஹிஜ்ரத் போன சில வருசத்துல பத்ரு போரையெல்லாம் சிறப்பா முடிச்சு.. காலத்துக்குப்பிறகு.. கொஞ்ச வருசத்துல அவருக்கும் மற்ற எல்லார் போன்றும் காபாவுக்கு போய் உம்ராச்செய்ய ஆசை வந்திடுச்சு.
புஹாரி:- 3184. பராஉ-(ரலி) அறிவித்தார்.
(ஹுதைபிய்யா ஆண்டில்) நபி(ஸல்) அவர்கள் உம்ரா செய்ய நாடியபோது மக்காவாசிகளிடம் ஆளனுப்பி மக்காவினுள் நுழைய அனுமதி கேட்டார்கள். அவர்கள் (அடுத்த ஆண்டு உம்ரா செய்ய வரலாம் என்றும்) மூன்று நாள்களுக்கு மேல் அங்கு தங்கக் கூடாது என்றும் அவர்களில் எவரையும் (தம் மார்க்கத்தை ஏற்கும்படி) அழைக்கக் கூடாது என்றும் நிபந்தனையிட்டனர். அவர்கள் இருவருக்குமிடையிலான (ஒப்பந்த) ஷரத்துகளை அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) எழுதலானார்கள். அப்போது அவர்கள், 'இது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செய்த சமாதான ஒப்பந்தமாகும்' என்று எழுதினார்கள். மக்காவாசிகளில், 'நீங்கள் இறைத்தூதர்(ஸல்) தாம் என்று நாங்கள் நம்பியிருந்தால் உங்களை (மக்காவினுள் நுழையவிடாமல்) தடை செய்திருக்கமாட்டோம். மேலும், உங்களை நாங்கள் (ஏற்று) பின்பற்றவும் செய்திருப்போம். மாறாக, 'இது அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது செய்த சமாதான ஒப்பந்தம்' என்று எழுதுங்கள்' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது தான். மேலும், அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அல்லாஹ்வின் தூதருமாவேன்' என்று கூறினார்கள். ஆனால், நபி(ஸல்) அவர்கள் எழுதத் தெரியாதவர்களாக இருந்தார்கள். எனவே, அலீ(ரலி) அவர்களிடம், ' 'இறைத்தூதர்' என்னும் சொல்லை அழித்து விடுங்கள்' என்று உத்தரவிட்டார்கள். அலீ(ரலி), 'அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அதை ஒருபோதும் அழிக்க மாட்டேன்' என்று மறுத்தார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அப்படியானால் அ(ந்தச் சொல் இருக்கும் இடத்)தை எனக்குக் காட்டுங்கள்' என்று கேட்டார்கள். அலீ(ரலி) நபி(ஸல்) அவர்களுக்கு அதைக் காட்டினார்கள். நபி(ஸல்) அவர்கள் அதைத் தம் கரத்தால் அழித்தார்கள். பின்பு (அடுத்த ஆண்டு), நபி(ஸல்) அவர்கள் (உம்ராவிற்காக) மக்காவிற்குள் நுழைந்து மூன்று நாள்கள் கழிந்தவுடன் மக்காவாசிகள் அலீ(ரலி) அவர்களிடம் வந்து, 'உங்கள் தோழரை (மக்காவைவிட்டுப்) புறப்படும் படி கூறுங்கள்' என்று கேட்டுக் கொண்டார்கள். உடனே, அலீ(ரலி) அவர்களிடம் அதைத் தெரிவித்தார்கள். நபி(ஸல்) அவர்கள், 'ஆமாம் (புறப்பட வேண்டியது தான்)' என்று கூறிவிட்டுப் புறப்பட்டார்கள்.
Volume :3 Book :58

 ஓயாம சண்டைபோட்டு கொஞ்சம் ரெஸ்ட்டுக்காக சமாதான ஒப்பந்தம் ஒன்னு போட்டாக..
அதுக்கு ஹூதைபிய்யா ஒப்பந்தும்னு பேரு..

புஹாரி  2701. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உம்ரா செய்ய நாடியவர்களாக (மக்காவை நோக்கிப்) புறப்பட்டார்கள். குறைஷிகளில் இறைமறுப்பாளர்கள் அவர்களை இறையில்லம் கஅபாவிற்குச் செல்லவிடாமல் தடுத்தனர். எனவே, நபி(ஸல்) அவர்கள் ஹுதைபிய்யாவில் தம் தியாகப் பிராணியை அறுத்து (பலியிட்டு)விட்டுத் தம் தலையை மழித்தார்கள். மேலும், அவர்களுடன், 'வரும் ஆண்டில், நான் (என் தோழர்களுடன்) உம்ரா செய்ய அனுமதிக்கப்பட வேண்டும்; வாள்களைத் தவிர வேறு ஆயுதங்களை நாங்கள் எடுத்து வர மாட்டோம்; குறைஷிகள் விரும்புகிற வரை மட்டுமே மக்காவில் தங்கியிருப்போம்' என்னும் நிபந்தனையின் பேரில் சமாதான ஒப்பந்தம் செய்தார்கள். அவர்களிடம் செய்த சமாதான ஒப்பந்தத்தின்படியே (அடுத்த ஆண்டு மக்கா நகரினுள்) நுழைந்தார்கள். அங்கு மூன்று நாள்கள் தங்கி (முடித்து)விட்டபோது, குறைஷிகள் நபி(ஸல்) அவர்களை (மக்காவைவிட்டு) வெளியேறும்படி உத்தரவிட, நபி(ஸல்) அவர்களும் வெளியேறிவிட்டார்கள்.
Volume :3 Book :53

2700. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) கூறினார்.
ஹுதைபிய்யா நிகழ்ச்சியின்போது நபி(ஸல்) அவர்கள் இணைவைப்பவர்களுடன் மூன்று நிபந்தனைகளின் பேரில் சமாதான ஒப்பந்தம் செய்தார்கள். அவையாவன:
1. நபி(ஸல்) அவர்கள் இணைவைப்பவர்களிடையேயிருந்து தம்மிடம் (மதீனாவுக்கு) வருபவரை (அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டிருந்தாலும் கூட) அவர்களிடமே திருப்பியனுப்பி விட வேண்டும். தங்களிடம் (மக்காவிற்கு) வரும் முஸ்லிம்களை இணைவைப்பவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் திருப்பியனுப்ப மாட்டார்கள்.
2. நபி(ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் அடுத்த ஆண்டு (உம்ரா செய்ய) மக்காவினுள் நுழைந்து மூன்று நாள்கள் தங்கலாம்.
3. (ஆனால்,) வாள், வில் போன்ற ஆயுதங்களை உறையிலிட்டுக் கொண்டே உள்ளே நுழைய வேண்டும்.
இந்த சமாதான ஒப்பந்தம் பேசப்பட்டுக் கொண்டிருந்தபோது அபூ ஐந்தல்(ரலி), தம் (கால்) சங்கிலிகளுடன் தத்தித் தத்தி (நடந்து) வந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் இணைவைப்பவர்களிடமே அவர்களைத் திருப்பியனுப்பிவிட்டார்கள்.
அபூ அப்தில்லாஹ் புகாரீயாகிய நான் கூறுகிறேன்:
முஅம்மல்(ரஹ்) சுஃப்யான்(ரஹ்) அவர்களிடமிருந்து அறிவித்த அறிவிப்பில் அபூ ஜந்தல்(ரலி) அவர்களைக் குறித்த நிகழ்ச்சியைக் கூறவில்லை.
Volume :3 Book :53
மேலும் 2711. & 2712.

இது  நீ.......ள.........மா..........ன ஹதீஸ் .

ஆனால் நிறைய விசயம் இருக்குது..

2731. & 2732. மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி), மர்வான் இப்னி ஹகம் ஆகிய இருவரும் - ஒருவர் சொன்னதை மற்றவர் உண்மைப்படுத்தியவாறு - கூறினார்.
ஹுதைபிய்யா உடன்படிக்கை நடைபெற்ற காலகட்டத்தில் (மக்காவை நோக்கி) நபி(ஸல்) அவர்கள் புறப்பட்டார்கள். பாதையில் சென்று கொண்டிருந்தபோது நபி(ஸல்) அவர்கள், 'காலித் இப்னு வலீத், குறைஷிகளின் குதிரைப் படையுடன் 'கமீம்' என்னுமிடத்தில் (போர் வியூகத்துடன்) முதல் அணியாக (நம்மை எதிர் கொள்ளக் காத்திருக்கின்றனர். எனவே, வலப்பக்கப் பாதையில் செல்லுங்கள் (காலித் இப்னு வலீதுக்குத் தெரியாமல் மக்காவின் அருகே சென்று விடலாம்)' என்று கூறினார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர்கள் வருவதை காலித் அறியவில்லை. குறைஷி குதிரைப் படையினர் (முஸ்லிம்களுடைய) உம்ரா பயணக்குழுப் படை எழுப்பிய புழுதியைக் கண்டவுடன் (அதன் தளபதியான) காலித் பன் வலீத், குறைஷிகளை எச்சரிப்பதற்காக, குதிரையைக் காலால் உதைத்து விரட்டியவராக (விரைந்து) சென்றார். நபி(ஸல்) அவர்கள் பயணித்துச் சென்று கொண்டிருந்தார்கள். இறுதியில், மக்காவினுள் இறங்கும் வழியாக அமைந்துள்ள சிறிய மலை ஒன்றை அடைந்ததும் ('மிரார்' என்னும் இடத்தில்) அவர்களின் வாகனம் (ஒட்டகம்) மண்டியிட்டு அமர்ந்தது. மக்கள் (அதை எழுப்பி நடக்க வைப்பதற்காக) 'ஹல்ஹல்' என்று அதட்டினார்கள். அது எழும்ப மறுத்து முரண்டு பிடித்தது. உடனே, மக்கள், 'கஸ்வா பிடிவாதம் பிடிக்கிறது, 'கஸ்பா' பிடிவாதம் பிடிக்கிறது' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், 'கஸ்வா பிடிவாதம் பிடிக்கவுமில்லை; பிடிவாதம் பிடிப்பது அதன் குணமுமில்லை. ஆனால், (யமன் நாட்டு மன்னன் அப்ரஹா தலைமையில் யானைப் படை கஅபாவை இடிக்க வந்தபோது) யானையைத் தடுத்த(இறை)வனே அதையும் தடுத்து வைத்திருக்கிறான்' என்று கூறினார்கள். பிறகு, 'என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக (போரைக் கைவிட்டு) அல்லாஹ்வின் புனித(த் தல)ங்களை கண்ணியப்படுத்தும் ஒரு திட்டத்தை அவர்கள் என்னிடம் கேட்டால் அதை நிச்சயம் அவர்களுக்கு நான் (வகுத்துக்) கொடுப்பேன்' என்று கூறினார்கள். பிறகு நபி(ஸல்) அவர்கள் தம் ஒட்டகத்தைத் தட்டி எழுப்பினார்கள். உடனே அது குதித்தெழுந்தது. பிறகு, நபியவர்கள் மக்களைவிட்டுத் திரும்பி ஹுதைபிய்யாவின் எல்லையில் சிறிதளவே தண்ணீர் இருந்த ஒரு பள்ளத்தின்அருகே முகாமிட்டார்கள். மக்கள் அதிலிருந்து சிறிது சிறிதாகத் தண்ணீர் எடுக்கலானார்கள். இறுதியில், அவர்கள் மிச்சம் வைக்காமல் தண்ணீர் முழுவதையும் இறைத்து (அதை காலி செய்து)விட்டார்கள். பிறகு, இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் தாகம் எடுப்பதாக முறையிடப்பட்டது. உடனே, நபி(ஸல்) அவர்கள் தங்களின் அம்புக் கூட்டிலிருந்து ஓர் அம்பை உருவியெடுத்து அதைப் பள்ளத்தில் பேகுதிபடி மக்களுக்கு உத்தரவிட்டார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! (பள்ளத்தில் அம்பைப் போட்டதும்) அதிலிருந்து அவர்களுக்காகத் தண்ணீர் பீறிட்டு வெளிப்பட்டது. அவர்கள் அங்கிருந்து புறப்படும் வரை (தண்ணீர் தாராளமாகக் கிடைத்துக் கொண்டிருந்தது). இந்த நிலையில் புதைல் இப்னு வரகா அல்குஸாயீ அவர்கள், தம் குஸாஆ குலத்தார் சிலருடன் வருகை தந்தார்கள். அவர்கள் திஹாமாவாசிகளிடையே (மக்கா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்களிடையே) நபி(ஸல்) அவர்களின் நலம் நாடும் நம்பிக்கைக்குரியவர்களாக இருந்தனர். புதைல் அவர்கள், '(முஹம்மத் அவர்களே!) கஅப் இப்னு லுஅய், மற்றும் ஆமிர் இப்னு லுஅய் ஆகியோர் ஹுதைபிய்யாவின் வற்றாத ஜீவசுனைகளின் அருகே முகாமிட்டிருக்க, அங்கே அவர்களைவிட்டுவிட்டு (தங்களிடம் செய்தி சொல்ல) வந்துள்ளேன். அவர்களுடன் தாய் ஒட்டகங்களும் தம் குட்டிகளுடன் வந்துள்ளன. அவர்கள் உங்களுடன் போரிட்டு உங்களை இறையில்லம் கஅபாவை (சந்திக்க விடாமல்) தடுக்கப் போகிறார்கள்' என்று கூறினார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள், 'நாங்கள் எவருடனும் போரிடுவதற்காக வரவில்லை. மாறாக, நாங்கள் உம்ரா செய்வதற்காகத் தான் வந்திருக்கிறோம். குறைஷிகள் அடிக்கடி போரிட்டுக் களைத்துப் போயிருக்கிறார்கள். போரின் காரணத்தால் அவர்களுக்கு நிறையவே இழப்பும் ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் விரும்பினால் அவர்களுக்கு ஒரு காலகட்டம் குறிப்பிட்டு சமாதான ஒப்பந்தம் செய்து கொள்கிறேன். அவர்கள் எனக்கும் மக்களுக்குமிடையே (இஸ்லாமியப் பிரச்சாரத்திற்குத்) தடையாக இருக்க வேண்டாம். நான் வெற்றி பெற்றுவிட்டால், அவர்கள் விரும்பினால் மக்களெல்லாம் விரும்பி ஏற்றுக் கொள்ளும் இந்த மார்க்கத்திலேயே இணைந்து கொள்ளட்டும். இல்லையென்றால் (சில நாள்கள்) அவர்களுக்கு ஓய்வாவது கிடைக்கும். அவர்கள் இதற்கு மறுத்துவிட்டால், என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீதாணையாக! நான் என்னுடைய இந்த விவகாரத்திற்காக என் தலை துண்டாம் விடும் வரை அவர்களடன் போரிடுவேன். அல்லாஹ், தன் திட்டத்தை நடத்தியே தீருவான்' என்று கூறினார்கள். 'நீங்கள் சொல்வதை அவர்களுக்கு நான் எடுத்துரைப்பேன்' என்று கூறிவிட்டு புதைல் இப்னு வரகா குறைஷிகளிடம் சென்று, 'நாங்கள் இந்த மனிதரிடமிருந்து உங்களிடம் வந்திருக்கிறோம். அவர் ஒரு விஷயத்தைக் கூறியதை நாங்கள் கேட்டோம். அதை உங்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டுமென்று நீங்கள் விரும்பினால் நாங்கள் அவ்வாறே செய்கிறோம்' என்றார். அப்போது அவர்களிலிருந்த அறிவிலிகள், 'அவரைக் குறித்து எங்களுக்கு எதனையும் நீர் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை' என்று கூறினர். அவர்களில் கருத்துத் தெளிவுடையவர்கள், 'அவரிடமிருந்து நீங்கள் கேட்டதை எடுத்துச் சொல்லுங்கள்' என்று கூறினர். புதைல், 'அவர் இப்படியெல்லாம் சொல்லக் கேட்டேன்' என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னதை அவர்களுக்கு எடுத்துரைத்தார். உடனே, (அப்போது இறைமறுப்பாளராயிருந்த) உர்வா இப்னு மஸ்வூத் அஸ்ஸகஃபீ எழுந்து நின்று, 'என் சமுதாயத்தாரே! நீங்கள் என் தந்தையைப் போல் (என் மீது இரக்கமுடையவர்கள்) அல்லவா?' என்று கேட்டதற்கு அவர்கள், 'ஆம்' என்று பதிலளித்தனர். உர்வா, 'நான் உங்கள் மகனைப் போல் (உங்கள் நலம் நாடுபவன்) இல்லையா?' என்று கேட்டதற்கு அவர்கள், 'இல்லை' என்று பதிலளித்தனர். அப்போது உர்வா, 'உக்காழ் (சந்தை) வாசிகளிடம் உங்களுக்கு உதவும்படி கேட்டதும் அவர்களால் உதவ முடியாத (நிலை ஏற்பட்ட)போது நான் என் வீட்டாரையும் என் குழந்தையையும் எனக்குக் கட்டுப்பட்டவர்களையும் உங்களிடம் கொண்டு வந்து விட்டேன் என்பதும் உங்களுக்குத் தெரியாதா?' என்று கேட்டதற்கு அவர்கள், 'ஆம் (தெரியும்)' என்று பதிலளித்தார்கள். அப்போது அவர், 'முஹம்மது, உங்கள் முன் நல்லதொரு திட்டத்தைச் சமர்ப்பித்துள்ளார். நீங்கள் (அதற்கு) ஒப்புக் கொள்ளுங்கள். அவரிடம்ட என்னைச் செல்ல விடுங்கள்' என்று கூறினார். அதற்கு அவர்கள், 'அவரிடம் (எங்கள் சார்பாகப் பேசச்) செல்லுங்கள்' என்று கூறினர். அவரும் நபி(ஸல்) அவர்களிடம் சென்று பேசத் தொடங்கினார். நபி(ஸல்) அவர்கள் புதைலிடம் சொன்னதைப் போன்றே சொன்னார்கள். அப்போது உர்வா, 'முஹம்மதே! உங்கள் சமுதாயத்தினரை முற்றிலுமாக அழித்து விடுவதை நீங்கள் பொறுத்தமாகக் கருதுகிறீர்களா? உங்களுக்கு முன்னால் அரபுகள் எவரேனும் தம் சமுதாயத்தாரை வேரோடு அழித்தார் என்று நீங்கள் கேள்விப்பட்ட துண்டா? வேறுவிதமான முடிவு ஏற்பட்டாலும்... குறைஷிகள் வென்றாலும்...(அதனால் உங்கள் தோழர்கள் அனைவரும் கொல்லப்பட்டு விடுவார்கள் அல்லவா?) நானோ, அல்லாஹ்வின் மீதாணையாக! பலமுகங்களை (உங்கள் தோழர்களிடம்) பார்க்கிறேன்; மக்களில் பலதரப்பட்டவர்களைப் பார்க்கிறேன்; உங்களைவிட்டுவிட்டு விரண்டோடக் கூடிய (கோழைத்தனமுடையவ)வர்களாகவே (இவர்களை) நான் பார்க்கிறேன்' என்று கூறினார். (இதைக் கேட்ட) அபூ பக்ர்(ரலி) அவரை அக்கால வழக்கப்படி ஏசிவிட்டு, 'நாங்கள் இறைத்தூதரைவிட்டுவிட்டு ஓடி விடுவோமா?' என்று (கோபத்துடன்) கேட்டார்கள். அதற்கு உர்வா, 'இவர் யார்?' என்று கேட்டார். மக்கள் 'அபூ பக்ர்' என்று பதிலளித்தார்கள். அதற்கு உர்வா, 'நீங்கள் முன்பு எனக்கு உதவியிருக்கிறீர்கள். அதற்கான நன்றிக் கடனை நான் உங்களுக்கு இன்னும் தீர்க்கவில்லை. அந்த நன்றிக் கடன் மட்டுமில்லாவிட்டால் நான் உங்களுக்கு (தகுந்த) பதில் கொடுத்திருப்பேன்' என்று கூறிவிட்டு, நபி(ஸல்) அவர்களிடம் பேசத் தொடங்கினார்; நபி(ஸல்) அவர்களுடன் பேசும் போதெல்லாம் அவர்களின் தாடியைப் பிடித்தபடி இருந்தார். அப்போது முகீரா இப்னு ஷுஅபா(ரலி) (கையில்) வாளுடனும் தலையில் இரும்புத் தொப்பியுடனும் நபி(ஸல்) அவர்களின் தலைப்பக்கமாக நின்றிருந்தார்கள். எனவே உர்வா, நபி(ஸல்) அவர்களின் தாடியைப் பிடிக்க முனைந்த போதெல்லாம் முகீரா(ரலி), அவரின் கையை வாளுறையின் (இரும்பாலான) அடிமுனையால் அடித்து, 'உன் கையை அல்லாஹ்வின் தூதருடைய தாடியிலிருந்து அப்புறப்படுத்து' என்று கூறிய வண்ணமிருந்தார்கள். அப்போது உர்வா தன்னுடைய தலையை உயர்த்தி, 'இவர் யார்?' என்று கேட்க மக்கள், 'இவர் முகீரா இப்னு ஷுஅபா' என்று கூறினார்கள். உடனே உர்வா, 'மோசடிக்காரரே! நீர் மோசடி செய்தபோது (உம்மை தண்டனையிலிருந்து பாதுகாத்திட) நான் உழைக்கவில்லையா? என்று கேட்டார். முகீரா இப்னு ஷுஅபா(ரலி) அறியாமைக் காலத்தில் (இஸ்லாத்தைத் தழுவும் முன்பு) ஒரு குலத்தாருடன் (எம்ப்து மன்னனைக் காண) பயணம் சென்றார்கள். அப்போது (அக்குலத்தார் வழியில் குடித்துவிட்டு மயங்கிக் கிடக்க,) அவர்களைக் கொன்றுவிட்டு அவர்களின் பொருட்களை எடுத்தார்கள். (அதற்காக பனூ மாலிக் குலத்தார் முகீரா(ரலி) அவர்களைப் பழிவாங்க முனைந்தபோது அவரின் தந்தையின் சகோதரரான உர்வா தான், அவர்களை உயிரீட்டுத் தொகை கொடுத்து தண்டனையிலிருந்து காப்பாற்றினார்.) பிறகு முகீரா (அங்கிருந்து) வந்து இஸ்லாத்தை ஏற்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'நீ இஸ்லாத்தைத் தழுவியதை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், (நீ அபகரித்துக் கொண்டு வந்த) பொருள்கள் எனக்கு அனுமதிக்கப்படவில்லை' என்று கூறியிருந்தார்கள். - பிறகு உர்வா, நபி(ஸல்) அவர்களின் தோழர்களைத் தம் இரண்டு கண்களால் கூர்ந்து பார்க்கத் தொடங்கினார். அல்லாஹ்வின் மீதாணையாக! நபி(ஸல்) அவர்கள் எப்போது (தொண்டையைச் செருமி) சளி துப்பினாலும், உடனே அதை அவர்களின் தோழர்களில் ஒருவர், தன் கையில் பிடித்துத் தன் முகத்திலும், மேனியிலும் தேய்த்துக் கொள்வார். நபி(ஸல்) அவர்கள் தம் தோழர்களுக்குக் கட்டளையிட்டால் அவர்கள் உடனே அதை நிறைவேற்றிட போட்டி போட்டுக் கொண்டு ஒருவரையொருவர் முந்திக் கொள்வார்கள். நபியவர்கள் உளூச் செய்யும்போது, அவர்கள் உளூச் செய்து எஞ்சிய தண்ணீரைப் பிடித்து (தங்கள் மேனியில் தேய்த்து)க் கொள்வதற்காக ஒருவரோடொருவர் சண்டை போடுமளவிற்குச் செல்வார்கள். நபியவர்களுடன் அவர்கள் பேசும்போது தம் குரல்களைத் தாழ்த்திக் கொள்வார்கள். மேலும், நபியவர்களுக்கு கண்ணியமளிக்கும் விதத்தில் அவர்களைக் கூர்ந்து (நேருக்கு நேர்) பார்க்க மாட்டார்கள். (இவற்றையெல்லாம் உற்றுக் கவனித்து நேரடியாக அறிந்தபின்) உர்வா தன் தோழர்களிடம் சென்று, 'என் சமுதாயத்தாரே! நான் பல அரசர்களிடம் தூதுக் குழுவில் ஒருவனாகச் சென்றுள்ளேன். (உரோம மன்னன்) சீசரிடமும், (பாரசீக மன்னன்) கிஸ்ராவிடமும், (அபிசீனிய மன்னன்) நஜாஷியிடமும் தூதுக் குழுவில் சென்றுள்ளேன். அல்லாஹ்வின் மீதாணையாக! முஹம்மதின் தோழர்கள் முஹம்மத்து அளிக்கிற கண்ணியத்தைப் போல் எந்த அரசருக்கும் அவரின் தோழர்கள் கண்ணியம் அளிப்பதை நான் பார்த்ததேயில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் சளியைத் துப்பினால் அதை அவரின் தோழர்களில் ஒருவர் தம் கையில் ஏந்திக் கொள்கிறார். அதை அவர் தம் முகத்திலும், மேனியிலும் தேய்த்துக் கொள்கிறார். அவர் அவர்களுக்குக் கட்டளையிட்டால் அவரின் கட்டளையை நிறைவேற்ற அவர்கள் ஒருவரோடொருவர் போட்டி போட்டுக் கொண்டு முன்வருகிறார்கள். அவர் உளூச் செய்தால் அவர் உளூச் செய்து எஞ்சிய தண்ணீரைப் பெறுவதற்காக, ஒருவரோடொருவர் சண்டையிடும் அளவிற்குச் செல்வார்கள். அவர் பேசினால், அவரிடம் அவர்கள் தங்களின் குரல்களைத் தாழ்த்திக் கொள்கிறார்கள். அவரை கண்ணியப்படுத்தும் விதத்தில் அவரைக் கூர்ந்து (நேருக்கு நேர்) பார்ப்பதில்லை. மேலும், அவர் உங்கள் முன் நேரிய திட்டம் ஒன்றைச் சமர்ப்பித்துள்ளார். எனவே, அதை ஏற்றுக் கொள்ளுங்கள்' என்று கூறினார். உடனே பனூம்னானா குலத்தைச் சேர்ந்த ஒருவர், 'என்னை அவரிடம் செல்ல விடுங்கள்' என்றார். அதற்கு அவர்கள், 'சரி, செல்லுங்கள்' என்று கூறினர். அவர் நபி(ஸல்) அவர்களிடமும் அவர்களின் தோழர்களிடமும் வந்தபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'இது இன்னார். இவர் இறைவனுக்காக ஹஜ்ஜில் அறுக்கப்படும் தியாக ஒட்டகங்களை கண்ணியப்படுத்துகிற ஒரு குலத்தைச் சேர்ந்தவர். எனவே, இவரிடம் தியாக பலி ஒட்டகத்தை அனுப்பி வையுங்கள்' என்றார்கள். உடனே, அவரிடம் ஒரு தியாக ஒட்டகம் அனுப்பி ஒன்று வைக்கப்பட்டது. மக்கள் 'தல்பியா' கூறியபடி அவரை வரவேற்றார்கள். இதை அவர் கண்டவுடன், 'சுப்ஹானல்லாஹ்! இவர்களை இறையில்லத்திற்கு வரவிடாமல் தடுப்பது சரியில்லையே' என்று (தமக்குள்) கூறினார். தம் தோழர்களிடம் திரும்பிச் சென்றபோது, 'தியாக ஒட்டகங்கங்களுக்கு (அடையாள) மாலை கட்டித் தொங்கவிடப்பட்டு, அவற்றைக் கீறி காயப்படுத்தி அடையாளமிடப்பட்டிருப்பதை கண்டேன். எனவே, இறையில்லத்திற்கு வரவிடாமல் அவர்களைத் தடுப்பதை நான் சரியானதாகக் கருதவில்லை' என்று கூறினார். உடனே, அவர்களில் மிக்ரஸ் இப்னு ஹஃப்ஸ் என்றழைக்கப்பட்ட ஒருவர் எழுந்து, 'என்னை அவரிடம் போக விடுங்கள்' என்று கூறினார். மக்காவாசிகள், 'சரி, நீங்கள் அவரிடம் போங்கள்' என்று கூறினர். முஸ்லிம்களிடம் அவர் சென்றபோது நபி(ஸல்) அவர்கள், 'இவன் மிக்ரஸ் என்பவன். இவன் ஒரு கெட்ட மனிதன்' என்று கூறினார்கள். அவன் (வந்தவுடன்) நபி(ஸல்) அவர்களிடம் பேச ஆரம்பித்தான். அவன் பேசிக் கொண்டிருக்கையில், சுஹைல் இப்னு அம்ர் என்பவர் குறைஷிகளின் தரப்பிலிருந்து வந்தார் அறிவிப்பாளர் இக்ரிமா(ரஹ்) கூறினார்: சுஹைல் இப்னு அம்ர் வந்தபோது நபி(ஸல்) அவர்கள், 'உங்கள் விவகாரம் சுலபமாம்விட்டது' என்று ('ஸஹ்ல்--சுலபம்' என்னும் பொருள் கொண்ட பெயருடைய ஒருவர் வந்ததை நற்குறியாகக் கருதும் வகையில்) கூறினார்கள். சுஹைல் மின் அம்ர் வந்து, '(ஏட்டைக்) கொண்டு வாருங்கள். உங்களுக்கும் எங்களுக்குமிடையிலான (சமாதான ஒப்பந்தத்திற்கான) பத்திரம் ஒன்றை எழுதுவோம்' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் எழுத்தரை அழைத்தார்கள். பின்னர், 'பேரருளாளனும் கருணையன்புடையோனுமான அல்லாஹ்வின் திருப்பெயரல்...' என்று (சமாதான ஒப்பந்தத்திற்கான வாசகத்தை) நபியவர்கள் சொன்னார்கள். சுஹைல், 'ரஹ்மான் - கருணையன்புடையோன்' என்பது என்ன என்று எனக்குத் தெரியாது. ஆயினும், 'இறைவா! என் திருப்பெயரால்..' என்று நீங்கள் முன்பு எழுதிக் கொண்டிருந்ததைப் போல் தான் நான் எழுதுவேன்' என்றார். முஸ்லிம்கள், 'அல்லாஹ்வின் மீதாணையாக! 'பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் - அளவற்ற அருளாளனும் கருணையன்புடையோனுமான அல்லாஹ்வின் திருப்பெயரால்' என்றே இதை எழுதுவோம்' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், ' 'பிஸ்மிக்க அல்லாஹும்ம - இறைவா! உன் திருப்பெயரால்' என்றே எழுதுங்கள்' என்றார்கள். பிறகு நபி(ஸல்) அவர்கள், 'இது இறைத்தூதர் முஹம்மது அவர்கள் செய்த சமாதான ஒப்பந்தம்' என்று (எழுதும்படி வாசகம்) சொன்னார்கள். உடனே சுஹைல், 'இறைத்தூதர் தாம் என்று நாங்கள் நம்பியிருந்தால் இறையில்லத்திற்கு வரவிடாமல் உங்களைத் தடுத்திருக்கவும் மாட்டோம்; உங்களுடன் போரிட்டிருக்கவும் மாட்டோம். மாறாக, 'முஹம்மத் இப்னு அப்தில்லாஹ் - அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது' என்று எழுதுங்கள்' என்று கூறினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் இறைத்தூதர் தாம் என்று நாங்கள் நம்பியிருந்தால் இறையில்லத்திற்கு வரவிடாமல் உங்களைத் தடுத்திருக்கவும் மாட்டோம்; உங்களுடன் போரிட்டிருக்கவும் மாட்டோம். மாறாக, 'முஹம்மத் இப்னு அப்தில்லாஹ் - அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது' என்று எழுதுங்கள்' என்று கூறினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் நான் பொய் சொல்வதாகக் கருதீனாலும் நிச்சயம் நான் இறைத்தூதர் தான். (இருந்தாலும் உங்கள் விருப்பப்படி) முஹம்மத் இப்னு அப்தில்லாஹ் - அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது என்றே எழுதுங்கள்' என்று கூறினார்கள்.
-அறிவிப்பாளர் இமாம் ஸுஹ்ரீ(ரஹ்) கூறினார்.
நபி(ஸல்) அவர்கள், அவர்களுடன் தகராறு செய்யாமல்விட்டுக் கொடுத்து ஒத்துப் போகவிட்டதற்குக் காரணம் அவர்கள், 'அல்லாஹ்வினால் புனிதமானவையாக அறிவிக்கப்பட்ட (மக்கா நகரத்)தை கண்ணியப்படுத்துகிற எந்த ஒரு திட்டத்தை அவர்கள் என்னிடம் கேட்டாலும் அதை அவர்களுக்கு நான் (வகுத்துக்) கொடுப்பேன்' என்று முன்பே சொல்லியிருந்ததை நிறைவேற்றுவதற்காகத்தான்.-
பிறகு சுஹைலுக்கு நபி(ஸல்) அவர்கள், 'எங்களை (இந்த ஆண்டு) இறையில்லத்திற்குச் செல்ல விடாமலும் அதை நாங்கள் வலம்வர விடாமலும் தடுக்கக் கூடாது' என்று (வாசகம்) சொன்னார்கள். உடனே சுஹைல், 'அல்லாஹ்வின் மீதாணையாக! (இதை ஏற்க) முடியாது. (இந்த ஆண்டே உம்ரா செய்ய நாங்கள் உங்களுக்கு அனுமதியளித்தால்) 'நாங்கள் உங்கள் நிர்பந்தத்திற்கு அடிபணிந்து விட்டோம்' என்று அரபுகள் பேசிக் கொள்வார்கள். ஆயினும், வருகிற ஆண்டில் நீங்கள் உம்ரா செய்து கொள்ளலாம்' என்று கூறினார்; அவ்வாறே எழுதினார். மேலும் சுஹைல், 'எங்களிடமிருந்து ஒருவர் உங்களிடம் வந்தால், அவர் உங்கள் மார்க்கத்தில் இருந்தாலும் சரி, அவரை எங்களிடம் நீங்கள் திருப்பியனுப்பி விட வேண்டும்' என்று நிபந்தனையிட்டார். முஸ்லிம்கள், 'சுப்ஹானல்லாஹ்! அவர் முஸ்லிமாக (எங்களிடம்) வந்திருக்க, அவரை எப்படி இணைவைப்பவர்களிடம் திருப்பியனுப்புவது?' என்று வியப்புடன் கேட்டார்கள். அவர்கள் இவ்வாறு ஒப்பந்தம் பேசிக் கொண்டிருக்கும்போது (குறைஷிகளின் தரப்பிலிருந்து ஒப்பந்தம் பேச வந்த) சுஹைல் இப்னு அம்ர்டைய மகன் அபூ ஜந்தல் (தம் கால்கள் பிணைக்கப்பட்டிருக்க) விலங்குகளுடன் தத்தித் தத்தி நடந்து வந்தார்கள். அவர்கள் மக்காவின் கீழ்ப் பகுதியிலிருந்து தப்பி வந்து முஸ்லிம்களிடையே வந்து தஞ்சம் புகுந்தார்கள். உடனே (அவரின் தந்தையான) சுஹைல், 'முஹம்மதே! (ஒப்பந்தப்படி) முதலாவதாக, இவரை எங்களிடம் ஒப்படைக்கும்படி உங்களிடம் கோருகிறேன்' என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நாம் இன்னும் இந்த நிபந்தனையை எழுதி முடிக்கவில்லையே' என்று பதிலளித்தார்கள். அதற்கு சுஹைல், 'அப்படியென்றால், அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களிடம் நான் எந்த அடிப்படையிலும் ஒருபோதும் சமாதானம் செய்து கொள்ள மாட்டேன்' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், 'அப்படியென்றால் இவரை மட்டுமாவது நான் திருப்பியனுப்பாமலிருக்க எனக்கு அனுமதி தாருங்கள்' என்று கூறினார்கள். அதற்கு சுஹைல், 'நான் உங்களுக்கு அனுமதி தர மாட்டேன்' என்று கூறினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'இல்லை, இவரை மட்டுமாவது திருப்பியனுப்பாமல் நிறுத்திக் கொள்ள எனக்கு அனுமதியளியுங்கள்' என்று கூறினார்கள். அதற்கு சுஹைல், 'நான் அனுமதியளிக்கப் போவதில்லை' என்று கூறினார். மிக்ரஸ் என்பவர், 'நாம் அதற்கு உங்களுக்கு அனுமதியளித்து விட்டோம்' என்று கூறினார். அபூ ஜந்தல்(ரலி), 'முஸ்லிம்களே! நான் முஸ்லிமாக (உங்களிடம்) வந்திருக்க, என்னை இணைவைப்பவர்களிடம் திருப்பியனுப்புகிறீர்களா? நான் சந்தித்த துன்பங்களை நீங்கள் (சிந்தித்துப்) பார்க்க மாட்டீர்களா?' என்று கேட்டார். அவர் இறைவழியில் கடுமையாக வேதனை செய்யப்பட்டிருந்தார்.
அப்போது (நடந்ததை) உமர்(ரலி) கூறினார்.
உடனே நான் அல்லாஹ்வின் தூதரிடம் சென்று, 'நீங்கள் சத்தியமாக இறைத்தூதர் இல்லையா?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'ஆம், இறைத்தூதர் தான்' என்று பதிலளித்தார்கள். நான், 'நாம் சத்திய மார்க்கத்திலும் நம் பகைவர்கள் அசத்திய மார்க்கத்திலும் இல்லையா?' என்று கேட்டேன். அதற்கும் நபி(ஸல்) அவர்கள், 'ஆம் (சத்திய மார்க்கத்தில் தான் நாம் இருக்கிறோம். அவர்கள் அசத்திய மார்க்கத்தில் தான் இருக்கிறார்கள்.)' என்று பதிலளித்தார்கள். நான், 'அப்படியானால் (இந்த நிபந்தனைகளை ஏற்று) நம் மார்க்கத்திற்கு நாம் ஏன் இழிவைச் சேர்க்க வேண்டும்?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'நான் அல்லாஹ்வின் தூதராவேன். நான் அவனுக்கு மாறு செய்வதில்லை. அவனே எனக்கு உவதக் கூடியவன்' என்று பதிலளித்தார்கள். நான், 'விரைவில் நாம் இறையில்லம் கஅபாவைத் வலம் வருவோம்' என்று தாங்கள் எங்களுக்கு சொல்லி வந்திருக்கவில்லையா?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'ஆம். ஆனால், நாம் இந்த ஆண்டே கஅபாவுக்குச் செல்வோம் என்று நான் உங்களுக்குச் சொன்னேனா?' எனக் கேட்டார்கள். நான், 'இல்லை' என்று பதிலளித்தேன். நபி(ஸல்) அவர்கள், 'நீங்கள் நிச்சயம் கஅபாவுக்குச் சென்று அதை வலம்வருவீர்கள்' என்று கூறினார்கள். பிறகு நான் அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் சென்று, அபூ பக்ரே, இவர்கள் உண்மையிலேயே அல்லாஹ்வின் துதரல்லவா?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'ஆம்; இறைத்தூதர் தான்' என்று சத்திய மார்க்கத்திலும் நம் பகைவர்கள் அசத்திய மார்க்கத்திலும் இல்லையா?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'ஆம்' என்றார்கள். நான், 'அப்படியென்றால் இதை ஒப்புக் கொண்டு நம் மார்க்கத்திற்கு நாம் ஏன் இழிவைச் சேர்க்க வேண்டும்?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'நண்பரே! இறைத்தூதர், தம் இறைவனுக்கு மாறு செய்ய முடியாது. அவனே அவர்களுக்கு உதவக் கூடியவன். அவர்களின் சுவட்டையே நீங்கள் பின்பற்றுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் சத்திய வழியில் தான் இருக்கிறார்கள்' என்று கூறினார்கள். நான், 'அவர்கள் நம்மிடம், 'நாம் இறையில்லத்திற்குச் சென்று அதை வலம்வந்தோம்' என்று சொல்லவில்லையா?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'ஆம்; (சொன்னார்கள்.) ஆனால், 'நீங்கள் இந்த ஆண்டே அங்கு செல்வீர்கள்' என்று உங்களிடம் சொன்னார்களா?' என்று கேட்டார்கள். நான், 'இல்லை (அவர்கள் அவ்வாறு சொல்லவில்லை)' என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், 'நீங்கள் நிச்சயம் அங்கு சென்று இறையில்லத்தை வலம்வரத்தான் போகிறீர்கள்' என்று கூறினார்கள்.
(ஸுஹ்ரீ(ரஹ்) உமர்(ரலி) தொடர்ந்து சொன்னதாகக் கூறுகிறார்கள்:)
..நான் இப்படி (அதிருப்தியுடன் நபி(ஸல்) அவர்களிடம்) பேசியதற்குப் பரிகாரமாக பல வணக்கங்களைப் புரிந்தேன். பிறகு, நபி(ஸல்) அவர்கள் ஒப்பந்தப் பத்திரத்தை எழுதி முடித்த பின்பு தம் தோழர்களை நோக்கி, 'எழுந்து சென்று குர்பானி கொடுத்துவிட்டு தலைமுடி களைந்து கொள்ளுங்கள்' என்று உத்தரவிட்டார்கள். ஆனால், அவர்களில் ஒருவர் கூட எழுந்திருக்கவில்லை. எனவே, நபி(ஸல்) அவர்கள் மூன்று முறை இவ்வாறு கூறினார்கள். இருந்தும், அவர்களில் எவரும் எழுந்திருக்காத காரணத்தால் (தம் துணைவியார்) உம்து ஸலமா(ரலி) அவர்களிடம் சென்று மக்களிடமிருந்து தாம் சந்தித்த அதிருப்தியை(யும், அதனால் அவர்கள் தமக்குக் கீழ்ப்படியாமலிருப்பதையும்) சொன்னார்கள். உடனே உம்மு ஸலமா(ரலி), 'இறைத்தூதர் அவர்களே! தியாகப் பிராணியை அறுத்துவிட்டுத் தலைமுடி களைந்து கொள்ள வேண்டும் என்பதை விரும்புகிறீர்களா? (நீங்கள் தியாகப் பிராணிகளை அறுத்து முடி களையப் புறப்படுங்கள். நீங்கள் (தியாகப் பிராணிகளான) குர்பானி ஒட்டகங்களை அறுத்துவிட்டு உங்கள் நாவிதரை அழைத்து, அவர் உங்கள் முடியைக் களையும் வரை அவர்களில் எவருடனும் ஒரு வார்த்தையும் பேசாதீர்கள்' என்று (ஆலோசனை) கூறினார்கள். உடனே, நபி(ஸல்) அவர்கள் புறப்பட்டு ஒட்டகங்களை குர்பானி கொடுத்துவிட்டு, தம் நாவிதரை அழைத்துத் தலைமுடியைக் களைந்தார்கள். அதுவரை அவர்களில் எவரிடமும் நபியவர்கள் பேசவில்லை. இவற்றைக் கண்டவுடன் மற்ற நபித்தோழர்களும் எழுந்து சென்று தியாகப் பிராணிகளை அறுத்து, ஒருவர் மற்றவரின் தலைமுடியைக் களையத் தொடங்கினார்கள். ஒருவர் மற்றவரை நெரிசலால் சாகடித்து விடுவார்களோ எனும் அளவிற்குப் போட்டி போட்டுக் கொண்டு (தியாகப் பிராணிகளை அறுக்கவும் முடிகளையவும்) சென்றனர். பிறகு (சமாதான ஒப்பந்தம் அமலில் இருந்த கால கூட்டத்தில்) இறைநம்பிக்கை கொண்ட பெண்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்தனர். உடனே, 'இறை நம்பிக்கையாளர்களே! இறை நம்பிக்கை கொண்ட பெண்கள் ஹிஜ்ரத் செய்து உங்களிடம் வந்தார்களாயின் (அவர்கள் நம்பிக்கையாளர்களா என்பதைச்) சோதித்துப் பாருங்கள். அவர்களின் நம்பிக்கையின் உண்மை நிலையை அல்லாஹ் தான் நன்கறிவான். மேலும், அவர்கள் நம்பிக்கையாளர்கள் தான் எனறு உங்களுக்குத் தெரிந்துவிட்டால் நிராகரிப்பாளர்களிடம் அவர்களைத் திருப்பி அனுப்பாதீர்கள். அவர்கள் நிராகரிப்பாளர்களுக்கு (மனைவியராக இருக்க) அனுமதிக்கப்பட்டவர்கள் அல்லர். நிராகரிப்பாளர்களும் அவர்களுக்கு (கணவர்களாக இருக்க) அனுமதிக்கப்பட்டவர்கள் அல்லர். அவர்களின் (நிராகரிப்பாளர்களான) கணவன்மார்கள் அவர்களுக்கு அளிந்திருந்த மஹ்ரை அவர்களுக்குத் திருப்பிக் கொடுத்து விடுங்கள். மேலும், அவர்களைத் தருமணம் செய்து கொள்வதில் உங்களின் மீது எந்தக் குற்றமும் இல்லை; நீங்கள் அவர்களுக்குரிய மஹ்ரை அவர்களுக்குக் கொடுத்துவிட்டால். மேலும், இறைவனை நிராகரித்துவிட்ட பெண்களை நீங்களும் திருமண உறவில் வைத்துக் கொள்ளாதீர்கள்' என்னும் (திருக்குர்ஆன் 60:10) இந்த வசனத்தை அல்லாஹ் அருளினான். உடனே, உமர்(ரலி), இணைவைக்கும் மார்க்கத்திலிருந்த காலத்தில் தமக்கிருந்த இருமனைவிமார்களை அன்று தலாக் (விவாகரத்து) செய்துவிட்டார்கள். அவ்விருவரில் ஒருவரை முஆவியா இப்னு அபீ சுஃப்யான் அவர்களும் மற்றொரு வரை ஸஃப்வான் இப்னு உமய்யா அவர்களும் மணந்தார்கள். பிறகு, நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்குத் திரும்பி வந்தார்கள். அப்போது குறைஷிகளில் ஒருவரான அபூ பஸீர் என்பவர் முஸ்லிமாக இருக்கும் நிலையில் (மதீனாவுக்கு வருகை தந்தார். உடனே, அவரைத் தேடி(ப் பிடிக்க) குறைஷிகள் இரண்டு பேரை அனுப்பி வைத்தனர். அவர்கள் (நபி(ஸல்) அவர்களிடம் வந்து), 'நீங்கள் எங்களுக்குக் கொடுத்த உறுதி மொழியை நிறைவேற்றுங்கள்' என்று கேட்டனர். உடனே, அவரை அந்த இருவரிடமும் நபி(ஸல்) அவர்கள் ஒப்படைத்தார்கள். அவர்கள் இருவரும் அபூ பஸீர் அவர்களை அழைத்துக் கொண்டு துல்ஹுலைஃபாவை அடைந்தனர். அவர்கள், தம் பேரீச்சம் பழங்களைத் தின்றுகொண்டே (ஒரு மரத்தடியில்) தங்கினார்கள். அபூ பஸீர்(ரலி) அவ்விரு நபர்களில் ஒருவரிடம், 'அல்லாஹ்வின் மீதாணையாக! இன்னானே! உன்னுடைய இந்த வாளை நான் மிக நல்லதாகக் காண்கிறேன்' என்றார். உடனே மற்றொருவர் வாளை உருவி, 'ஆம், அல்லாஹ்வின் மீதாணையாக! இது மிக நல்ல வாள்தான். நான் இதைப் பயன்படுத்திப் பார்த்திருக்கிறேன், மீண்டும் பயன்படுத்திப் பார்த்திருக்கிறேன்' என்றார். அபூ பஸீர் அவர்கள், 'எனக்கு(அதை)க் காட்டு. அதை நான் பார்க்கிறேன்' என்று கேட்டு அவரைத் தன் வசத்தில் கொண்டு வந்து (அந்த வாளால்) குத்திக் கொன்றுவிட்டார். மற்றொருவர் விரண்டோடி மதீனா வரை சென்றார்; ஓடிக் கொண்டே பள்ளிவாசலுக்குள் புகுந்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அவரைக் கண்டபோது, 'இவர் ஏதோ பீதியேற்படுத்தும் விஷயத்தைக் கண்டு விட்டிருக்கிறார்' என்று கூறினார்கள். அவர் நபி(ஸல்) அவர்களிடம் சென்று நின்றபோது, 'அல்லாஹ்வின் மீதாணையாக! என் சகோதரர் கொல்லப்பட்டுவிட்டார். (நீங்கள் அபூ பஸீரைத் தடுக்காவிட்டால்) நானும் கொல்லப்பட்டு விடுவேன்' என்று கூறினார். உடனே அபூ பஸீர் அவர்கள் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் தங்கள் பொறுப்பை நிறைவேற்றிவிட்டான். தாங்கள் என்னை அவர்களிடம் திருப்பியனுப்பி விட்டீர்கள். பிறகு அல்லாஹ், என்னை அவர்களிடமிருந்து காப்பாற்றிவிட்டான்' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், 'இவரின் தாய்க்குக் கேடுண்டாகட்டும். உதவுபவர் எவராவது இவருக்குக் கிடைத்தால் இவர் போர்த் தீயை மறுபடியும் மூட்டி விடுவார்' என்று கூறினார்கள். இதைச் செவியுற்றவுடன் அபூ பஸீர் அவர்கள், நபி(ஸல்) அவர்கள் தம்மை (மீண்டும்) குறைஷிகளிடம் திருப்பியனுப்பி விடுவார்கள் என்பதைப் புரிந்து கொண்டு அங்கிருந்து தப்பியோடி கடலோரத்திற்குச் சென்றார்கள். சுஹைலின் மகன் அபூ ஜந்தல்(ரலி) அவர்களும் குறைஷிகளிடமிருந்து தப்பியோடி அபூ பஸீர் அவர்களுடன் சேர்ந்தார்கள். பிறகு, குறைஷிகளில் இஸ்லாத்தைத் தழுவியவர் (தப்பிச் சென்று) அபூ பஸீர் அவர்களுடன் சேர்ந்து கொள்ளத் தொடங்கினார். இறுதியில், (சிறிது சிறிதாக இப்படி இஸ்லாத்தை ஏற்றவர்கள் மக்காவிலிருந்து தப்பியோடி வந்து) ஒரு குழுவினராக ஒன்று திரண்டுவிட்டனர். அல்லாஹ்வின் மீதாணையாக! ஷாம் நாட்டை நோக்கி குறைஷிகளின் ஒரு (வியாபாரப்) பயணக் குழு புறப்பட்டிருப்பதாகக் கேள்விப்படும் போதெல்லாம் அதை அவர்கள் இடைமறித்து அவர்களைக் கொன்ற அவர்களின் செல்வங்களை (வியாபாரப் பொருட்களை)ப பறித்துக் கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். எனவே, குறைஷிகள் (அபூ பஸீரும் அவரின் சகாக்களும் தங்களுக்குத் தொல்லை தராமல் இருக்க வேண்டுமென்று) இருவருக்கும் ஆளனுப்பி உத்தரவிடும்படி அல்லாஹ்வின் பெயராலும் உறவு முறையின் பெயராலும் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டுத் தூதனுப்பினார்கள். மேலும், 'குறைஷிகளில், முஸ்லிமாக நபி(ஸல்) அவர்களிடம் வருகிறவர் அச்சமின்றி இருக்கலாம் (அவரை எங்களிடம் திருப்பியனுப்பி வேண்டாம்)' என்று கூறிவிட்டனர். அப்போதுதான் அல்லாஹ், 'அவனே மக்காவின் பள்ளத்தாக்கில் அவர்களின் கைகள் உங்களுக்கெதிராக உயர்வதையும் தடுத்துவிட்டான்; அப்போது அவர்களின் மீது உங்களுக்கு வெற்றியையும் கொடுத்தான். மேலும், நீங்கள் செய்து கொண்டிருந்த யாவற்றையும் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருந்தான்...
Volume :3 Book :54

4150. & 4172. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
'நிச்சயமாக, நாம் உங்களுக்கு ஒரு வெளிப்படையான வெற்றியினை அளித்துள்ளோம்' என்னும் (திருக்குர்ஆன் 48:01) வசனம் ஹுதைபிய்யா (சமாதான ஒப்பந்தத்தைக் குறிக்கக் கூடியது) ஆகும்' என்று கூறினேன். (அப்போது) நபி(ஸல்) அவர்களின் தோழர்கள், '(நபியவர்களே,) தங்களுக்கு இனிய வாழ்த்துகள். (தங்கள் பாவங்கள் அனைத்தையும் இறைவன் மன்னித்துவிட்டதாக அந்த வசனத்தின் தொடர்ச்சியில் கூறுகிறானே, அந்த வெற்றியினால்) எங்களுக்கு என்ன (பயன்)?' என்று கேட்டனர். அப்போது, 'இறைவிசுவாசிகளான ஆண்களையும் பெண்களையும் சொர்க்கங்களில் பிரவேசிக்கச் செய்வதற்காகவே (இவ்வாறு நாம் வெற்றியளித்தோம்); அந்த சொர்க்கங்களுக்குக் கீழே நதிகள் ஓடிக் கொண்டிருக்கும்' என்னும் (திருக்குர்ஆன் 48:05) வசனத்தை அல்லாஹ் அருளினான்.
Volume :4 Book :64.

48:1. (நபியே!) நிச்சயமாக நாம் ஒரு தெளிவான வெற்றியாக உமக்கு வெற்றி அளித்துள்ளோம்.
48:5. முஃமினான ஆண்களையும், முஃமினான பெண்களையும் சுவர்க்கங்களில் பிரவேசிக்கச் செய்வதற்காக (இவ்வாறு அருளினான்); அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; அவர்கள் அவற்றில் என்றென்றும் தங்கியிருப்பார்கள்; அவர்களின் பாவங்களையும் அவர்களை விட்டு நீக்கி விடுவான் - இதுவே அல்லாஹ்விடத்தில் மகத்தான வெற்றியாகும்.

ஆச்சா.....

ஹிஜ்ரி  ஆறாம் ஆண்டு உம்ரா வழிபாடு செய்வதற்காக முஹம்மது தனது தோழர்களுடன் மக்காவிற்கு செல்கிறார். அல்லாஹ்விற்கு  பலியிட ஒட்டகங்களையும், அவரது தோழர்கள் 700 பேர் இருந்ததாக அஹ்மத் ஹதீஸும், 1400 பேர் இருந்ததாக புகாரி ஹதீஸூம் கூறுகிறது. நாம் இரண்டு ஹதீஸ்களுக்கும் பொதுவாக 1050 பேர்கள் இருந்ததாக வைத்துக் கொள்வோம். இப்பொழுது உங்கள் மனதில் இப்படியொரு கேள்வி எழலாம், அல்லாஹ்விற்கு பலியிட 1050 மனிதர்களையா முஹம்மது அழைத்துவந்தார்?

ஆமாம்..!  என்றுதான் சொல்லுவேன்!

அல்லாஹ்விற்காக(!) முஹம்மது நிகழ்த்திய போர்களைப்பற்றி சற்று சிந்தித்து பாருங்கள். அல்லாஹ்விற்கு மனித இரத்தவாடையின் மீதிருக்கும் மோகம் என்னவென்பது புரியும்!

ஆனால் முஹம்மது இந்தப் பயணத்தை ஒரு புனிதப் பயணமென்றே கூறிக் கொண்டார். அதாவது ஒருவர் தனது மறுமை வாழ்விற்காக நன்மைகளைச் சேர்க்க இதர வழிபாடுகள் செய்வதப் போன்று உம்ராவும் ஒரு வழிபாடு என்று கூறியதை இங்கு நினைவில் கொள்ளவேண்டும். முஹம்மது தனது மறுமை வாழ்வு சிறக்க வழிபாடு செய்யட்டும் தவறில்லை அது அவரது நம்பிக்கை. ஆனால் அதை 1050பேர் புடைசூழ சென்றுதான் நிறைவேற்ற வேண்டுமா?
சிந்தித்துப் பார்க்கும் மக்களுக்கு இதில் அத்தாட்சிகள் இருக்கிறது!

முஹம்மது, மக்கா குறைஷிகளை ஆழம் பார்ப்பதற்காக, கிராஷ் பின் உமைய்யா அல்குஸாயீயை மக்காவிற்கு ஸஃலப் என்ற ஒட்டகத்தில் ஏற்றி அனுப்பினார்கள். அவர் மக்காவில் நுழைந்ததும் அவரது ஒட்டகத்தைக் குறைஷிகளில் சிலர்  அறுத்து, கிராஷையும் கொலை செய்யவும் முனைந்தனர். அதற்குள் அங்கிருந்த பனூ கினானா கிளையைச் சேர்ந்தவர்கள் கொலை செய்ய முயன்றவர்களைத் தடுத்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்ததுடன், கிராஷ் பின் உமைய்யா அல்குஸாயீயை, முஹம்மதுவிடம் பாதுகாப்பாக திருப்பி அனுப்பினர்.

உடனே முஹம்மது, ஊரறிந்த முரடரான  உமரை மக்காவுக்கு அனுப்புவதற்காக அழைத்தார்கள். அதற்கு உமர், "அல்லாஹ்வின் தூதரே! குறைஷிகள் என்னைத் தாக்கி விடுவார்கள் என்று அஞ்சுகின்றேன். என்னைத் தாக்குவதை விட்டும் தடுத்து எனக்கு உதவுகின்ற பனூ அதீ கிளையார்களில் யாருமே அங்கு இல்லை. நான் குறைஷிகளின் மீது கொண்டிருக்கின்ற விரோதத்தையும் அவர்கள் மீது நான் கொண்டிருக்கும் கடினப் போக்கையும் தாங்கள் அறிந்திருக்கிறீர்கள். என்னை விட குறைஷிகளிடம் மரியாதை மிக்க மனிதரான உஸ்மானை நான் தங்களுக்குக் காட்டுகிறேன்'' என்று சமர்த்தியமாகப் பேசி நழுவிவிட்டார்.

வேறுவழியில்லாமல், முஹம்மது உஸ்மானை அழைத்து, "நாங்கள் போர் செய்வதற்கு வரவில்லை. அல்லாஹ்வின் ஆலயத்தின் கண்ணியத்தை மதித்து அதில் வணங்குவதற்காகத் தான் வருகின்றோம்' என்று குறைஷிகளிடம் தெரிவிக்க வேண்டும் என்று உஸ்மானிடம் சொல்லி அனுப்புகிறார்.

மக்கா சென்ற உஸ்மான், அபூசுஃப்யானையும் குறைஷிகளின் முக்கியத் தலைவர்களையும் சந்தித்து, தான் வந்த நோக்கத்தைத் தெரிவிக்கிறார். அதற்குக் குறைஷிகள், "நீ தவாஃப் செய்ய விரும்பினால் தவாஃப் செய்து கொள்'' என்று உஸ்மானிடம் கூறினார்கள். அதற்கு அவர், "அல்லாஹ்வின் தூதர் தவாஃப் செய்கின்ற வரை நான் தவாஃப் செய்யப் போவதில்லை'' என்று பதிலளிக்கிறார். தொடரும் பேச்சுவார்த்தைகள் உஸ்மான் திரும்பிச் செல்வதற்குக் காலதாமதத்தை ஏற்படுத்துகிறது.

இந்த கால தாமதம் முஹம்மதிடம் வேறு மாதிரியான தகவலாகச் சென்றடைகின்றது. உஸ்மான் கொல்லப்பட்டு விட்டதாக தவறான செய்தி முஹம்மதுவின் கூட்டத்தினரைச் சென்றடைகிறது. இரத்தவாடையை நுகர  ஏதாவது காரணம் கிடைக்காதா என்று காத்திருந்தவர்களுக்கு  இந்தத் தகவல் ஆறுதலை அளித்தது. முஹம்மதுவும் அவரது, தோழர்களும் கடுமையான கோபத்திற்கும் கொந்தளிப்பிற்கும் உள்ளாகின்றார்கள். அவர்கள் தங்களுடைய உயிர்களைப் பணயம் வைத்து போரிடுவதற்கு ஆயத்தமானார்கள். அப்படிப் போராடினால் அது சாதாரணமாக போராட்டமாக இருக்காது, மக்காவினுள்ளே போராடுவதாக இருந்தால் மக்கத்து குறைஷிகளும். இறுதிவரை போராடுவார்கள். இலகுவாக பணிந்துவிட மாட்டார்கள். எனவே, அழிவு இரு புறமும் மிகப் பயங்கரமானதாக இருக்கும். இந்த வகையில் மரணம் உறுதியாகி விட்டாலும்கூட புறமுதுகுக் காட்டி ஓடக்கூடாது என்ற கருத்தில் முஹம்மது தனது அடியாட்கள் அனைவரிடமும் பைஅத்(உறுதி மொழி)செய்கிறார்கள். ஒரு மரத்தடியில் நபி(ஸல்)அவர்கள் உட்கார்ந்து, தம் வலக் கையைச் சுட்டிக் காட்டி, "இது உஸ்மானுடைய கை' என்று சொல்லி அதைத் தம் (இடக்) கையின் மீது தட்டினார்கள். பிறகு, " (இப்போது நான் செய்த) இந்த சத்தியப் பிரமாணம் உஸ்மானுக்காகச் செய்யப்படுவதாகும்' என்று சொன்னார். அதன் பின் ஒவ்வொருவராக அனைவரும் வந்து பைஅத் செய்தனர். இது இஸ்லாமிய வரலாற்றில் "பைஅத்துர் ரிள்வான்"என சொல்லப்படுகிறது.

புஹாரி 4169.
யஸீத் இப்னு அபீ உபைத்(ரஹ்) அறிவித்தார்.
நான், ஸலமா இப்னு அக்வஃ(ரலி) அவர்களிடம், 'ஹுதைபிய்யா தினத்தன்று (நபித் தோழர்களான) நீங்கள் எந்த விஷயத்திற்காக இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் உறுதிமொழியளித்தீர்கள்" என்று கேட்டேன். (அதற்கு) அவர்கள், 'மரணத்தைச் சந்திக்கத் தயாராயிருப்பதாக நாங்கள் உறுதிமொழியளித்தோம்" என்று பதிலளித்தார்கள்..

முஸ்லீம் 3793
சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அவர்களின் அடிமையான யஸீத் பின் அபீஉபைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் சலமா (ரலி) அவர்களிடம், "ஹுதைபியா தினத்தன்று (நபித்தோழர்களான) நீங்கள் எந்த விஷயத்திற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உறுதிமொழியளித்தீர்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "(வீர) மரணத்திற்கு(த் தயாராயிருப்பதாக நாங்கள் உறுதி மொழியளித்தோம்)" என்று பதிலளித்தார்கள்.

உடன்படிக்கையானது தன்னிடம் செய்த உடன்படிக்கையாகும் என்று இரத்தவாடையை நுகர அல்லாஹ்வும் மூக்கைத் தீட்டிக் கொண்டு உற்சாக வசனங்களை இறக்குகிறான்.

குர்ஆன் 48:10
உம்மிடத்தில் உறுதிமொழி எடுத்தோர் அல்லாஹ்விடமே உறுதிமொழி எடுக்கின்றனர். அவர்களின் கைகள் மீது அல்லாஹ்வின் கை உள்ளது. யாரேனும் முறித்தால் அவர் தனக்கெதிராகவே முறிக்கிறார். யார் அல்லாஹ்விடம் எடுத்த உறுதிமொழியை நிறைவேற்றுகிறாரோ அவருக்கு மகத்தான கூலியை அவன் வழங்குவான்.

முஹம்மதுவும் அவரது அல்லாஹ்வும் இரத்தவாடைக்காக காத்திருந்த பொழுது, ஒரு திடுக்கிடும் செய்தி வந்து சேர்கிறது. அதாவது, உஸ்மான் கொல்லப்படவில்லை என்ற சரியான தகவல் அவர்களை வந்தடைகிறது. வேறுவழியில்லாமல் விருந்தை வேறொரு நாளுக்கு வைத்துக் கொள்வோமென்று சமாதான நடவடிக்கைக்கு முஹம்மது செல்கிறார்.

உஸ்மான் கொல்லப்பட்டதாக வந்த செய்தியில் உண்மையில்லை என்பது முஹம்மதுவிற்குத் தெரியாது. காரணம் அவர் ஒரு சாதாரண மனிதர்; தனது மருமகன் உஸ்மான் கொலை செய்யப்பட்டுவிட்டாரே என ஆத்திரம் கொள்வதில் நியாயம் இருக்கிறது.

ஆனால் அல்லாஹ் என்ன செய்திருக்க வேண்டும்?

”அட... அரை லூஸுகளே உஸ்மான் கொல்லப்படவில்லை! உயிருடன்தான் இருக்கிறார். தேவையில்லாமல் துள்ளிக் குதிக்காதீர்கள்” என்றல்லவா அறிவுறுத்தி குர்ஆன் வசனங்களை இறக்கியிருக்க வேண்டும்?

யதார்த்தம்  புரியாமல், உளறிக்கொட்டிய அல்லாஹ்வை, பைத்தியக்காரன் என்று அழைக்காமல் வேறெப்படி அழைக்க முடியும்?

No comments:

Post a Comment

முஹம்மது <= பவிஷ்ய புராணம்

As per  Bhavishya Purana   (Parva 3, Khand 3, Adhya 3, verses 5-6) that "An illiterate   mleccha   [foreigner] teacher will appear, Mah...